வரலாறு

வரலாறு என்றால் என்ன, வரலாற்றின் முக்கியத்துவம், தமிழர் வரலாறு, 2026 வரலாற்று உண்மைகள், தமிழர் நலம் வாழ்வியல், நாகரிக வளர்ச்சி

முருகனின் முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம் | By combining the main points of Muruga, the Om form is formed

முருகனின் முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம்

Category: முருகன்: வரலாறு

தமிழ் கடவுளான முருகனின் 17 முக்கிய திருத்தலங்களை இன்று நாம் கூகிள் மேப் வழியாக ஒன்றிணைத்து ஏரியல் வியூவில் பார்த்தல் அது ஓம் வடிவில் தெரிகிறது.

பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர | Separated couples get together

பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர

Category: அம்மன்: வரலாறு

சென்னை அரக்கோணம் ரயில் பாதையில் செவ்வாய்ப் பேட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள தொழுவூரில் அருளாட்சி புரிந்து வருகிறாள் ஸ்ரீ மாரியம்மன்

பூசணிக்கொடி மாரியம்மன்! | Pusanikodi Mariamman!

பூசணிக்கொடி மாரியம்மன்!

Category: அம்மன்: வரலாறு

புதுச்சேரி மாநிலம், முத்துப்பிள்ளைப் பாளையம் ராதா நகரில் அருள்புரியும் நாகமுத்து மாரியம்மன், பூசணிக்கொடி மாரியம்மன் என்று பக்தர்களால் செல்லமாக அழைக்கப்படும் மாரியம்மன் கோயில்கள் இருக்கின்றன.

காளி வேடம்! | Kali's role!

காளி வேடம்!

Category: அம்மன்: வரலாறு

திருச்செந்தூரை அடுத்துள்ளது குலசேகரன் பட்டணம். முத்தாரம்மன் அருளாட்சி புரியும் இத்தலத்தில் நவராத்திரி விழா மிகவும்' பிரசித்தம்!

கோயில் ஒன்று; காளி இரண்டு! | A temple; Kali two!

கோயில் ஒன்று; காளி இரண்டு!

Category: அம்மன்: வரலாறு

சிதம்பரத்தில் தில்லைக்காளி ஆலயத்தில் மூன்று முகங்களும், நான்கு கரங்களும் கொண்ட பிரம்ம சாமுண்டியாகவும், தில்லைக் காளியாகவும் இரண்டு அம்பிகைகளை நாம் தரிசிக்கலாம்!

நெற்றிக்கண்ணுடன் அம்பிகை! | Ambikai with the forehead!

நெற்றிக்கண்ணுடன் அம்பிகை!

Category: அம்மன்: வரலாறு

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம், தொழுதூரில் உள்ளது மதுராந்தக சோளீசுவரர் ஆலயம். மூலவர் பெரிய திருமேனியுடன் கிழக்கு நோக்கி அருள்கிறார்.

மதுரை மீனாட்சியின் கையில் கிளி ஏன்? | Why parrot in Madurai Meenakshi's hand?

மதுரை மீனாட்சியின் கையில் கிளி ஏன்?

Category: அம்மன்: வரலாறு

ஆய கலைகளின் முழுவடிவாகிய கிளியை ஏந்தியபடி மதுரை மீனாட்சி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருவது சிறப்பு. ஏன் இப்படி கிளியுடன் மீனாட்சி காட்சி தர வேண்டும்?

தங்கத் தாமரை! | Golden lotus!

தங்கத் தாமரை!

Category: அம்மன்: வரலாறு

நீங்கள் எந்தக் குளத்திற்குச் சென்றாலும் தங்கத் தாமரையைப் பார்க்க முடியாது. ஆனால் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றால் நிச்சயம் தங்கத் தாமரையைக் காணலாம்!

கருவறை திறக்காத கோயில்! | Sanctum sanctorum open temple!

கருவறை திறக்காத கோயில்!

Category: அம்மன்: வரலாறு

தேனிமாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டியில் புகழ்மிக்க மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

எலுமிச்சை மாலை! | Lemon garland!

எலுமிச்சை மாலை!

Category: அம்மன்: வரலாறு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ளது வீரமாகாளி அம்மன் கோவில்.

தெய்வீகப் போட்டி! | Divine competition!

தெய்வீகப் போட்டி!

Category: அம்மன்: வரலாறு

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் கோவில்.

தாலியை உண்டியலில் போட்டு... | Put the thali in the piggy bank...

தாலியை உண்டியலில் போட்டு...

Category: அம்மன்: வரலாறு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் தேக்கம்பட்டி செல்லும் சாலையில் ஸ்ரீ வன பத்ரகாளியம்மனின் திருக்கோயில் அமைந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம்: வெட்டுடையார் காளி கோவில்! | Sivagangai District: Vetudaiyar Kali Temple!

சிவகங்கை மாவட்டம்: வெட்டுடையார் காளி கோவில்!

Category: அம்மன்: வரலாறு

சிவகங்கை மாவட்டத்தில் மிகப் பிரசித்திப் பெற்ற ஆலயம். வெட்டுடையார் காளி கோயில்! இந்தக் காளீஸ்வரி மிகுந்த சக்தி படைத்தவள்.

பஞ்சமுக காளி! | Panchamukha Kali!

பஞ்சமுக காளி!

Category: அம்மன்: வரலாறு

ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலிருந்து பவானி செல்லும் சாலையில் ஐந்து கி.மீ தொலைவில் இருக்கிறது வாவிக்கடை. இங்கே தான் பஞ்சமுக காளி கோயில் இருக்கிறது.

பவானி என்றாலே... | Bhavani...

பவானி என்றாலே...

Category: அம்மன்: வரலாறு

கம்சனை அழிக்க கிருஷ்ணர் பிறக்கப் போகிறார் என்பதை கம்சனுக்கு உணர்த்திய மகா மாயையே, பெரிய பாளையத்தில் பவானியாய் அருள்கிறாள்.

சக்தி தரும் கருமாரி அம்மன்! | Goddess Karumari gives power!

சக்தி தரும் கருமாரி அம்மன்!

Category: அம்மன்: வரலாறு

சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து, காந்தி நிலை நோக்கி உள்ள செந்தூர் நகரில், பன்னீர் செல்வம் தெருவில் அமைந்திருக்கிறது சக்தி தரும் கருமாரி அம்மன் ஆலயம்.

அம்பாள் அனுக்கிரகம் பெற... | Ambal to get grace...

அம்பாள் அனுக்கிரகம் பெற...

Category: அம்மன்: வரலாறு

அம்பாளை உபாசிப்பதே ஜன்மா எடுத்ததன் பெரிய பலன். அன்புமயமான அம்பிகையைத் தியானிப்பதை விடப் பேரானந்தம் எதுவும் இல்லை.

'ஸ்ரீ' என்கிற மஹாலட்சுமி துதி! | Praise for 'Sri' Mahalakshmi!

'ஸ்ரீ' என்கிற மஹாலட்சுமி துதி!

Category: அம்மன்: வரலாறு

இந்தத் துதி சகலவிதமான நற்பேறுகளையும், பாக்யங்களையும், எல்லாவிதமான இன்பங்களையும் தரவல்லது

வித்தியாசமான படையல்! | A different army!

வித்தியாசமான படையல்!

Category: அம்மன்: வரலாறு

அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபடுவது தெரிந்த விஷயம். ஆனால், 17ஆம் நூற்றாண்டில் நேபாளத்தில் துர்க்கைக்கு நாக்கையறுத்துப் படையல் செய்யும் பழக்கம் இருந்தது.

மதுரை மீனாட்சி! | Madurai Meenakshi!

மதுரை மீனாட்சி!

Category: அம்மன்: வரலாறு

மதுரை மீனாட்சி அம்மனின் சிலை, சுத்த மரகதக் கல்லால் ஆனது.

வித்தியாச துர்க்கை! | Difference Turki!

வித்தியாச துர்க்கை!

Category: அம்மன்: வரலாறு

வழக்கமாக துர்க்கையம்மன், சிவன் சன்னிதி சுற்றுச்சுவரில் வடக்கு திசை நோக்கித்தான் இருப்பாள்.

நாமக்கல் மாவட்டம்: இலங்கை அம்மன் கோயில்! | Namakkal District: Sri Lanka Amman Temple!

நாமக்கல் மாவட்டம்: இலங்கை அம்மன் கோயில்!

Category: அம்மன்: வரலாறு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது கூனவேலம் பட்டி புதூர். இந்தப் பகுதியில் நெசவாளர்களும், விவசாயிகளும் அதிகம் வசிக்கிறார்கள்.

உலக்கை சத்தம் பிடிக்காத அம்மன்! | Amman who does not like the sound of the plunger!

உலக்கை சத்தம் பிடிக்காத அம்மன்!

Category: அம்மன்: வரலாறு

ராமநாதபுரத்திலிருந்து தெற்கே திருப்புல்லாணி செல்லும் வழியில் தாதனேந்தல் கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்து உள்ளது புல்லாணி அம்மன் கோவில்!.

ஆலங்காட்டுக் காளி கோயில்! | Alangatuk Kali Temple!

ஆலங்காட்டுக் காளி கோயில்!

Category: அம்மன்: வரலாறு

இறைவனோடு தர்க்கம் செய்ததால் இவ்வன்னைக்குக் 'தர்க்கமாதா' என்று பெயரானது.

குறை தீர்க்கும் படவேட்டம்மன்! | Grievance solving padavettamman!

குறை தீர்க்கும் படவேட்டம்மன்!

Category: அம்மன்: வரலாறு

சென்னை -ஆலந்தூரில், பரங்கி மலை ரயில்வே ஸ்டேஷன் செல்லும் பாதையில் அமைந்திருக்கிறது படவேட்டம்மன் திருக்கோயில்.

கூத்தனூர்: சரஸ்வதி கோயில்! | Kuthanur: Saraswati Temple!

கூத்தனூர்: சரஸ்வதி கோயில்!

Category: அம்மன்: வரலாறு

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 23 கிலோ மீட்டர் தூரத்தில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது.

அதிசயம் நிகழ்த்தும் ரேணுகாம்பாள் கோயில்! | The miraculous Renukampal Temple!

அதிசயம் நிகழ்த்தும் ரேணுகாம்பாள் கோயில்!

Category: அம்மன்: வரலாறு

சென்னையிலிருந்து 150 கி.மீட்டர், திருவண்ணாமலையிலிருந்து 57 கி.மீட்டர், வேலூரிலிருந்து 38 கி.மீட்டர், ஆரணியிலிருந்து 23 கி.மீட்டர் தொலைவிலுள்ளது அன்னை ஸ்ரீ ரேணுகாம்பாள் அருட்கோயில்!.

சென்னை ரத்ன மங்கலம்: அரைக்காசு அம்மன் ஆலயம்! | Chennai Ratna Mangalam: Arikasu Amman Temple!

சென்னை ரத்ன மங்கலம்: அரைக்காசு அம்மன் ஆலயம்!

Category: அம்மன்: வரலாறு

வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் கேளம்பாக்கம் செல்லும் வழியில், தாகூர் இன்ஜினியரிங் கல்லூரியின் பக்கத்தில் செல்லும் பாதையில் அரை கி.மீ. தூரத்தில் ரத்ன மங்கலத்தில் இவ்வாலயம் அமைந்திருக்கிறது.

ஆனந்தம் தரும் அம்மன் தரிசனம் | Blissful Goddess Darshan

ஆனந்தம் தரும் அம்மன் தரிசனம்

Category: அம்மன்: வரலாறு

அம்மனை வேண்டி பக்தர்கள் விரதம் இருப்பதுதான் நடைமுறை.

மண்டைக்காடு: பகவதி அம்மன் கோயில்! | Skull Forest: Bhagwati Amman Temple!

மண்டைக்காடு: பகவதி அம்மன் கோயில்!

Category: அம்மன்: வரலாறு

மண்டைக்காடு, தமிழ்நாட்டில் இருந்தாலும் கேரளப் பெண்களே அதிக அளவில் இருமுடி தாங்கி வருவது சிறப்பு மிக்கது!

திருமாந்துறை அரசி! | Queen of Tirumantura!

திருமாந்துறை அரசி!

Category: அம்மன்: வரலாறு

கும்பகோணம்-மயிலாடுதுறை பாதையில் ஆடுதுறையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் திருமாந்துறை திருத்தலம் அமைந்துள்ளது.

விநாயகர் முழு முதல் கடவுளாக வழிபடக் காரணம் என்ன? | Why is Ganesha worshiped as the first god?

விநாயகர் முழு முதல் கடவுளாக வழிபடக் காரணம் என்ன?

Category: விநாயகர்: வரலாறு

பிள்ளையார் அல்லது விநாயகர், கணபதி, கணேஷா. இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதல் முதன்மைக் கடவுள் கணபதி. விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாகக் காணப்படுகிறது.

உங்கள் சேமிப்பு வீண் விரயமாகாமல் இருக்க வேண்டுமா? | Don't want your savings to go to waste?

உங்கள் சேமிப்பு வீண் விரயமாகாமல் இருக்க வேண்டுமா?

Category: விநாயகர்: வரலாறு

நமக்கு வரக்கூடிய வருமானத்தை மிச்சப்படுத்தி சேமித்து வைப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம். அப்படி வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி பணத்தை மிச்சப் பிடித்து வைத்தால், அந்த பணமானது தேவையற்ற வீண்விரையங்களுக்கு செலவாகும்.

ஒரே கல்லில் 108  ஆஞ்சநேயர்  சிற்பங்கள் | 108 Anjaneya sculptures in one stone

ஒரே கல்லில் 108 ஆஞ்சநேயர் சிற்பங்கள்

Category: ஆஞ்சநேயர்: வரலாறு

ஒரே கல்லில் 108 ஆஞ்சநேயர் சிற்பங்கள் பொறித்த தூணினை ஒரு முறை வலம் வலம் வந்தால் போதும் 108 திவ்ய தேசம் சென்று திரும்பிய பலன் பக்தர்களுக்கு கிட்டும். ... பற்றி விளக்கும் எளிய கதை

ஆஞ்சநேயர் பற்றிய பதிவுகள் | Posts about Anjaneya

ஆஞ்சநேயர் பற்றிய பதிவுகள்

Category: ஆஞ்சநேயர்: வரலாறு

ஆஞ்சநேயர் எட்டு விதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் எனப்படுகிறார்.

மீனாட்சியம்மன் சிறப்பு | Meenakshiyamman special

மீனாட்சியம்மன் சிறப்பு

Category: அம்மன்: வரலாறு

ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருவடிகளே போற்றி

ஏன் தாமரை மலரில் மகாலட்சுமி காட்சி தருகிறார்? | Why does Mahalakshmi appear in a lotus flower?

ஏன் தாமரை மலரில் மகாலட்சுமி காட்சி தருகிறார்?

Category: அம்மன்: வரலாறு

ஸ்ரீ மகாலட்சுமிக்கும் தாமரைக்கும் நெருக்கமான பிணைப்பு உண்டு – ஏன்? - இதோ விளக்கம்

பத்து தேவியர் | Ten goddesses

பத்து தேவியர்

Category: அம்மன்: வரலாறு

அம்பாளின் பத்து விரல்களில் இருந்து அவதாரம் செய்த பத்து தேவியரும் பகவான் ஸ்ரீ மன் நாராயணனின் பராக்ரமத்தை குறிக்கும் பத்து அம்சங்களாகும்.

முப்பாட்ட கடவுள் முருகா என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? | Do you know what the triple god Muruga means?

முப்பாட்ட கடவுள் முருகா என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

Category: முருகன்: வரலாறு

தாயினும் மிக்க தயவுடைய முருகப்பெருமான் திருவடியை வணங்கி வணங்கி ஆசிபெற்று முருகனது அருளை பெற வேண்டுமாயின் கடைபிடிக்க வேண்டியவை.

கண்மலர் சாத்தினால் கண்பார்வை அருளும் சமயபுரம் மாரி, திருச்சி | Samayapuram Mari, Trichy, which grants eyesight with Kanmalar Sat

கண்மலர் சாத்தினால் கண்பார்வை அருளும் சமயபுரம் மாரி, திருச்சி

Category: அம்மன்: வரலாறு

திருச்சி மாவட்டத்தில் சமயபுரத்தில் வீற்றிருக்கிறாள் மாரியம்மன். ஆதியில் இந்தப் பகுதி கண்ணனூர் அரண்மனை மேடு என்றழைக்கப்பட்டது. முதலில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் தான் அம்மனின் திருவுரு இருந்தது. அது உக்கிரம் மிகுந்ததாக இருந்ததால் அங்கிருந்து சமயபுரத்திற்கு இடம் பெயர்ந்தது. அச்சிலையை எடுத்து வந்தபோது இனாம் சமயபுரம் என்ற இடத்தில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தார்கள். சமயபுர கோயில் திருவிழாவின் எட்டாம் நாள் வைபவத்தில் இன்றும் அம்மன் இனாம் சமயபுரம் சென்று ஓய்வெடுக்கிறாள்.

காலையில் எழுந்தவுடன் உங்கள் கண் முன்னே தெரிய வேண்டிய படம் எது தெரியுமா? | You know what picture you want to see when you wake up in the morning?

காலையில் எழுந்தவுடன் உங்கள் கண் முன்னே தெரிய வேண்டிய படம் எது தெரியுமா?

Category: குலதெய்வம்: வரலாறு

உங்களை காப்பாற்ற ஆயிரம் தெய்வங்கள் இருக்கலாம். உங்களுக்கு பிடித்த தெய்வங்கள் பட்டியல் ஏராளமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் மறக்கக்கூடாத ஒரு தெய்வம் குலதெய்வம்.

விநாயகர் அகவல்  | Vinayaka Agaval

விநாயகர் அகவல்

Category: விநாயகர்: வரலாறு

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி விளக்கம்: ஒன்பது வாயில் – (இரண்டு கண்கள், இரண்டு காதுகள், நாசியின் இரு துளைகள், வாய், எருவாய், கருவாய் – என்ற ஒன்பது உறுப்புகளின் தன்மைகளையும்

முன்னோர்கள் குலதெய்வத்தை எப்படி கண்டறிந்தார்கள் தெரியுமா? | Do you know how the ancestors found the heirloom?

முன்னோர்கள் குலதெய்வத்தை எப்படி கண்டறிந்தார்கள் தெரியுமா?

Category: குலதெய்வம்: வரலாறு

நாகரிக வளர்ச்சியாலும் முன்னோர்கள் கற்பிக்க மறந்ததாலும் சிலருக்கு அவர்களின் குலதெய்வம் யார் என்று தெரியாமலே போகிறது.

மீனாட்சியம்மன் சிறப்பு | Meenakshiyamman special

மீனாட்சியம்மன் சிறப்பு

Category: அம்மன்: வரலாறு

"சக்தியில்லையேல் சிவமில்லை", என சிவனே உணர்ந்திருந்த போதும்,சக்தி தலங்களாய் விளங்கும் ஊர்களில் சிவனின் ஆட்சியே நடக்கும்.ஆனால்,மதுரையில் அன்னையின் கையே ஓங்கி இருக்கும்.

முருக பெருமானின் 60 சுவாரசிய தகவல்கள் | 60 interesting facts about Lord Muruga

முருக பெருமானின் 60 சுவாரசிய தகவல்கள்

Category: முருகன்: வரலாறு

முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

ஐம்பெரும் சக்திகள் அடங்கிய விநாயகர் | Lord Ganesha with five great powers

ஐம்பெரும் சக்திகள் அடங்கிய விநாயகர்

Category: விநாயகர்: வரலாறு

நிலம் (பூமி) & விநாயகரின் மடித்து வைத்துள்ள ஒரு பாதம், பூமியைக் குறிப்பதாகும். நீர் & சரிந்த அவரின் தொந்தி, நீரைக் குறிக்கும். பஞ்சபூதங்களின் மொத்த உருவம்தான் விநாயகப் பெருமான்.

அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாத்துவது ஏன்? | Why is Hanuman covered with butter?

அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாத்துவது ஏன்?

Category: ஆஞ்சநேயர்: வரலாறு

அனுமனை கண்டால், காற்றில் கலக்கும் தூசுகள்போல துர்சக்திகள் பறந்து ஓடும் என்கிறது ராமாயணத்தில் ஒரு பகுதியான சுந்தரகாண்டம்.

குறுக்குத்துறை முருகன் கோயில்... | Krasantara Murugan Temple...

குறுக்குத்துறை முருகன் கோயில்...

Category: முருகன்: வரலாறு

முன்னூறு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் கோயில் பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.

பணவரவு உண்டாக்கும் ஸ்ரீ பாலா திரிபுர தேவி மந்திரம் | Sri Bala Tripura Devi Mantra to generate income

பணவரவு உண்டாக்கும் ஸ்ரீ பாலா திரிபுர தேவி மந்திரம்

Category: அம்மன்: வரலாறு

ஓம் ஐம் க்லீம் சௌம் ஸ்ரீம் ஸ்ரீ பாலா மாத்ரே சர்வ தனம் மம வசம் ஆகர்ஷனாய ஆகர்ஷனாய குரு குரு ஸ்வாஹா

காசி அன்னபூரணி அம்பாள் | Kashi Annapoorani Ambal

காசி அன்னபூரணி அம்பாள்

Category: அம்மன்: வரலாறு

காசி அன்னபூரணி என்ன அழகு! அம்பாள் தங்க நிற ஆடையில் தங்க கிரீடத்தில் ஜொலிக்கிறாள். அப்படியே மெய்மறந்து போகும்.

வைகாசி விசாகத்தை பற்றிய அரிய, அறிய செய்திகள்: | Rare and interesting news about Vaikasi Visakham

வைகாசி விசாகத்தை பற்றிய அரிய, அறிய செய்திகள்:

Category: முருகன்: வரலாறு

தமிழ் கடவுள் முருகனின்..... வைகாசி விசாகத்தை பற்றிய 25 சுவையான செய்திகள்......

கடன் மற்றும் கஷ்டம் தீர்க்கும் ஹேரம்ப கணபதி வழிபாடு | Heramba Ganesha Puja for Solving Debt and Trouble

கடன் மற்றும் கஷ்டம் தீர்க்கும் ஹேரம்ப கணபதி வழிபாடு

Category: விநாயகர்: வரலாறு

உலகில் பிறந்த பலருக்கும் பலவிதமான சங்கடங்கள்-துன்பங்கள்-தோன்றுவது இயற்கை. இந்தச் சங்கடங்களிலிருந்து விடுபடுவது எப்படி என்று புரியாமல் பலர் குழம்புகின்றனர். குடும்பத்தில் ஏற்படும் தர்ம சங்கடத்தைத் தீர்க்க அவசரமாகக் கடன் வாங்குவர். பணம் வந்ததும், திரும்பத் தந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் வட்டிக்கு வாங்குவார்கள்.

கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயன்கள் | Benefits of Saying Gandar Shashti Kavas

கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயன்கள்

Category: முருகன்: வரலாறு

கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம். உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்...

 முருகனுக்கு உகந்த மூன்று விரதங்கள் என்னென்ன | What are the three fasts suitable for Murugan?

முருகனுக்கு உகந்த மூன்று விரதங்கள் என்னென்ன

Category: முருகன்: வரலாறு

இந்து கடவுளில் அதிகமானவரால் விரும்பப்படும் தெய்வம் முருகப்பெருமான் ஆவார். முருகப்பெருமானுக்கு என மூன்று விரதங்கள் முக்கியமாக கடைபிடிக்கப்படுகின்றது. அவை வார விரதம், நட்சத்திர விரதம் மற்றும் திதி விரதம் என்பதாகும்.

அனுமனின் வாலில் மணி எப்படி  வந்தது தெரியுமா | Do you know how the bell got on Hanuman's tail?

அனுமனின் வாலில் மணி எப்படி வந்தது தெரியுமா

Category: ஆஞ்சநேயர்: வரலாறு

நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம் அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு கதை. படியுங்கள்.

ஆண்டிகள் மடம் கட்டிய கதை தான் திருச்செந்தூர் தெரியுமா? | Do you know the story of the Andes building a monastery in Tiruchendur?

ஆண்டிகள் மடம் கட்டிய கதை தான் திருச்செந்தூர் தெரியுமா?

Category: முருகன்: வரலாறு

ஆண்டிகள் மடம் கட்டிய கதை என்று கூறுவார்கள் ஆனால் உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்

அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோயில் | The auspicious Etutkudi Murugan temple

அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோயில்

Category: முருகன்: வரலாறு

திருக்குவளை அருகே உள்ளது எட்டுக்குடி முருகன் கோவில். அறுபடை வீடு முருகன் கோவில்கள் தவிர புகழ் பெற்ற முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஒன்று. இது மிக பழமையான கோவில்களில் ஒன்று. அருணகிரிநாதர் இந்த கோவில் குறித்து பாடல்கள் இயற்றியுள்ளார்.

வினைகளை தீர்க்கும் விநாயகர் ஏன் சொல்கிறோம் தெரியுமா?..!! | Do you know why we say Ganesha solves verbs?!!

வினைகளை தீர்க்கும் விநாயகர் ஏன் சொல்கிறோம் தெரியுமா?..!!

Category: விநாயகர்: வரலாறு

வீட்டில் நடைபெறும் அனைத்து சுப காரியங்களிலும் விநாயகரை வேண்டி பிரார்த்தனை செய்துகொள்வதும் பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதும் வழக்கமாக கையாளுகிறோம்.

குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் எந்தக் கடவுளை வணங்கலாம்? | Which god can be worshiped by people who don't know what is kulatheivam?

குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் எந்தக் கடவுளை வணங்கலாம்?

Category: குலதெய்வம்: வரலாறு

குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை வணங்கலாம். பொதுவாக ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்று கூறுவர். ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றுள்ளதும், இந்த கோயிலுக்கு தனிச் சிறப்பை அளிக்கிறது.

விநாயகர் பெருமைகள் தெரியுமா? | Do you know the glory of Ganesha?

விநாயகர் பெருமைகள் தெரியுமா?

Category: விநாயகர்: வரலாறு

மனிதன் காமம், குரோதம், லோபம், மதம், மாத்ஸர்யம், மமதை, மோகம், அகந்தை ஆகிய எட்டு குணங்களால் தனது சிறப்பை இழக்கிறான் என்பார்கள் பெரியோர்கள். பிள்ளையார் எட்டு ரூபங்களை எடுத்து அவற்றை அகற்றுகிறார் என்கின்றன புராணங்கள்.

நற்செய்தி சிந்தனை

Category: இயேசு கிறிஸ்து: வரலாறு

நண்பர்கள் இருவர் நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றனர். அங்கே சென்றதும், தங்கள் கண்முன்பாக ஆர்ப்பரித்து ஓடிய அந்த நீர்வீழ்ச்சியை அதன் ஓரத்திலிருந்து பார்த்து, மெய்ம்மறந்து போனார்கள். தொடர்ந்து அவர்கள் நீர்வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவர்களை அறியாமல் உள்ளே விழுந்தார்கள்.

ஸ்ரீ ராமஜெயம் | Sri Rama Jayam

ஸ்ரீ ராமஜெயம்

Category: ஆஞ்சநேயர்: வரலாறு

உயர்வு தருவான் நாமக்கல் வாயு மைந்தன்! வாயு மைந்தன், சிந்தையில் பெரியோன், சமயோசித புத்தியில் இமயம், நவ வ்யாகரண பண்டிதன், நித்ய சிரஞ்சீவி என்றெல்லாம் அயோத்தி அரசன், ராமச்சந்திர மூர்த்தியால் புகழப்பட்டவர், அனுமன்.

விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபடுவது ஏன் | Why worship Lord Ganesha with Arukumbul

விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபடுவது ஏன்

Category: விநாயகர்: வரலாறு

நாம் பல தெய்வங்களுக்கு பல்வேறு நறுமணம் வீசும் மாலைகளால் மாலை சூட்டி வழிபடுகின்றோம். ஆனால் விநாயகருக்கு அருகம்புல் மாலையே மிகவும் பிடித்தது. விநாயகர் பூஜை செய்வதற்கு அன்னம், மோதகம், அவல், பழங்கள் இல்லாது போனாலும் அருகம்புல்லும், தண்ணீரும் இருந்தால் போதும் என்பார்கள். பூத கணங்களின் அதிபதியாக திகழ்பவர்தான் விநாயகர். முழுமுதற் கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே.

ஆதி விநாயகர் மனித முக விநாயகர் | Adi Ganesha is the human-faced Ganesha

ஆதி விநாயகர் மனித முக விநாயகர்

Category: விநாயகர்: வரலாறு

யானை முகம் இன்றி மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர் கோயில் சிறப்புகள். திருவாரூர் மாவட்டம், கூத்தனூர் அருகே சிதிலபதியில் உள்ளது முக்தீஸ்வரர் ஆலயம். இங்கு மனிதம் முகத்துடன் "ஆதி விநாயகர்" என்ற பெயரில் தனிச் சன்னதி யில் காட்சியளிக்கிறார். இத்தலத்தில் ஓடும் அரசலாறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. இது போன்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாயும் நதி, ஆறுகள் அருகே அமைந்துள்ள கோயிகள் பரிகாரத்துக்கும் வழிபாட்டுக் கும் மிகச் சிறந்தவை.

உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட வேண்டுமா? இதை செய்யுங்கள்... | Want a positive turn in your life? Do this…

உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட வேண்டுமா? இதை செய்யுங்கள்...

Category: முருகன்: வரலாறு

அப்படியென்றால் நீங்கள் அவசியம் திருசெந்தூர் ஆலயத்தில் தினமும் அதி காலையில் நடைபெறும் கொடிமர பூசையில் கலந்து கொள்ள வேண்டும்.

சஷ்டி விரதத்தை கடைப்பிடிப்பதால் உண்டாகும் பலன்கள் | Benefits of observing Shashti Vrat

சஷ்டி விரதத்தை கடைப்பிடிப்பதால் உண்டாகும் பலன்கள்

Category: முருகன்: வரலாறு

அமாவாசையை அடுத்துவரும் சஷ்டியை வளர்பிறை சஷ்டி என்றும், பௌர்ணமியை அடுத்தவரும் சஷ்டி தேய்பிறை சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது. நதிகளில் புனிதமானது கங்கை. மலர்களில் சிறந்தது தாமரை. விரதங்களில் சிறப்புமிக்கது கந்தசஷ்டி விரதம் ஆகும். முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். சஷ்டி விரதத்திற்கு அத்தகைய வலிமை உண்டு. சஷ்டி விரதம் என்பது மிகப்பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வரியத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6-ம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார்.

நாகப்பட்டினம் காயாரோகணர் கோவில் இரட்டை நோக்கு நந்தி | Nagapattinam Gayaroganar Temple is a double oriented Nandi

நாகப்பட்டினம் காயாரோகணர் கோவில் இரட்டை நோக்கு நந்தி

Category: அம்மன்: வரலாறு

இத்தல அம்பாள் நீலாயதாட்சியின் கண்கள் கருநீலத்தில் அழகானது. நான்கு திருக்கரங்களுடன் நின்றத் திருக்கோலத்தில் அம்பாள் காட்சி தருகிறார். 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும். சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமளா சாஸ்திரிகள், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோரின் கீர்த்தனைகளால் அலங்கரிக்கப்பட்டவள் இந்த அன்னை. இங்குள்ள நீலாயதாட்சி அம்மன், கன்னியாகுமரி பகவதி அம்மனைப் போலவே கன்னியாக காட்சித் தருகிறாள். இங்கு ஆடிப்பூர விழா சிறப்பானதாகும். ஆடிப்பூர விழாவில் கண்ணாடித் தேரில் அம்மன் வீதி உலா வருவாள். அம்பாள் சன்னிதி, தேர் போல அமைக்கப்பட்டுள்ளது. அம்பாள் இங்கு கன்னியாக இருப்பதால், ஈசன் நந்தியை அவளுக்குப் பாதுகாப்பாக அனுப்பினார். ஆனால் நந்தி, ‘தான் அனுதினமும் ஈசனையும் தரிசிக்க வேண்டும்’ எனக் கேட்டார்.

வைகாசி மாதத்தில் என்னென்ன விஷேச நாட்கள் வருகிறது தெரியுமா...? | Do you know what special days occur in the month of Vaikasi...?

வைகாசி மாதத்தில் என்னென்ன விஷேச நாட்கள் வருகிறது தெரியுமா...?

Category: முருகன்: வரலாறு

வருடத்தை ஆறு காலங்களாக வகுத்த நம் முன்னோர்கள் சித்திரை, வைகாசி இரண்டு மாதங்களையும் இளவேனில் காலமாகப் பிரித்தனர். வைகாசி என்பதை விகாஸம் என்றும் கூறுவதுண்டு. விகாஸம் என்றால் மலர்ச்சி என்றும் பொருள். வைகாசியே வடமொழியில் வைஸாகம். வைணவர்கள் இம்மாதத்தை மாதவ மாதம் என்றழைப்பார்கள்.

தங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய  வழிபட வேண்டிய சில குறிப்பிட்ட தெய்வங்கள் | There are certain deities to be worshiped for success in their business

தங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய வழிபட வேண்டிய சில குறிப்பிட்ட தெய்வங்கள்

Category: அம்மன்: வரலாறு

வியாபாரம் என்பது செல்வ விருத்தி என்னும் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதால் தன விருத்திக்கு சக்தி வழிபாடே அதாவது பெண் தேவதைகள்/ தெய்வங்களின் வழிபாடே உகந்ததாகும். அதிலும் குறிப்பாக துணி வியாபாரம் செய்பவர்களும், தறி உரிமையாளர்களும் ஐஸ்வர்ய லட்சுமியை உபாசனை செய்வது நலம். துணி நெய்யும் நூல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களும், கைத்தறி ஜவுளி தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களும் பேச்சியம்மன் என்னும் பத்தினி தெய்வத்தை வழிபடுதல் நலம். பேச்சியம்மன் என்பது வெறும் காவல் தெய்வம், எல்லை தெய்வம் என்னும் எண்ணத்தை விடுத்து பராசக்தியின் வாக்தத்துவமாக விளங்கும் தெய்வமே பேச்சியம்மன் என்பதை உணர்ந்தால்தான் வழிபாட்டின் பலன் பூர்ணத்துவம் பெறும்.

ஒவ்வொரு மரத்தின் அடியிலும் அமந்திருக்கும் பிள்ளையார் வழங்கும் பலன்கள் தெரியுமா? | Do you know the benefits of the seeds under every tree?

ஒவ்வொரு மரத்தின் அடியிலும் அமந்திருக்கும் பிள்ளையார் வழங்கும் பலன்கள் தெரியுமா?

Category: விநாயகர்: வரலாறு

உங்களுக்கு என்ன வேண்டுமோ அதற்கேற்றாற்போல் பிள்ளையாரை குறிப்பிட்ட மரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்தும் பலன் பெறலாம்

முருகனுக்கும் வேலுக்கும் உள்ள சிறப்பு பற்றிய பதிவு | An account of the specialness of Murugan and Vel

முருகனுக்கும் வேலுக்கும் உள்ள சிறப்பு பற்றிய பதிவு

Category: முருகன்: வரலாறு

நாம் வணங்கும் தெய்வங்கள் பெரும்பாலானவை ஆயுதம் ஏந்திய தெய்வங்களே. அந்த வரிசையில் காவல் தெய்வங்கள், பார்வதி, சிவபெருமான் மற்றும் முருகன் ஆகிய தெய்வங்களை குறிப்பிட்டு சொல்லலாம். முருகன் என்றாலே நம் நினைவிற்கு வருவது மயிலும், வேலும் தான். புராணங்களின் படி அதிக முக்கியத்துவம் வாய்ந்த மிக முக்கியமான ஆயுதமாக முருகனின் வேல் கருதப்படுகிறது. வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை" என்பதே தொன்று தொட்டு சொல்லும் கூற்று. முருகனுக்கு இந்த வேலினால் வேல்முருகன் என்ற பெயரும் உண்டு. சூரபத்மன் எனும் அரக்கனை அழிக்க தேவி பார்வதி தன்னுடைய சக்திகள் அனைத்தையும் திரட்டி வேலை வடிவமைத்து, அதனை கொண்டு சூரனை வதைக்க சொன்னதாக புராணங்கள் கூறுகின்றன. அதாவது வேல் என்பதே சக்தியின் அம்சம். அதனாலேயே வேலிற்கு சக்தி வேல் என்ற பெயரும் உண்டு.

ஒவ்வொரு ராசிக்கேற்ற விநாயகர் வழிபாடு பற்றிய பதிவுகள்  | Posts about Ganesha worship for each zodiac sign

ஒவ்வொரு ராசிக்கேற்ற விநாயகர் வழிபாடு பற்றிய பதிவுகள்

Category: விநாயகர்: வரலாறு

முழுமுதற் கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிக்கிறோம். ஏனெனில், எந்த ஒரு செயலையும் விநாயகரை வழிபட்டு தொடங்கினால் தடையின்றி முடியும் என்பது நம்பிக்கையாகும். எந்த ராசிக்காரர்கள் எந்த பொருளால் விநாயகருக்கு அபிஷேகம் செய்தால் நன்மைகள் உண்டாகும் என்பதைப் பற்றிப் பார்ப்போம். மேஷ ராசிக்காரர்கள் விநாயகருக்கு மஞ்சள் பொடியால் அபிஷேகம் செய்து வழிபட்டால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும். ரிஷப ராசிக்காரர்கள் விநாயகருக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட சிறப்பான வாழ்க்கை அமையும்.

முருகனுக்கு விளக்குகள் ஏற்றி வழிபட்டால் அளவற்ற பலன்கள் கிடைக்கும்...... பார்ப்போமா | Worshiping Murugan by lighting lamps will yield immeasurable benefits Let's see

முருகனுக்கு விளக்குகள் ஏற்றி வழிபட்டால் அளவற்ற பலன்கள் கிடைக்கும்...... பார்ப்போமா

Category: முருகன்: வரலாறு

சட்டியில் இருந்தால் தான், அகப்பையில் வரும்’ என்று ஒரு பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையில் இது அப்படி அல்ல! ‘சஷ்டியில் இருந்தால் தான், அகப்பையில் வரும்’ என்பது தான் சரியான உச்சரிப்பு ஆகும். அதாவது சஷ்டி திதியில் விரதம் இருப்பவர்களுக்கு கருப்பை நிறையும், குழந்தை பேறு உண்டாகும் என்பது நியதி! இப்படி குழந்தை பாக்கியத்தையும், சொந்த வீடு அமையும் யோகத்தையும் கொடுக்கும் முருகப் பெருமானுக்கு 6 விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம். அறுபடை வீடு கொண்ட முருகனுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் ஆறுமுகனின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. முருகனுக்கு செய்யப்படும் எந்த ஒரு விஷயத்தையும் ஆறாக செய்வது, நம் வேண்டுதல்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒரு வழிமுறையாகும். கார்த்திகை மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய மகா சஷ்டி விரத நாளில் 6 நாட்கள் தொடர்ந்து விரதத்தை கடைபிடிப்பது வழக்கம். இந்நாட்களில் முருகனின் மந்திரங்களை உச்சரித்து, முருகனை நினைத்து உண்ணாமல் நோன்பு இருந்து குழந்தைக்காக பெண்கள் விரதமிருந்து வழிபடுவது வழக்கம். சஷ்டி நாட்களில் மட்டும் அல்லாமல், பொதுவாக செவ்வாய்க் கிழமைகளில் முருகனுக்கு விரதமிருந்து முருகனுடைய திருவிளையாடல்களை படித்து, திருப்புகழ் பாடி, கவசம் பாராயணம் செய்பவர்களுக்கு, முறையாக விரதம் இருப்பவர்களுக்கு அள்ள அள்ள குறையாத செல்வங்களை வாரி வழங்குகிறார். குறிப்பாக குழந்தைப் பேறு உண்டாக வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமையில் முருகன் படத்தை வைத்து அவருக்கு ஆறு விதமான நைவேத்தியங்கள் படைத்து, 6 புதிய அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி, மனதார முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் வேண்டிய வரம் வேண்டியபடி கிடைக்கும். சொந்த வீடு கட்ட வேண்டும் என்கிற ஆசை உடையவர்களுக்கு செவ்வாய் பகவானுடைய அருள் தேவை. செவ்வாய் காரகத்துவம் பெற்ற வீடு பேறு அமைய, அவருடைய அதிபதியாக விளங்கும் முருகனை வழிபட வேண்டும். முருகப்பெருமானுக்கு ஆறு விளக்குகள் செவ்வாய் தோறும் ஏற்றி, மனதார பிரார்த்தனை செய்து வருபவர்களுக்கு விரைவிலேயே சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும். சாதாரணமாக எல்லோருடைய வீடுகளிலும், முருகனுடைய படம் நிச்சயம் இருக்கும். அந்த படத்திற்கு தம்பதியராக சேர்ந்து மாலை இட்டு, புதிய 6 அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி, முருகன் மந்திரங்களை உச்சரித்து ஒன்றாக பூஜை செய்தால் அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறைந்து, மன ஒற்றுமை நிச்சயம் ஏற்படும். கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், ஒரு முறை செய்து பாருங்கள் உங்களுக்கே ஆச்சரியப்படும் விஷயங்கள் எல்லாம் நடக்கும். வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு சஷ்டி திதிகளில் முருகனை இவ்வாறு வழிபட்டு வர, எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும். அது மட்டுமல்லாமல் அடிக்கடி முருகன் கோவிலுக்கு சென்று அவரை தரிசனம் செய்து வருபவர்களுக்கும், எண்ணற்ற நன்மைகள் நடைபெறும்.

செல்வங்களை அள்ளித்தரும் லட்சுமி வழிபாடு | Lakshmi worship brings wealth

செல்வங்களை அள்ளித்தரும் லட்சுமி வழிபாடு

Category: அம்மன்: வரலாறு

லட்சுமி பொன் நிறத்தை உடையவள். தங்கம், வெள்ளி இவற்றாலான மாலைகளை அணிந்திருப்பாள். சந்திரன் போன்று இருப்பவள். தாமரை மலரில் அமர்ந்திருப்பவள். தேவர்களால் சேவிக்கத் தகுந்தவள். லட்சுமி தேவி கேட்டதை அருளும் பெண் தெய்வம். லட்சுமியை அனுதினமும் வழிபட்டால் பல வகையான நன்மைகள் கிடைக்கும்.பல வகையான நன்மைகள் :உடல் அழகு பெற்று ஒளிமயமாகும். பகை அழிந்து அமைதி உண்டாகும்.கல்வி ஞானம் பெருகும்.பலவிதமான ஐஸ்வரியங்கள் செழிக்கும். நிலைத்த செல்வம் அமையும்.வறுமை நிலை மாறும். மகான்களின் ஆசி கிடைக்கும்.தானிய விருத்தி ஏற்படும்.வாக்கு சாதுரியம் உண்டாகும். வம்ச விருத்தி ஏற்படும். உயர் பதவி கிடைக்கும். வாகன வசதிகள் அமையும்.

பதி பக்தியை சொல்லும் காசி  அன்னபூரணியின் கதை பற்றி தெரிந்து கொள்வோமா | Let us know about the story of Kashi Annapoorani who tells about Pati Bhakti

பதி பக்தியை சொல்லும் காசி அன்னபூரணியின் கதை பற்றி தெரிந்து கொள்வோமா

Category: அம்மன்: வரலாறு

முன்னொரு காலத்தில் காசியில் ஒரு தீவிர சிவ பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.அவருடைய மனைவியும் மஹா பதிவ்ரதை. கணவர் சொல் மீறாதவர். அந்த பக்தர் தினமும் கங்கையில் ஸ்நானம் செய்து விட்டு சிவத்யானம் செய்வார். அதே போல் ஒரு நாள் த்யானத்தில் அமர்ந்திருந்த போது பல மணிநேரம் நிஷ்ட்டை கலையாமல் சமாதி நிலையை அடைந்தார். அவர் மனைவி அவர் நேரத்தில் வராததால் வாசலுக்கும் உள்ளுக்குமாக நடந்துகொண்டு கவலையுடன் இருந்தாள். இது இப்படி இருக்க கயிலாயத்தில் பரமசிவன் பார்வதி தேவியிடம் "தேவி பார்த்தாயா என் பக்தன் என்னை குறித்து நிஷ்டைகலையாமல் த்யானம் செய்வதை" என்றார். அதற்கு பார்வதி தேவி "போதுமே உங்கள் பகத்தனின் பெருமை. அங்கே வீட்டில் அவன் மனைவி மஹா பதிவ்ரதை இவனை காணோமே எனறு தவியாய் தவித்து கொண்டிருக்கிறாள் அவளுடைய கவலைக்கு என்ன பதில்" என்றாள். இதை கேட்டவுடன் பரமசிவன் கயிலாத்திருந்து மறைந்து அந்த பக்தன் வீட்டுக்கு அவன் போலவே உருவமெடுத்து சென்றார். பக்தனின் மனைவி சிவபெருமானை தன் கணவன் என்று நினைத்து கால் அலம்ப தண்ணீர் கொடுத்து இலை போட்டு சாப்பிட அழைத்தார்.

தஞ்சை பெரியகோவிலில் வாராகி அம்மனை ராஜ ராஜ சோழன் வணங்கியது ஏன் தெரியுமா? | Do you know why Raja Raja Cholan worshiped Varagi Amman in Tanjore Periyakovil?

தஞ்சை பெரியகோவிலில் வாராகி அம்மனை ராஜ ராஜ சோழன் வணங்கியது ஏன் தெரியுமா?

Category: அம்மன்: வரலாறு

தஞ்சை பெரிய கோவிலில் வாராகி அம்மன் வழிபாடு சிறப்பு வாய்ந்தது. பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜ ராஜசோழன் போருக்கு செல்லும் முன்பு வராகி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். மாமன்னர் ராஜாராஜசோழன் இந்த அன்னையின் அருள் பெற்றுதான் எந்த செயலையும் தொடங்குவார்.

விநாயகர் புராணம் | Ganesha legend

விநாயகர் புராணம்

Category: விநாயகர்: வரலாறு

சிறுவனே! ஏன் சிரிக்கிறாய்? நீ கணங்களுக்கு அதிபதி என்ற கர்வமா? அல்லது தேவர்கள் உன்னைக் காப்பாற்றுவார்கள் என்ற தைரியமா? இந்தக் கோழைகளை நம்பி மோசம் போய் விடாதே! என்று கஜமுகாசுரன் சொல்லவும், கணபதி பதிலேதும் சொல்லாமல் மீண்டும் சிரித்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள புலிப்பாத கணேசர்(வியாக்ரபாத கணேசன்)பற்றிய தெய்வீக ரகசியம் | Divine Secret of Pulipada Ganesha (Vyagrapada Ganesan) at Madurai Meenakshi Amman Temple

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள புலிப்பாத கணேசர்(வியாக்ரபாத கணேசன்)பற்றிய தெய்வீக ரகசியம்

Category: விநாயகர்: வரலாறு

மதுரையில் ஏராளமாக தெய்வீக ரகசியங்கள் உண்டு. அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற நிறைய வழிகாட்டி கோயில்கள் நிறைந்த தலம் மதுரையாகும். எதிர்பாராத பணக் கஷ்டங்களிலிருந்து விடுதலை பெறவும்,கொடுத்த வாக்கை நிறைவேற்றவும்,எத்தகைய கடுமையான சோதனைகள் வந்தாலும் அதிலிருந்து விடுதலை பெறவும்,ஒரு முறை செய்த தவறை திரும்பவும் செய்யாமல் இருப்பதற்கும் பலவித அற்புத ரகசியங்கள் நிறைந்த உத்தம தெய்வமாகிய புலிப்பாத கணேசர் வீற்றிருக்கிறார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? இவர் மதுரை கோவிலில் எங்கு வீற்றிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றீர்களா? மேலே தொடர்ந்து படியுங்கள்! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னிதிக்குச் செல்லும் வழியில் சொக்கநாதர் சன்னதிக்கு முன்பாக உள்ள கம்பத்தடி மண்டபத்திற்கு எதிராக வலப்புறமுள்ள துவாரபாலகரையடுத்து உள்ள தண்டபாணி சன்னிதியின் முன்புறமுள்ள ஒரு தூணில், விநாயகத்தாரணி எனப்படும் (பெண்) விநாயகியைக் காணலாம். இவரது பாதம் புலியின் கால்களைப் போல் உள்ளது. எனவே இவரை வியாக்ர பாத விநாயகி என்று கூறுவர். தாரணி என்றால் அழகு பொருந்திய மேன்மையான பெண் என்று பொருள் இவர், யானை முகம் கொண்டு மார்பகங்களுடன் வளைந்து நெளிந்த கோலத்தில் இரண்டு கைகளுடன் ஒரு கையில் தாமரை மலர் ஏந்தி மற்றொரு கையை தொங்கவிட்டுக் கொண்டு காட்சி தருகிறார். இவருக்குப் பாவாடை அணிவித்து வணங்குகிறார்கள.

மூகாம்பிகை அம்மன் உருவானது எப்படி பற்றி தெரிந்து கொள்வோமா | Let us know about how Goddess Mookambikai came into existence

மூகாம்பிகை அம்மன் உருவானது எப்படி பற்றி தெரிந்து கொள்வோமா

Category: அம்மன்: வரலாறு

கேரளாவில் காலடியில் பிறந்த ஆதிசங்கரருக்கு எத்தனையோ பகவதி கோவில்கள் இருந்தும் கலைவாணிக்கு ஒரு கோவில் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது. அவர் மைசூர் சமுண்டீஸ்வரி தாயை நோக்கி தவம் இருந்தார். மகனின் தெய்வீக தாகத்தைத் தீர்க்க அன்னை ஆதிசங்கரருக்கு காட்சியளித்தாள். தேவியின் திவ்ய ரூபம் கண்டு ஆதிசங்கரருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஆனந்தக் கூத்தாடினார். தேவியோ, ''நீ எங்கு என்னை குடி வைக்க விரும்புகிறாயோ அங்கு கொண்டுபோ. ஆனால் ஒரு நிபந்தனை. நான் உன்னைப் பின் தொடர்வேன். நீ என்னை திரும்பி பார்க்கக் கூடாது. அப்படி திரும்பிப் பார்த்தால் அந்த இடத்திலேயே நின்றுவிடுவேன்'' என்றாள். ஆதிசங்கரர் தேவியின் நிபந்தனையை ஒத்துக் கொண்டு தேவியின் கொலுசு ஒலியைக் கேட்டபடி நிம்மதியாக நடந்து சென்றார். எப்பொழுதுமே தேவி சித்தாடல் புரிவது தானே இயற்கை. போகும் வழியில் கோல மகரிஷி வழிபட்டு வந்த சுயம்பு லிங்கத்தைப் பார்த்து நின்றுவிட்டாள். கொலுசு ஒலி கேட்டுக் கொண்டே முன்னே நடந்து சென்று கொண்டிருந்த ஆதிசங்கரர் கொலுசு ஒலி நின்றுவிட்டதே எனத் திரும்பிப் பார்க்கிறார். அன்னை அருள்வாக்குபடி நீ திரும்பி பார்த்தால் நான் அங்கேயே நின்றுவிடுவேன் என்ற வரிகள் நினைவுக்கு வந்தன. எனவே அங்கு ஜோதிர் லிங்கத்தில் தேவி அந்த இடத்திலேயே ஐக்கியமாகிவிட்டாள். அவள் குடியேறிய இடம்தான் கொல்லூர் என்ற சக்தியின் புண்ணியத்தலம் ஆகும். அடர்ந்த காடு, மலை, ஆறுகள் அமைந்த இடத்தில் சுயம்புவான ஜோதிர்லிங்கம் மட்டும் தான் இருந்தது. அதிலே அரூபமான முப்பெரும் தேவியரும் உடனுறைகிறார்கள். ஆதிசங்கரர் வந்தபோது கோல மகரிஷி பூஜித்து வந்த தங்க ரேகை மின்னும் சுயம்புலிங்கம் மட்டுமே இருந்தது. அம்பாள் சிலை ஏதும் இல்லை. எனினும் அரூபரூபமாய் அந்த லிங்கத்தில் இருப்பதாக எத்தனையோ காலமாய் நம்பப்பட்டு வந்த ஸ்ரீமூகாம்பிகை தேவி என்ற அம்பாளின் முகம் அப்போது எப்படி இருக்கும் என்று யாரும் கற்பனை செய்து கூட அறியமுடியவில்லை. மூகாம்பிகை தேவியின் புகழினையும், பெருமைகளையும், மகிமைகளையும் கூறும் பல நிகழ்ச்சிகளையும், கதைகளையும் பக்தியுடன் பேசிவந்த ஊர் மக்கள் மன்தில் இது ஒரு பெருங்குறையாக இருந்தது. இந்நிலையில் ஆதிசங்கரர் கொல்லூர் வந்திருப்பது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. சக்தியை வழிபடும் சாக்தமார்க்கத்தை வழிபட அருளிய மகான் ஆதிசங்கரர் அரூபரூபமாய் உள்ள ஸ்ரீமூகாம்பிகையின் திரு உருவத்தைக் காட்டுவார் என ஊர்மக்கள் பரவசமடைந்தார். கொல்லூரில் ஆதிசங்கரர் தங்கியிருந்து தினமும் தியானம் செய்தது மூலவரின் சன்னதிக்கு நேர் பின்புறம் அமைந்துள்ள ஒரு மேடை ஆகும். ஏகாந்த வெளியில் ஜோதிர் லிங்கம் முன்னாள் அமர்ந்து ஆதிசங்கரர் தியானம் செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் அவர் முன் ஜெகஜோதியாக அம்பிகையின் உருவம் ஒளிர்ந்து காட்சி அளித்தது. ஆதிசங்கரர் தரிசித்த அம்பிகையின் உருவத்தை மனதில் கண்டார். அவ்வுருவம் சங்கு சக்கரம் அபயக்கரம் ஏந்திய சாந்த சொரூபியாக பத்மாசனத்தில் அமர்ந்து அருட்கடாச்சம் தந்ததைக் கண்டார். அன்னை தானே இத்தனை காலமாக இந்த சொர்ணரேகை மின்னும் சுயம்பு லிங்கத்தில் அரூபரூபமாய் முப்பெருந்தேவி மூகாம்பிகா என அடையாளம் காட்டிக் கொண்டாள். ஆதிசங்கரர் மனம் மகிழ்ந்து அம்பாளை துதித்தார். அக்காட்சி அவர் இதயத்தில் தத்ரூபமாக பதிந்தது. உடனே இச்செய்தியை உரியவர்களிடம் கூறினார். விக்கிரகக் கலையில் விஸ்வகர்மா பரம்பரையில் கைதேர்ந்த ஸ்தபதி ஒருவரை அழைத்து விக்கிரகம் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.

சுயம்புவாக உருவான 'வாராகி அம்மன்' எங்கிருக்கிறார் தெரியுமா | Do you know where is 'Varagi Amman' who has evolved as Swayambu?

சுயம்புவாக உருவான 'வாராகி அம்மன்' எங்கிருக்கிறார் தெரியுமா

Category: அம்மன்: வரலாறு

உலகின் பழமையான சிவன் கோவிலான உத்திரகோசமங்கை கோவில் அருகிலே அமைந்துள்ள ஆதி சுயம்பு வாராகி அம்மனை பற்றி தான் இந்த பதிவில் காண உள்ளோம். இந்தியாவிலே வாராகி அம்மனுக்கென்று தனி கோவில்கள் சில இடங்களில் மட்டுமே உள்ளன. காசியிலும், தஞ்சாவூரிலும், உத்திரகோசமங்கையிலும் அமைந்துள்ளன. அதிலும் இந்த உத்திரகோசமங்கை வாராகியே மிகவும் பழமையானது என்று கூறுகிறார்கள். இவரையே ஆதிவாராகியம்மன் என்றழைக்கப்படுகிறார். மாணிக்கவாசகர் தன் திருவெண்பாவையில் இந்த வாராகி அம்மனை பற்றி பதிவு செய்துள்ளார். இங்கிருக்கும் வாராகியை ‘மங்கல மஹாகாளியம்மன்’ என்றும் ஆதிவாராகி என்றும் அழைக்கிறார்கள். பன்றி முகத்துடன் சிங்க வாகனத்தில் காட்சித்தருபவர் வாராகி அம்மன். இவர் சப்தகன்னிகளுள் ஒருவர். இவர் திருமாலின் வராக அம்சமாக பார்க்கப்படும் அம்மன் ஆவார். இந்த கோவில் வளாகத்தில் நிறைய அம்மிக்கல் இருக்கிறது. அங்கிருக்கும் குளத்தில் நீர் எடுத்து வந்து அம்மிக்கல்லை சுத்தம் செய்துவிட்டு மஞ்சள் அரைத்து அம்மனுக்கு பூசிவிட்டு அவரிடம் இருக்கும் மஞ்சளை வாங்கி சாப்பிட்டு தங்கள் வேண்டுதலை வாராகி அம்மனிடம் வைக்கிறார்கள். நியாயமான கோரிக்கை எதுவாக இருந்தாலும் வாராகி அதை நிறைவேற்றுகிறார். இங்கிருக்கும் குளத்திற்கு மருத்துவ குணம் உள்ளதாக சொல்லப்படுகிறது. ராமநாதபுரம் வறட்சியாக இருந்தாலும் இந்த குளம் மட்டும் வற்றாமல் காணப்படுகிறது. எல்லா நட்களிலும் வாராகி அம்மன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். சப்த கன்னிகளில் ஒருவரான வாராகி அம்மன் கருப்பு ஆடை உடுத்தி சிம்ம வாகனத்தில் அமர்ந்து காட்சி தருகிறார். ஸ்ரீ வாராகி அம்மன் ஆதிபராசக்தியின் படைத்தலைவி. வாராகி அம்மன் துர்கை அல்லது ராஜராஜேஸ்வரியிடமிருந்து தோன்றியவர். இவர் போர்க்கடவுள் என்பதால், வராகி வழிபாடு வெற்றியை தருவதாக ஐதீகம். தோல்விகள்,அவமானம் போன்றவற்றிலிருந்து வராகி வழிப்பாடு காப்பாற்றும் என்பது ஐதீகம். சிலர் தாந்திரீக முறைப்படி வழிப்படுவதால் இவரை இரவு நேரங்களில் தான் வழிப்படுவர் என்கின்றனர். பல வாராகி கோவில்களில் அமாவாசை, பௌர்ணமியன்று தான் பூஜைகள் விமர்சியாக கொண்டாடப்படுகிறது. கண் திருஷ்டி, பயம் போன்றவற்றை போக்கக்கூடியவர். ராஜராஜ சோழன் வாராகி அம்மனை வழிப்பட்ட பிறகே அனைத்து காரியமும் செய்வார். குறிப்பாக போருக்கு செல்லும் முன் வாராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்த பிறகே போருக்கு செல்வார்.

தன வசியம், தொழில்விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்க வராஹி அம்மன் வழிபாடு | Worship Goddess Varahi for prosperity, business, and business

தன வசியம், தொழில்விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்க வராஹி அம்மன் வழிபாடு

Category: அம்மன்: வரலாறு

வராஹி அம்மன் என்பது மஹாகாளியின் அம்சமாகும். வராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்றுலோகத்திலும் எதிரிகள் இல்லை. தன்பக்தர்களை காக்கும் சாந்த ரூபிணியாகவும் தாயாகவும் இருக்கும் வராஹியின் மூலமந்திரத்தை 1008 உரு வீதம் 26நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ மஹாவராஹி அருள்கிட்டும். மந்திரத்துடன் கீழ்க்கண்ட பூஜைமுறைகளையும் செய்ய வேண்டும். மூல மந்திரம் 'ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன வசங்கரி தனம்வர்ஷய ஸ்வாகா'

கவலைகள் போக்கும் காந்திமதி அம்பாள் – திருநெல்வேலி பற்றி தெரிந்து கொள்வோமா | Shall we know about Gandhimati Ambal – Tirunelveli, which relieves worries?

கவலைகள் போக்கும் காந்திமதி அம்பாள் – திருநெல்வேலி பற்றி தெரிந்து கொள்வோமா

Category: அம்மன்: வரலாறு

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், இரண்டு அம்பலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர அம்பலமாகவும், ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர அம்பலமாகவும் உள்ளன. இத்திருத்தலத்தில் உள்ள இறைவன் நெல்லையப்பர், சுவாமி வேணுநாதர், வேய்த நாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உள்ள அம்பாள் காந்திமதி அம்மை, வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். காந்திமதியம்மனுக்கு வெள்ளிக் கிழமைகளில் “தங்கப் பாவாடை” அலங்காரம் செய்யப்படுகிறது. சக்தி பீடங்களுள் இத்தலம் காந்தி பீடமாகத் திகழ்கிறது. நெல்லையப்பர் லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காந்தி சக்தி பீடம் ஆகும். காந்திமதிக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலையில் விளாபூஜை (7 மணி) நடக்கும் வரையில் அம்பிகை வெண்ணிற புடவையிலேயே காட்சி தருகிறாள். இக்கோயிலில் காந்திமதி அம்பாள், தன் கணவர் நெல்லையப்பருக்கு உச்சிக் காலத்தில் அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். இதன் அடிப்படையில் அம்பாள் சந்நதி அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் வகைவகையான நைவேத்யங்களை சிவன் சந்நதிக்குக் கொண்டு செல்கின்றனர். அங்குள்ள அர்ச்சகர்கள் அவற்றை சிவனுக்கு படைக்கின்றனர். இப்பூஜை முடிந்தபின், அம்பாளுக்கு அதே நைவேத்யம் படைத்து பூஜை நடக்கிறது. கணவனும், மனைவியும் அன்யோன்யமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இந்த தலத்தில், தம்பதியர் வழிபட்டால், அவர்கள் உறவில் எந்த பிரச்னையும் வராது என்பது திண்ணம். இக்கோயிலில் உள்ள சுரதேவர் சந்நதி மிகவும் சிறப்புடையது. மூன்று தலைகள், மூன்று கால்கள், மூன்று கைகளுடன் இம்மூர்த்தி, கையில் தண்டம், மணி, சூலத்துடன் காட்சி தருகின்றார். எவருக்கேனும் சுரம் இருப்பின், இம்மூர்த்திக்கு மிளகு அரைத்துச் சார்த்தி வெந்நீரால் அபிஷேகம் செய்தால் தீரும் என்பது மக்களின் நம்பிக்கை.

அம்பாளும் அற்புதங்களும் பற்றி அறிந்து கொள்வோமா | Let's learn about Ambal and miracles

அம்பாளும் அற்புதங்களும் பற்றி அறிந்து கொள்வோமா

Category: அம்மன்: வரலாறு

அம்பாள், முப்பெரும் தேவியராகக் காட்சி கொடுக்கும் தலம் திருவானைக்காவல். அகிலாண்டேஸ்வரி ஒரு நாளில் காலையில் லட்சுமி தேவியாகவும், உச்சிக் காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் திருக்காட்சியளிக்கிறாள். மூன்று வேளையிலும் அம்மனை தரிசித்து வழிபட கல்வி,செல்வம்,வீரம் ஆகிய மூன்றும் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள். ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் இங்கு அம்பாளுக்கு விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன. திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவிலில் அமர்ந்து அருள்கிறாள் காந்திமதி அம்மன். காந்திமதி அம்மனுக்குத் தினமும் அர்த்த ஜாம பூஜையின் போது வெண்ணிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலை விளா பூஜை நடக்கும் வரையில் அம்பிகை வெண்ணிறப் புடவையோடே காட்சி கொடுக்கிறாள். உலகின் ஊழிகாலத்தில் அனைத்தும் அன்னைக்குள்ளாகவே அடங்கும் என்பதை உணர்த்துவதாகவே இது அமைகிறது என்கின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் தனிசிறப்புகள் பற்றி தெரிந்து கொள்வோமா | Let's know about Madurai Meenakshi Amman special features

மதுரை மீனாட்சி அம்மன் தனிசிறப்புகள் பற்றி தெரிந்து கொள்வோமா

Category: அம்மன்: வரலாறு

1. மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம். 2. அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக. 3. அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால் கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல் பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும். 4. அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின் சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை. அன்னை மதுரையில் யாகசாலையில் அக்னியில் அவதரித்தாள். இவளின் இயர்பெயர் தடாதகை அங்கயற்கண்ணிஆகும். 5. பாண்டிய மஹாராஜாவுக்கும் மஹாராணி காஞ்சனமாலைக்கும் ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆவாள். 6. இங்கு கற்பகிரகத்தில் அன்னையின் விக்ரஹம் உயிர்உடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்ப்பது போல் இருக்கும். 7. அன்னையே சிலையாக இருப்பதால் மிகவும் அழகாக இருக்கும் இவளை பார்த்து கொண்டே இருக்க வேண்டும்போல் இருக்கும். 8. அன்னையின் சிலை மிகவும் நளினமாக இருக்கும் அன்னையின் சன்னதியில் தாழம்பூ குங்குமம் பிரசாதமாக தரப்படும். மதுரையில் அன்னைக்கே முதல் மரியாதை. இங்கு அம்பிகையை முதலில் வணக்க வேண்டும் பின்னர்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும். 9. மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரையை அன்றும் இன்றும் என்றும் ஆட்சி செய்வார்கள் என்பது சிவவாக்கு.இங்கு எம்பெருமான் 64 திருவிளையாடல் புரிந்து உள்ளார். வேறு எந்த ஆலயத்திலும் இத்தனை திருவிளையாடல் புரிந்தது இல்லை. 10. அனைத்து சிவ ஆலயமும் முக்தியை தரும் ஆனால் சிவ ஆலயத்தில் சகல செல்வமும் தரும் கோவில். 11. மீனாட்சி சுந்தரேஸ்வரர் வாழ்ந்ததால் மதுரைக்கு வந்தாலே முக்தி 12. இந்த கோவில் அம்மன் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய அம்மன் கோவில். சக்தி பீடமும் ஆகும்.

ஆடி வெள்ளியில் அம்மனை வழிபட்டால் இத்தனை பலன்களா | Worshiping the goddess on Aadi Villi brings so many benefits

ஆடி வெள்ளியில் அம்மனை வழிபட்டால் இத்தனை பலன்களா

Category: அம்மன்: வரலாறு

பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு சிறந்த நாட்களாகும். ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். இதில் தஷ்ணாயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் தனிச்சிறப்பு உடையவையாக கருதப்படுகின்றன. ஆடி வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கைகூடி வரவும் விரதம் இருக்கலாம். அன்று சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளித்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும், மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம். பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நிறைவேறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும். நீண்ட ஆயுள் கிடைக்கும். ஆடி மாத வளர்பிறை வெள்ளியில் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்து 10 வயதிற்குட்பட்ட சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல், கொடுத்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். ஆடி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து அம்மனை ஆவாகனம் செய்து பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு வழிபட வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை. அம்மனை வழிபடும்போது 'லலிதாசகஸ்ர நாமம்' பாராயணம் செய்ய வேண்டும் அல்லது ஒலிக்க செய்ய வேண்டும். ஆடி மாதம் அம்மனுக்கு வளையல்சாற்றி அந்த வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீங்காத செல்வம் மற்றும் சகல நன்மைகளையும் பெறலாம். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, அருகம்புல்லால் பூஜிக்க வேண்டும். கொழுக்கட்டை படைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும். காரியத் தடை விலகும்.

பண்ணாரி அம்மனின் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா | Let's know about the special features of Pannari Amman

பண்ணாரி அம்மனின் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா

Category: அம்மன்: வரலாறு

* பண்ணாரி அம்மனுக்கு தங்கத்தேர் ஒன்று உள்ளது. தங்கத்தேர் புறப்பாடு சாயரட்சை பூஜை நிறைவடைந்தவுடன் மாலை 6 மணிக்கு கோவில் வெளிப்பிரகாரத்தில் தங்கத்தேர் புறப்பாடு நடைபெறும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிட தங்கத்தேர் புறப்பாட்டில் கலந்துகொள்வார்கள். * இக்கோவிலில் நடைபெறும் பங்குனி குண்டம் பெருவிழா அறிவிக்கப்பட்ட திருவிழாவாகும். * குண்டத்தில் பக்தர்கள் இறங்கிய பிறகு கால்நடைகள் இறங்குவது இங்கு காணப்படும் தனிச்சிறப்பாகும். * இக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு நாள்தோறும் அதிகாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ராகிலட்டு, வெண்பொங்கல், எலுமிச்சை சாதம், ரவா கேசரி மற்றும் சர்க்கரைப்பொங்கல் ஆகிய ஐந்து வகையான பிரசாதங்கள் அடுத்தடுத்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கோவில் வளாகத்தில் குண்டத்திற்கு கிழக்குப்புறம் உள்ள மண்டபத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது. * தெப்பக் கிணற்றுக்கு வடக்குப் பக்கத்தில் ஆண்கள் குளிக்கும் வரிசைக் குழாய்களுக்கு அருகில் ஒரு தொட்டி கட்டப்பட்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும். பகல் காலங்களில் மேய்ச்சலுக்கு வனத்திற்கு வரும் மாடுகள் தண்ணீர் குடிக்க அத்தொட்டிக்கு வருவது வழக்கம். இங்கே இரவுக் காலங்களில் குறிப்பாக கோடை காலங்களில் யானைகள் தண்ணீர் குடிக்கத் தொட்டிகளுக்கு வரும். இரவுக் காலங்களில் தனித்தோ, வெளிச்சமின்றியோ தெப்பக் கிணற்றுப் பக்கமாகச் செல்வது விரும்பத்தக்கதல்ல. * மாடு தானாக பால் சொரிந்த இடத்தில் புற்றும் அதன் அருகில் சுயம்புலிங்க உருவமாக வேங்கை மரத்தின் அடியில் பண்ணாரி அம்மனும் தோன்றியதால் பண்ணாரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். * இக்கோவிலுக்கு கிழக்குபுறம் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது, நாளிதழ்கள் மற்றும் ஆன்மீகம் தொடர்பான புத்தகங்கள் பக்தர்கள் படிப்பதற்கு வைக்கப்பட்டுள்ளது. * முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சாமி சன்னதி சென்றடைய ஆறு இருக்கைகள் கொண்ட மின் ஊர்தி ஒன்று பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்த சேவை பக்தர்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படுகிறது. * இக்கோவிலுக்கு கைகுழந்தைகளோடு வருகைதரும் தாய்மார்கள் தம் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு வசதியாக பாலூட்டும் அறை இருக்கை வசதிகளுடன் மேற்கு நுழைவுவாயில் அருகே அமைக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது.

பண்ணாரி அம்மனின் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா | Let's know about the special features of Pannari Amman

பண்ணாரி அம்மனின் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா

Category: அம்மன்: வரலாறு

* பண்ணாரி அம்மனுக்கு தங்கத்தேர் ஒன்று உள்ளது. தங்கத்தேர் புறப்பாடு சாயரட்சை பூஜை நிறைவடைந்தவுடன் மாலை 6 மணிக்கு கோவில் வெளிப்பிரகாரத்தில் தங்கத்தேர் புறப்பாடு நடைபெறும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிட தங்கத்தேர் புறப்பாட்டில் கலந்துகொள்வார்கள். * இக்கோவிலில் நடைபெறும் பங்குனி குண்டம் பெருவிழா அறிவிக்கப்பட்ட திருவிழாவாகும். * குண்டத்தில் பக்தர்கள் இறங்கிய பிறகு கால்நடைகள் இறங்குவது இங்கு காணப்படும் தனிச்சிறப்பாகும். * இக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு நாள்தோறும் அதிகாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ராகிலட்டு, வெண்பொங்கல், எலுமிச்சை சாதம், ரவா கேசரி மற்றும் சர்க்கரைப்பொங்கல் ஆகிய ஐந்து வகையான பிரசாதங்கள் அடுத்தடுத்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கோவில் வளாகத்தில் குண்டத்திற்கு கிழக்குப்புறம் உள்ள மண்டபத்தில் பிரசாதம் வழங்கப்படுகிறது. * தெப்பக் கிணற்றுக்கு வடக்குப் பக்கத்தில் ஆண்கள் குளிக்கும் வரிசைக் குழாய்களுக்கு அருகில் ஒரு தொட்டி கட்டப்பட்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும். பகல் காலங்களில் மேய்ச்சலுக்கு வனத்திற்கு வரும் மாடுகள் தண்ணீர் குடிக்க அத்தொட்டிக்கு வருவது வழக்கம். இங்கே இரவுக் காலங்களில் குறிப்பாக கோடை காலங்களில் யானைகள் தண்ணீர் குடிக்கத் தொட்டிகளுக்கு வரும். இரவுக் காலங்களில் தனித்தோ, வெளிச்சமின்றியோ தெப்பக் கிணற்றுப் பக்கமாகச் செல்வது விரும்பத்தக்கதல்ல. * மாடு தானாக பால் சொரிந்த இடத்தில் புற்றும் அதன் அருகில் சுயம்புலிங்க உருவமாக வேங்கை மரத்தின் அடியில் பண்ணாரி அம்மனும் தோன்றியதால் பண்ணாரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். * இக்கோவிலுக்கு கிழக்குபுறம் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது, நாளிதழ்கள் மற்றும் ஆன்மீகம் தொடர்பான புத்தகங்கள் பக்தர்கள் படிப்பதற்கு வைக்கப்பட்டுள்ளது. * முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சாமி சன்னதி சென்றடைய ஆறு இருக்கைகள் கொண்ட மின் ஊர்தி ஒன்று பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது. இந்த சேவை பக்தர்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படுகிறது. * இக்கோவிலுக்கு கைகுழந்தைகளோடு வருகைதரும் தாய்மார்கள் தம் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு வசதியாக பாலூட்டும் அறை இருக்கை வசதிகளுடன் மேற்கு நுழைவுவாயில் அருகே அமைக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது.

ஈரோடு பெரிய மாரியம்மன் பற்றி தெரிந்து கொள்வோமா | Let's know about the great Mariamman of Erode

ஈரோடு பெரிய மாரியம்மன் பற்றி தெரிந்து கொள்வோமா

Category: அம்மன்: வரலாறு

ஈரோடு நகரின் மையப்பகுதியில், மீனாட்சி சுந்தரனார் சாலையில், மாநகராட்சி அலுவலகத்தின் எதிர்புறத்தில் பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஈரோட்டின் காவல் தெய்வமாக போற்றப்படும் பெரிய மாரியம்மன் கோயிலின் கிழக்கு பிரகாரத்தில் நாச்சியார் சிலையும், மேற்கு பிரகாரத்தில் பரசுராமரும், பட்டாலம்மனும் எழுந்தருளியுள்ளனர். கருவறையில், கரங்களில் நாக பந்தத்துடன் உடுக்கை, பாசம், கபாலம், கத்தி ஆகியவற்றுடன் அமர்ந்த கோலத்தோடு இருக்கும் அன்னையை கண் குளிர வழிபடலாம். இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பின் கீழ் உள்ள இக்கோயிலில், காலை 6 மணிக்கு காலை சந்தி பூஜை, பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 6 மணிக்குச் சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. ஆடி மாதம் முழுவதும் பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. குறிப்பாக ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வெளியூர் பக்தர்களும் இங்கு வந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

சிறுமி வடிவத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பற்றி தெரிந்து கொள்வோமா | Shall we know about Sri Rajarajeshwari who gives grace in the form of a girl

சிறுமி வடிவத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பற்றி தெரிந்து கொள்வோமா

Category: அம்மன்: வரலாறு

காஞ்சி மகா பெரியவர் சென்னை பரங்கிமலையில் இருக்கும் ஸ்ரீ நந்தீஸ்வரரை தரிசிக்கும் பொருட்டு, தனது பக்தர்களுடன் பாத யாத்திரையாக வந்து கொண்டிருந்தார். வரும் வழியில், திரிசூலம் சென்று அங்கு திரிசூலநாதரையும் திரிபுரசுந்தரியையும் தரிசித்தார். பின்பு பழவந்தாங்கலில் ஓரிடத்தில் சற்று ஓய்வு கொள்ள எண்ணம் கொண்டவராக, அங்கிருந்த அரச மரத்தடியில் அமர்ந்தார்.

ஆடி மாதத்தில் முளைப்பாரி எடுப்பது ஏன் | Why take mulaipari in Adi month

ஆடி மாதத்தில் முளைப்பாரி எடுப்பது ஏன்

Category: அம்மன்: வரலாறு

🌱 பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம் ஆடி மாதம் ஆகும். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும், கர்கடக மாதம் என்றும் சொல்வார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம். தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது.

பில்கேட்சிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய 5 வாழ்க்கை பாடங்கள் | 5 Life Lessons We Can Learn From Billcats

பில்கேட்சிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய 5 வாழ்க்கை பாடங்கள்

Category: வாழ்க்கை வரலாறு

பில்கேட்ஸ் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்டின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை செயல் அதிகாரி. அவரது வாழ்க்கை பயணம் நம் அனைவரும் கற்றுக் கொள்ளக்கூடிய பல பாடங்களைக் கொண்டுள்ளது.

ராபின் ஹுட் (ROBIN HOOD) பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா | Have you heard about Robin Hood?

ராபின் ஹுட் (ROBIN HOOD) பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா

Category: வாழ்க்கை வரலாறு

பணக்காரர்களிடம் இருந்து கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும் இவனை பற்றி ஏராளமான நாவல்களும் திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. ராபின் ஹுட் யார்? நிஜமாகவே இப்படி ஒருவன் இருந்தானா? அல்லது கற்பனைக் கதாபாத்திரமா? இலக்கியவாதிகளைக் குழப்பும் விஷயம் இதுதான்.

ஸ்ரீ வீரபத்திர சுவாமி கோவில், திருச்சி | Sri Veerabhadra Swamy Temple, Trichy

ஸ்ரீ வீரபத்திர சுவாமி கோவில், திருச்சி

Category: கோவில்கள் மற்றும் வரலாறு

🔴 ஸ்ரீ வீரபத்திர சுவாமி கோவில், திருச்சி – தமிழ்நாட்டின் மறைந்த ஆன்மிக சக்தி மையம் இடம்: திருச்சி, தமிழ்நாடு முக்கிய தெய்வம்: 🔵 வீரபத்திர சுவாமி (Lord Shiva / Veerabhadra)

​சிங்கம்பட்டி ஜமீன் வரலாறு: இந்தியாவின் கடைசி முடிசூடா மன்னரின் வாழ்க்கை கதை! - தமிழர் நலம் | History of Singampatti Zamin: The Life Story of India's Last Uncrowned King!

​சிங்கம்பட்டி ஜமீன் வரலாறு: இந்தியாவின் கடைசி முடிசூடா மன்னரின் வாழ்க்கை கதை! - தமிழர் நலம்

Category: ​சிங்கம்பட்டி ஜமீன் வரலாறு

இந்தியாவின் கடைசி முடிசூடா மன்னர் என்று அழைக்கப்படும் சிங்கம்பட்டி ஜமீன்தார் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி அவர்களின் வீரமிகு வரலாறு மற்றும் சிங்கம்பட்டி ஜமீனின் சிறப்புகளை 'தமிழர் நலம்' தளத்தில் வாசியுங்கள். ​

கான்ஸ்டான்டிநோபிள் வீழ்ச்சி 1453: மகா பேரரசுகளை வீழ்த்திய ஒரே ஒரு தவறு! - தமிழர் நலம் | Fall of Constantinople 1453: The Fatal Mistake That Ended Empires - A Lesson on Change by Tamilar Nalam

கான்ஸ்டான்டிநோபிள் வீழ்ச்சி 1453: மகா பேரரசுகளை வீழ்த்திய ஒரே ஒரு தவறு! - தமிழர் நலம்

Category: வரலாறு

2000 ஆண்டுகால ரோமானியப் பேரரசு எப்படி ஒரே நாளில் வீழ்ந்தது? பானிபட்டில் 12,000 பேர் கொண்ட பாபர் படை 1 லட்சம் பேரை எப்படி வென்றது? வரலாறு சொல்லும் அந்த ஒரு 'டெக்னாலஜி' ரகசியம் இதோ!

மறைக்கப்பட்ட ஐரோப்பிய வரலாறு: உலகையே மாற்றிய நிலமானிய முறை மற்றும் மறுமலர்ச்சியின் பின்னணி! | Hidden European History: The Secrets of Feudalism and Renaissance Explained!

மறைக்கப்பட்ட ஐரோப்பிய வரலாறு: உலகையே மாற்றிய நிலமானிய முறை மற்றும் மறுமலர்ச்சியின் பின்னணி!

Category: ஐரோப்பிய வரலாறு

ஐரோப்பாவின் இருண்ட காலம் முதல் நவீன காலம் வரையிலான எழுச்சிமிகு வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமா? நிலமானிய முறை, சிலுவைப் போர்கள் மற்றும் மறுமலர்ச்சி எவ்வாறு உலகை மாற்றியது என்பதை ஆழமாக விளக்கும் கட்டுரை இது.

வரலாறு | history

வரலாறு என்பது வெறும் கதைகள் அல்ல, அது காலத்தின் கண்ணாடி. நாம் ஏன் வரலாற்றைப் படிக்க வேண்டும்? அது நமது எதிர்காலத்தை எப்படி மாற்றுகிறது என்பதை விளக்கும் கட்டுரை!

: வரலாறு - வரலாறு என்றால் என்ன, வரலாற்றின் முக்கியத்துவம், தமிழர் வரலாறு, 2026 வரலாற்று உண்மைகள், தமிழர் நலம் வாழ்வியல், நாகரிக வளர்ச்சி [ வரலாறு ] | : history - Importance of history Tamil 2026, Why we study history Tamil, Tamil heritage and history, 2026 historical trends Tamil, Tamilar Nalam in Tamil [ history ]

"வரலாறு (History) என்பது கடந்து போன நாட்களின் பட்டியல் மட்டுமல்ல; அது நாம் இன்று யார் என்பதற்கான வேர். முன்னோர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, வெற்றிகளைத் தூண்களாகக் கொண்டு எதிர்காலத்தை உருவாக்குவதே உண்மையான வரலாறு."

​09.03.2026 அன்று உங்கள் தமிழர் நலன் (Tamilar Nalam) வாசகர்களுக்காக, வரலாற்றின் முக்கியத்துவம் மற்றும் அது நம்மை எப்படி வழிநடத்துகிறது என்பது குறித்த சிறப்பு கட்டுரை இதோ:

📜 வரலாறு என்றால் என்ன? கடந்த காலத்தின் பாடங்கள்! | தமிழர் நலம்
(English): What is History? Learning from the Past to Build the Future | Tamilar Nalam

வரலாறு என்பது வெறும் கதைகள் அல்ல, அது காலத்தின் கண்ணாடி. நாம் ஏன் வரலாற்றைப் படிக்க வேண்டும்? அது நமது எதிர்காலத்தை எப்படி மாற்றுகிறது என்பதை விளக்கும் கட்டுரை!

வரலாறு (History) - காலத்தின் கண்ணாடி!

​வரலாறு என்பது மனித குலத்தின் பரிணாம வளர்ச்சி, கலாச்சாரம் மற்றும் மாற்றங்களைப் பதிவு செய்யும் ஒரு ஆவணம்.

1. வேர்களைத் தேடுதல் (Knowing Our Roots)

​ஒரு மரம் எவ்வளவு உயரமாக வளர்ந்தாலும் அதன் பலம் வேர்களில் தான் உள்ளது.

  • விளக்கம்: நாம் பேசும் மொழி, பின்பற்றும் கலாச்சாரம், உண்ணும் உணவு என அனைத்தும் பல ஆயிரம் ஆண்டுகால வரலாற்றின் விளைவு. நமது முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது நமது அடையாளத்தை (Identity) வலுப்படுத்துகிறது. குறிப்பாக, கீழடி போன்ற அகழ்வாராய்ச்சிகள் தமிழர்களின் தொன்மை வரலாற்றை உலகிற்குப் பறைசாற்றி வருகின்றன.

2. தவறுகளிலிருந்து கற்றல் (Learning from Mistakes)

​வரலாறு மீண்டும் மீண்டும் நிகழும் (History repeats itself) என்பார்கள்.

  • ரகசியம்: கடந்த காலங்களில் நடந்த போர்கள், வீழ்ச்சிகள் மற்றும் தோல்விகளுக்கான காரணங்களை ஆராய்வதன் மூலம், எதிர்காலத்தில் அந்தத் தவறுகளை நாம் தவிர்க்க முடியும். ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க வரலாறு ஒரு வழிகாட்டியாக (Guide) இருக்கிறது.

3. மாற்றத்தின் உந்துதல் (Inspiration for Change)

​வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை நமக்கு உத்வேகத்தைத் தருகிறது.

  • உண்மை: சாதாரண மனிதர்களாகப் பிறந்து, அசாத்தியமான சாதனைகளைச் செய்த மனிதர்களின் கதைகள் நமக்கு நம்பிக்கையை அளிக்கின்றன. 2026-ல் நாம் அனுபவிக்கும் சுதந்திரம் மற்றும் வசதிகள் அனைத்தும் வரலாற்றில் பலர் செய்த தியாகங்களின் பலன் என்பதை உணரும்போது அதன் மதிப்பு கூடுகிறது.

English Version: The Power of History

Understanding Our Journey in 2026

​History is the systematic study of the past, helping us understand the world we live in today.

  1. Cultural Identity: History preserves our heritage. Understanding ancient civilizations, like the Indus Valley or the Chola Empire, gives us a sense of pride and belonging.
  2. A Guide for the Future: By analyzing past political, social, and environmental changes, we can make better decisions for a sustainable future.
  3. Human Resilience: History tells the story of human endurance. It shows how we survived pandemics, ice ages, and conflicts to become the advanced civilization we are today.

தமிழர் நலம் (Tamilar Nalam) Takeaway Message

​"வரலாறு படைப்போம் வாருங்கள்." வரலாறு என்பது முடிந்துபோன ஒன்று அல்ல; ஒவ்வொரு நொடியும் நாம் செய்யும் செயல்கள் வரலாற்றின் ஒரு பகுதியாக மாறுகின்றன. 2026-ல் நாம் செய்யும் கண்டுபிடிப்புகளும், காட்டும் மனிதாபிமானமும் அடுத்த தலைமுறைக்கு வரலாறாக அமையும். உங்கள் வாழ்க்கையை ஒரு வரலாறாக மாற்றுங்கள்!

அடுத்து நீங்கள் படிக்க வேண்டிய 2 மாபெரும் கட்டுரைகள்!

  1. "மனிதர்கள் முதலில் தீயை எப்படி கண்டுபிடித்தார்கள்? - ஒரு வரலாற்றுப் பயணம்!" - (Ancient History 2026)
  2. "2026-ல் உங்கள் மூளையின் வேகத்தை 10 மடங்கு அதிகரிக்க 3 எளிய வழிகள்!" - (Brain Power 2026)

வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!

தமிழர் நலம் (Tamilar Nalam) உங்கள் வரலாற்று அறிவை மேம்படுத்த விரும்புகிறது. உங்களுக்கு மிகவும் பிடித்த வரலாற்று நாயகன் அல்லது நாயகி யார்? ஏன்? கமெண்டில் சொல்லுங்கள்!

​இந்தப் பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் 'மாணவர்களுக்கும்' Share செய்யுங்கள். தொடர்ந்து தமிழர் நலம் உடன் இணைந்திருங்கள்.

​நன்றி. பெருமை மிக்க வரலாறு தொடரட்டும்! 📜✨

: வரலாறு - வரலாறு என்றால் என்ன, வரலாற்றின் முக்கியத்துவம், தமிழர் வரலாறு, 2026 வரலாற்று உண்மைகள், தமிழர் நலம் வாழ்வியல், நாகரிக வளர்ச்சி [ வரலாறு ] | : history - Importance of history Tamil 2026, Why we study history Tamil, Tamil heritage and history, 2026 historical trends Tamil, Tamilar Nalam in Tamil [ history ]