1. ஞானசக்திதரர்: இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஞானசக்திதரர்' திருக்கோலமாகும்.
முருகனின் 12 வகை
கோலவடிவங்களும் அவற்றை வழிபடுவதால் கிடைக்கும்
பலன்களும் :
1. ஞானசக்திதரர்:
இந்த முருகனை வழிபட்டால் நினைத்த
காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர்
திருவடிவம் ஞானசக்திதரர்' திருக்கோலமாகும்.
2. கந்தசாமி:
இவரை வழிபட்டால் சகல காரியங்களும்
சித்தியாகும். பழனிமலையில் எழுந்தருளியிருக்கும் மூலவர்
திருவடிவம் கந்தசாமி
திருக்கோலமாகும்.
3. ஆறுமுக தேவசேனாபதி:
இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு
கிடைக்கும்.
சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில்
கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.
4. சுப்பிரமணியர்:
இவர் தன்னை வழிபடும் பக்தர்களின்
வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள
திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.
5. கஜவாகனர்:
இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி
ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக்
கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.
6. சரவணபவர்:
தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர்.
சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது
திருவடிவம் இருக்கிறது.
7. கார்த்திகேயர்:
இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும்
வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத்
தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும்
கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.
8. குமாரசாமி:
இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு
நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு.
கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.
9. சண்முகர்:
இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட
பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.
10. தாரகாரி: `
தாரகாசுரன்' என்னும் அசுரனை அழித்ததால்
முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட
வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி
இருக்கிறார்.
11. சேனானி:
இவரை வழிபட்டால் பகை அழியும்.
போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி
திருவுருவம் இருக்கிறது.
12. பிரம்மசாஸ்தா:
இவரை வழிபட்டால் எல்லா வகை வித்தைகளிலும்
தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : முருகனின் 12 வகை கோலவடிவங்களும் அவற்றை வழிபடுவதால் கிடைக்கும் பலன்களும் : - குறிப்புகள் [ ] | Spiritual Notes : 12 types of idols of Murugan and benefits of worshiping them: - Tips in Tamil [ ]