மர்மம் அடங்கிய தூணும். நீருக்கு நடுவில் சிவலிங்கமும்.!!

ஹரிஷ்சந்திரகாட் கோவில்..!!

[ ஆன்மீக குறிப்புகள்: சிவன் ]

A pillar of mystery. Shiva lingam in the middle of the water.!! - Harishchandragad Temple..!! in Tamil

மர்மம் அடங்கிய தூணும். நீருக்கு நடுவில் சிவலிங்கமும்.!! | A pillar of mystery. Shiva lingam in the middle of the water.!!

நம்முடைய முன்னோர்கள் கூறிய பல சம்பவங்கள் அறிவியல் சார்ந்தவையாக, உண்மையை உரைப்பதாக உள்ளன. அப்படி நமக்கு ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்தும் மகாராஷ்டிரா குகை கோவிலை பற்றி பார்ப்போம்....!

மர்மம் அடங்கிய தூணும். நீருக்கு நடுவில் சிவலிங்கமும்.!!

ஹரிஷ்சந்திரகாட் கோவில்..!!

 

🙏 நம்முடைய முன்னோர்கள் கூறிய பல சம்பவங்கள் அறிவியல் சார்ந்தவையாக, உண்மையை உரைப்பதாக உள்ளன. அப்படி நமக்கு ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்தும் மகாராஷ்டிரா குகை கோவிலை பற்றி பார்ப்போம்....!

 

🙏 மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் அமைந்துள்ள கிரேஷ்வர் எனும் கிராமத்தில் காணப்படும் ஒரு சிறப்பு வாய்ந்த கோவில்தான் "ஹரிஷ்சந்திரகாட் கோவில்". இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும்.

 

🙏 இது 6ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்டதாகும். இந்த கோவிலுக்கு அருகில் தான் "கேதாரேஸ்வர்" என்ற இந்த அதிசய குகை உள்ளது

 

🙏 இந்த குகைக்கு உள்ளே சென்றால் நீரால் சூழப்பட்ட 5 அடி உயர சிவலிங்கம் ஒன்று உள்ளது. இந்த தண்ணீரைக் கடந்துதான் லிங்கத்தை அடைய வேண்டும்.

 

🙏 சிவலிங்கத்தை சுற்றி காணப்படும் நீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் இதை கடந்து லிங்கத்தை அடைவது கடினமான ஒன்றாகவே உள்ளது. ஆனால், மழைக் காலங்களில் குகைக்கு அருகில்கூட செல்ல முடியாத அளவுக்கு உள்ளது.

 

🙏 இந்த சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமைந்துள்ளன. இவற்றில் மூன்று தூண்கள் ஏற்கனவே சேதமடைந்து விழுந்த நிலையில், ஒரே ஒரு தூண் மட்டுமே உள்ளது.

 

ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் உங்களுக்கு இலவசமாய் தர வருகிறது...

 

🙏 இந்த தூண் எப்போது சேதமடைந்து கீழே விழுகிறதோ அன்று இந்த உலகமே அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

 

🙏 சிவலிங்கத்தை சுற்றியுள்ள நான்கு தூண்களை "சத்ய யுகம், திரேதா யுகம், த்வாபர யுகம், கலியுகம்" ஆகிய நான்கு யுகங்களை தெளிவுப்படுத்துவதாக கூறப்படுகின்றது.

 

🙏 ஒவ்வொரு யுகமும் முடிவடையும் சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போதைய 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்து உலகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

 

ஆன்மீக குறிப்புகள்: சிவன் : மர்மம் அடங்கிய தூணும். நீருக்கு நடுவில் சிவலிங்கமும்.!! - ஹரிஷ்சந்திரகாட் கோவில்..!! [ ] | Spiritual Notes: sivan : A pillar of mystery. Shiva lingam in the middle of the water.!! - Harishchandragad Temple..!! in Tamil [ ]