கேசரி என்ற சிவ பக்தர் ஒருவர் திரேதா யுகத்தில் வாழ்ந்து வந்தார்.
கேட்டவரம் தரும் நாமக்கல் ஆஞ்சநேயர்!
அனுமன் கதை
கேசரி என்ற சிவ பக்தர் ஒருவர் திரேதா யுகத்தில் வாழ்ந்து
வந்தார். அவருக்கு நீண்ட காலமாகக் குழந்தை இல்லை. அதனால் அவர் சிவபெருமானை
நோக்கித் தவம் இருந்தார். சிவபெருமான் கேசரிமுன் காட்சி தந்தார். அவரிடம் கேசரி
தனக்குப் பிள்ளை வரம் வேண்டும் என்றார்.
அதற்குச் சிவபெருமான் 'பக்தா... உனக்கு மகன் பிறக்க பாக்கியமில்லை. ஒரு மகள்
பிறக்கவே பாக்கியம் உள்ளது. அந்த மகளுக்கு ஒரு மகன் பிறப்பான். அந்த மகன்
வலிமையும், வீரமும்
பெற்று மரணம் இல்லாதவனாகச் சிறப்பாகத் திகழ்வான்' எனக் கூறிவிட்டு மறைந்து போனார்.
சிவபெருமான் அருளியபடி அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது.
அதற்கு அஞ்சனை என்று பெயரிட்டனர். அஞ்சனைக்குத் திருமண வயது வந்ததும்,
அவளை வானர வீரன் ஒருவனுக்குக் கேசரி மணமுடித்து வைத்தார்.
அஞ்சனைக்கும் நீண்ட நாட்களாகக் குழந்தை பிறக்கவில்லை.
இச்சமயத்தில் தரும தேவதை பெண் வடிவில் தோன்றி,
திருவேங்கடமலைக்குக் கணவனுடன் சென்று பெருமாளை வணங்கி
வந்தால், ஆண் மகன்
பிறப்பான் எனக் கூறினாள். அஞ்சனாதேவி கணவருடன் சென்று பெருமாளை வணங்கினாள். அதன்
பிறகு காற்றையே எந்த நேரமும் உணவாகக் கொண்டு இறைவனைக் குறித்துக் கடும் தவம்
இருந்தாள்.
இதன் காரணமாய் வாயு பகவானின் அருளினால் ஒரு கரு அவள்
வயிற்றில் வளர்ந்தது. தான் தவம் இருந்தபோது கருவுற்றதை அறிந்து அஞ்சனாதேவி
வேதனைப்பட்டாள். அப்போது அசரீரியாய் ஒரு குரல் வந்தது.
மகேஸ்வரனின் கருணையால் வாயுதேவனின் உருவமே உன் கருவில்
இருப்பதால். பிறக்கும் குழந்தைக்கு வாயுபுத்திரன் எனப் பெயரிடு. அவன் சகல
சக்திகளும் ஸ்ரீ ஆஞ்சநேயர் - நாமக்கல் பெற்றவனாய் என்றும் சிரஞ்சீவியாய் வாழ்வான்
என அந்தக் குரல் கூறியது. அதன்படி அஞ்சனாதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அக்குழந்தைக்கு அனுமன் எனப் பெயரிட்டனர்.
இதுதான் அனுமனின் அவதார நிகழ்வாகும். அனுமன் வளர வளர
அற்புதங்கள் பல செய்தார். பிறகு அவருக்கு இராமபிரானின் அறிமுகம் கிடைத்தது. சீதையை
மீட்க அனுமன் மிகப்பெரும் உதவியாக இருந்தார். நாடு திரும்பிய இராமன்,
அனுமனை அழைத்து, "உலகில் உனக்கு நிகர் யாரும் இல்லை.
அத்தகைய ஆற்றல் மிகுந்தவன் நீ. அசோகவனத்தில் சீதையைக்
கண்டுவந்து நற்செய்தி சொல்லி, சோகத்தில் ஆழ்ந்திருந்த என்னை மகிழ்வித்ததற்கு நான் என்ன
செய்யப் போகிறேன்... பரந்த தோளை உடையவனே! என்னை ஆலிங்கனம் செய்து கொள்"
என்றபடி தன் மார்பை அனுமனுக்குக் கொடுத்தார். அனுமன் தலைகுனிந்து பணிவுடன்
நின்றார்.
இராமன் அனுமனுக்கு உயர்ந்த மாலைகளையும்,
பட்டாடைகளையும், யானைகளையும், குதிரைகளையும் பரிசாக வழங்கினார். முடிசூட்டுவிழா
முடிந்ததும் அனைவரும் தத்தம் ஊருக்குச் செல்ல இராமனிடம் விடை பெற்றுக் கொண்டனர்.
பல ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர் இராமாவதார நோக்கம் நிறைவேறியதும்,
இராமன் சராசரங்களை ஏற்றிக் கொண்டு சென்றார்.
ஆனால் அனுமன் மட்டும் அங்குப் போக விரும்பவில்லை. இராம
சத்தம் உலகில் நடமாடும் வரையில் தான் உயிருடனிருந்து, இராம கதாகாலட்சேபங்களை ஆனந்தமாய்க் கேட்டு அனுபவித்துக்
கொண்டிருக்க அனுமதி வேண்டினார். "அப்படியே ஆகட்டும் என இராமனும் அருள்
செய்தார். இராமனிடம் விடைபெற்று அமைதியான சூழ்நிலையில், இராம தியானத்தைச் செய்ய அனுமன் இமயமலையை அடைந்தார்.
இன்றும் அனுமன் இராம தியானத்திலும், இராமநாம சங்கீர்த்தனத்திலும் ஆழ்ந்து ஆனந்தப்பட்டு
சிரஞ்சீவியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அனுமனை மனத்தில் நினைப்பவர்கள்
இம்மையில் சர்வ காரிய சித்தி பெற்று ஆரோக்கிய பலத்துடன் வாழ்வதுடன்,
மறுமையில் இராமன் அருளால் முக்தியும் அடைவர் என்பது
பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
உடல் வலிமைக்கு உருவமாக அனுமன் கருதப்படுகின்றார். உடல்
வலிமையைப் பெருக்க விரும்புபவர்கள் அனுமனை வழிபட்டால் பலன் கிடைக்கும். மார்கழி
மாத அமாவாசை அன்று அனுமன் ஜெயந்தியாகக் கொண்டாடுகிறார்கள்.
எனவே வரும் ஞாயிற்றுக்கிழமை பளிங்குபோல் களங்கமற்ற
மனமுடையவனும், பொன்னிறமுடையவனும்,
கரங்கூப்பி வணங்கிக் கொண்டிருப்பனும்,
குண்டலங்களால் ஒளிவிடும் முகத்தை உடையவனுமாகிய,
அஞ்சனை மைந்தன் அனுமனை வழிபட்டால், மக்கள்பேறு, புகழ், கல்வி, செல்வம் போன்றன பெறலாம்.
ஆன்மீகம் : கேட்டவரம் தரும் நாமக்கல் ஆஞ்சநேயர்! - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | spirituality : Anjaneyar, the name stone given by the listener! - Notes in Tamil [ spirituality ]