அருள்மிகு அரவிந்தலோசனர் (நவதிருப்பதி- 9) திருக்கோயில், தொலைவிலிமங்கலம், தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள இரட்டை திருப்பதி என்றழைக்கப்படும் திருத்தொலைவில்லிமங்கலம் 108 வைணவத்திருத்தலங்களிள் ஒன்று. இங்கு இரண்டு திருக்கோயில்கள் சேர்ந்து ஒரே திவ்ய தேசத் திருத்தலமாகக் கருதப்படுகின்றது. எனினும் நம்மாழ்வார் இரண்டு பெருமாள்களுக்கும் தனித்தனியே பெயர் சூட்டியுள்ளதால் நவதிருப்பதிகளின் கணக்கில் இத்தலத்தை இரண்டு திருத்தலங்களாகக் கொள்வது மரபு. ஆத்ரேய சுப்ரபர் எனும் ரிஷி, யாகம் செய்வதற்காக இத்தலத்தில் நிலத்தை உழுத போது ஒளிரும் வில்லையும் தராசையும் கண்டு ஆச்சரியமடைந்து கையில் எடுக்க, அவை சாப விமோசனம் பெற்று ஆண், பெண்ணாக உருப்பெற்றன.
அருள்மிகு அரவிந்தலோசனர்
(நவதிருப்பதி- 9) திருக்கோயில்:
அருள்மிகு அரவிந்தலோசனர்
(நவதிருப்பதி- 9) திருக்கோயில், தொலைவிலிமங்கலம், தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள இரட்டை
திருப்பதி என்றழைக்கப்படும்
திருத்தொலைவில்லிமங்கலம் 108 வைணவத்திருத்தலங்களிள் ஒன்று. இங்கு இரண்டு திருக்கோயில்கள் சேர்ந்து ஒரே திவ்ய தேசத் திருத்தலமாகக் கருதப்படுகின்றது. எனினும் நம்மாழ்வார் இரண்டு பெருமாள்களுக்கும் தனித்தனியே பெயர் சூட்டியுள்ளதால் நவதிருப்பதிகளின் கணக்கில் இத்தலத்தை இரண்டு திருத்தலங்களாகக் கொள்வது மரபு.
ஆத்ரேய சுப்ரபர் எனும்
ரிஷி, யாகம் செய்வதற்காக
இத்தலத்தில் நிலத்தை உழுத போது ஒளிரும் வில்லையும் தராசையும் கண்டு ஆச்சரியமடைந்து
கையில் எடுக்க,
அவை சாப விமோசனம் பெற்று
ஆண், பெண்ணாக உருப்பெற்றன.
அவர்கள் இருவரும்
குபேரனை மதிக்காததால் இவ்வாறு சாபம் பெற்றதாகக் கூறினர். இதனாலேயே இவ்வூர் துலை, வில்லி மங்கலம் எனும்
பெயர் பெற்றது.பின்னர் யாகம் நடத்தி அவிர்பாகத்தை தேவர்களுக்குத் தந்த சுப்ரரும், பெற்ற தேவர்களும்
திருமாலைத் தொழுது வழிபட திருமால் காட்சியளித்தார். தேவப்பிரான் எனும்
திருப்பெயரும் பெற்றார்.
இத்திருத்தலம் இரட்டைத்
திருப்பதியில் தெற்கு திருக்கோயில் ராகு அம்சம் திருக்கோயில்.சுப்ரரர் அவருக்கு
காட்சியளித்த தேவர்பிரானுக்கு தினந்தோறும் தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து
வந்தார்.
இத்தகைய அழகு வாய்ந்த
மலர்களை சுப்ரரர் எங்கிருந்து கொண்டு வருகிறார் என்பதை அறிவதற்காக பெருமாள், சுப்ரரர் தாமரை மலர்களை
தடாகத்தில் இருந்து எடுக்கவரும் போது பின்தொடர்ந்து வரவே, சுப்ரரர் தேவர்பிரானிடம்
காரணம் வினவினார். அதற்கு தேவபிரான், சுப்ரர் செந்தாமரை மலர்கள் கொண்டு செய்த வழிபாட்டில்
மயங்கி தான் அங்கு வந்ததாகவும் அங்கேயே தமக்கு ஓர் ஆலயம் எழுப்பும் படியும்
கூறினார்.
இத்திருத்தலம் இரட்டைத்
திருப்பதியில் வடக்கு திருக்கோயில்.கேது அம்சம் திருக்கோயில். நவத்திருப்பதிகளில்
இத்திருத்தலம் ராகு கேது தலமாக் விளங்குவதால் ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் இத்தலம்
வந்து வழிபட தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : அருள்மிகு அரவிந்தலோசனர் (நவதிருப்பதி- 9) திருக்கோயில்: - திருத்தலங்கள் [ ] | Spiritual Notes: Temples : Arulmiku Aravindalosanar (Navathirupathi-9) Temple: - Temples in Tamil [ ]