ஸ்ரீ ரங்கம் - ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்களிலே முதன்மையானதாக "கோயில்"
சோழநாட்டுத் திருப்பதிகள் - 40
1) ஸ்ரீ ரங்கம்
ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்களிலே முதன்மையானதாக
"கோயில்" இக்கோயில் திருச்சி - விழுப்புரம் கார்டுலைனில் உள்ள
ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது.
திருச்சியிலிருந்து டவுண் பஸ்ஸில் சென்றால் கோயில் தெற்குக்கோபுர வாசலிலேயே
இறங்கலாம்.
மூலவர் : ஸ்ரீ ரங்கநாத பெருமாள் (ஆதிசேஷ சயனத் திருக்கோலம்)
2) திருக்கோழி (உறையூர்)
இது திருச்சி முனிஸிபாலிடியிலேயே ஒரு பகுதி. டவுண் ஜங்ஷன்- மெயின்
கார்டுகேட் மார்க்கத்தில் உறையூர் என்ற இடத்தில் இறங்கலாம். திருச்சி
ஜங்ஷனிலிருந்து 3
கி.மீ. தூரம்த்தில் உள்ளது.
மூலவர் : அழகிய மணவாளப் பொருமாள், நின்ற திருக்கோலம்.
3) திருக்கரம்பனூர் (உத்தமர் கோயில்)
இது திருச்சி அருகில் கார்டுலைனில் உள்ள ஒரு சிறிய ஸ்டேஷன்
ஸ்ரீரங்கத்திலிருந்து வடக்கே 3/4 கி.மீ. திருச்சியிலிருந்தும், ஸ்ரீரங்கத்திலிருந்தும்
திருவெள்ளறை போகும் பஸ் வழியில் இங்கு இறங்கலாம்.
மூலவர் : புருஷோத்தமன், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
4) திருவெள்ளறை (வேதகிரி, ச்வேதகிரி)
திருச்சியிலிருந்து துறையூர் போகும் பஸ் பாதையில் சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ளது.
மூலவர் : புண்டரீகாக்ஷன், செந்தாமரைக் கண்ணன் நின்ற திருக்கோலம்
5) திருஅன்பில் (அன்பில்)
திருச்சி - கல்லணை, கும்பகோணம் பஸ் மார்க்கத்தில் உள்ளது. திருச்சிக்கு அருகே
உள்ள லால்குடியிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது.
மூலவர் : வடிவழகிய நம்பி, புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
6) திருப்பேர் நகர் (கோயிலடி, அப்பக்குடத்தான்)
அன்பிலில் இருந்து கொள்ளிடத்திற்கு அக்கரையில் 5 கி.மீ தூரத்தில் உள்ளது. தோஹுர் - திருக்காட்டுப்பள்ளி -
தஞ்சை பஸ்ஸிலும் சென்று வரலாம்.
மூலவர் : அப்பக்குட்த்தான், அப்பாலா ரெங்கநாதன்
7) ஸ்ரீ
ரங்கம்
தஞ்சையிலிருந்து வடக்கே திருவையாறு செல்லும் பஸ்ஸில் 9 - 10 கி.மீ தூரத்தில் உள்ளது. டவுன் பஸ் வசதி உள்ளது.
மூலவர் : ஹரசாபவிமோசனப் பெருமாள், நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம்
8) திருக்கூடலூர் (ஆடுதுறைப் பெருமாள் கோயில்]
தஞ்சாவூரிலிருந்து பஸ் மார்க்கமாய் திருவையாறு சென்று
அங்கிருந்து கும்பகோணம் செல்லும் பஸ்ஸில் 11 கி.மீ தூரம் சென்று இவ்வூரை அடையலாம்.
மூலவர் :
வையங்காத்த பெருமாள், உய்யவந்தார்,
நின்ற திருக்கோலம்,
9) திருக்கவித்தலம் (கபிஸ்தலம்)
பாபநாசம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வண்டியில் வரலாம். கும்பகோணத்திலிருந்து
திருவையாறு பஸ்ஸில் வரலாம்.
மூலவர் : கஜேந்த்ர வரதன், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்
10) திருப்புள்ளம்பூதங்குடி [புள்ளபூதங்குடி)
கும்பகோணத்திலிருந்து சுவாமி மலை வழியாக திருவைகாவூர் செல்லும்
டவுண் பஸ் பாதையில் சுவாமிமலைக்கப்பால் 45 கி.மீ தூரத்தில் உள்ளது.
மூலவர் : வல்வில் ராமன், கிழக்கே திருமுக மண்டலம்
11) திரு ஆதனூர்
சுவாமிமலையிலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கு வசதிகள் எதுவும் இல்லை.
மூலவர் : ஆண்டளக்குமையன், கிழக்கே திருமுக மண்டலம்
12) திருக்குடந்தை (சாரங்கபாணி சுவாமி கோயில்)
கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இக்கோயில் சுமார் 2-3 கி.மீ தூரம். இந்த
ஊரில் ஹோட்டல், சத்திரம்
முதலிய வசதிகளும் உண்டு.
மூலவர் : சாரங்கபாணி. கிழக்கே திருமக மண்டலம்
13) திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோயில்]
தங்க வசதி உண்டு. கும்பகோணத்திலிருந்து 6-7 கி.மீ. தூரத்திலேயே இருப்பதால் அங்கேயே தங்கி காரிலோ,
பஸ்ஸிலோ இந்த சேஷத்திரத்தை ஸேவிக்கலாம்.
மூலவர் : ஒப்பிலியப்பன், கிழக்கே திருமுக மண்டலம்.
14) திருநறையூர் (நாச்சியார் கோயில்)
கும்பகோணத்திலிருந்து 9-10 கி.மீ. தூரத்திலுள்ளது. பல வெளியூர் பஸ்களிலும்
(முக்கியமாக, குடவாசல்,
திருவாரூர் வழி) போகலாம். எல்லா வசதிகளும் உண்டு.
மூலவர் : ஸ்ரீநிவாஸன், திருநறையூர் நம்பி, வாஸுதேவன் என்ற பெயர்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கே
திருமுக மண்டலம்.
15) திருச்சேறை (பஞ்சஸாரக்ஷேத்ரம்)
கோயிலில் இருந்து 10 நாச்சியார் சுமாராக கி.மீ. கும்பகோணத்திலிருந்து
தென்கிழக்கில் 24 கி.மீ
தூரத்தில் திருவாரூர் நெடுஞ்சோலையில் உள்ளது. டவுண் பஸ் மூலம் செல்லலாம். சத்திரம், ஹோட்டல்களும் உண்டு.
மூலவர் : ஸாரநாதன், நின்ற திருக்கோலம்
16) திருக்கண்ணமங்கை
திருச்சேறையிலிருந்து சுமார் 25 கி.மீ. கும்பகோணத்திலிருந்து சுமார் 40 கி.மீ.திருவாரூர் ஸ்டேஷனிலிருந்து வட மேற்கில் 6-7 கி.மீ. கும்பகோணம் - திருவாரூர் பஸ் மூலம் வரலாம்.
மூலவர் : பக்தவத்ஸலப் பெருமாள், நின்ற திருக்கோலம்.
17) திருக்கண்ணபுரம்
நாகப்பட்டினத்திலிருந்து நன்னிலம் போகும் பஸ்ஸில்
திருப்புகலூர் (திருப்புகூர்) என்ற இடத்தில் இறங்கி 2 கி.மீ. போக வேண்டும். இங்கு வசதிகள் ஒன்றும் இல்லை.
மூலவர் : நீலமேகப் பெருமாள், கிழக்கே திருமுக மண்டலம்.
18) திருக்கண்ணங்குடி
(க்ருஷ்ணாரண்ய க்ஷேத்திரம்)
திருவாரூருக்கு 14 கி.மீ கிழக்கு. பஸ் வழியாக சிக்கிலுக்கும் தீவளுருக்கும்
இடையேயுள்ள ஆழியூர் என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து கி.மீ. தூரம் நடந்தோ
வண்டியிலோ செல்லலாம். இங்கு வசதிகள் ஒன்றும் இல்லை.
மூலவர் : லோகநாதன், நின்ற திருக்கோலம்,
19) திருநாகை (நாகபட்டினம்)
மாயவரத்திலிருந்து பஸ்ஸில் வந்து இறங்கினால் பஸ் நிலையத்திற்கு
எதிர்த்தெருவிலேயே சற்று தூரத்தில் அழகிய, பெரிய கோயில் உள்ளது.
மூலவர் : நீலமேகப்பெருமாள்
20) திருத்தஞ்சை மாமணிக் கோயில் [தஞ்சாவூர்]
தஞ்சாவூர் ஜங்ஷனிலிருந்து 4 கி.மீ தூரத்தில் வெண்ணாற்றங்கரையில்
உள்ளன.
1) தஞ்சை
மாமணிக்கோவில்
மூலவர் : நீலமேகப்பெருமாள், வீற்றிருந்த திருக்கோலம்
2) மணிக்குன்றம்
மூலவர் : மணிக்குன்றப்பெருமாள், வீற்றிருந்த திருக்கோலம்
3) தஞ்சையாளி
நகர்
மூலவர் : நரஸிம்மன், வீற்றிருந்த திருக்கோலம்
21) திருநந்திபுர விண்ணகரம் (நாதன் கோயில், தக்ஷிண ஜகந்நாதம், ஸ்ரீனிவாஸஸ்தலம்)
கும்பகோணத்திலிருந்து பஸ்ஸில் கொருக்கை என்ற ஊருக்கு வந்து
அங்கிருந்து 2.5 கி.மீ.
தூரம் செல்ல வேண்டும். வழியில் ஒரு வாய்க்காலை கடக்க வேண்டும்.
மூலவர் : ஜகந்நாதன், வீற்றிருந்த திருக்கோலம்
22) திருவெள்ளியங்குடி
[வெள்ளியங்குடி]
கும்பகோணம் (அ) திருப்பனந்தாளிலிருந்து அணைக்கரை செல்லும்
பஸ்ஸில் சேங்கானூரில் இறங்கி 1 கி.மி. நடந்து திருவெள்ளியங்குடி செல்ல வேண்டும்.
மூலவர் : கோலவில்லி ராமன், கிழக்கே திருமுக மண்டலம்.
23 திருவழுந்தூர் (தேரழுந்தூர்)
மாயவரத்திலிருந்து தென்மேற்கே 21 கி.மீ டவுன் பஸ்ஸில் போகலாம்.
மூலவர் : தேவாதிராஜன், நின்ற திருக்கோலம்
24) திருச்சிறுபுலியூர் (சிறுபுலியூர்)
மாயவரம்-திருவாரூர் ரயில் பாதையில், கொல்லுமாங்குடி ஸ்டேஷனிலிருந்து 3 கி.மீ. மாயவரத்திலிருந்து டவுன் பஸ்ஸில் கொல்லுமாங்குடி
போகலாம். இங்கு வசதிகள் ஒன்றுமில்லை.
மூலவர் : அருள்மாகடல், புஜங்கசயனம். தெற்கே திருமுக மண்டலம்
25) திருத்தலைச் சங்க நாண்மதியம் [தலைச்சங்காடு]
மாயவரத்திலிருந்து ஆக்கூர் போய் அங்கிருந்து சீர்காழி
செல்லும் பஸ் சாலையில் 3 கி.மீ சென்று இவ்வூரை அடையலாம்.
மூலவர் : நாண்மதியப்பெருமாள். நின்ற திருக்கோலம்
26) திருஇந்தளூர் (மயிலாடு துறை, திருவிழந்தூர்)
இது மாயவரம் முனிஸிபாலிட்டியிலேயே ஒரு பகுதி. டவுண் பேருந்தில்
போகலாம். காவேரிக்கு அக்கரை.
மூலவர் : பரிமள ரங்கநாதன், வீரசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
27) திருக்காவளம்பாடி
(திருவாங்கூர்)
சென்னை - மாயூரம் ரயில் பாதையில் வைத்தீசுவரன் கோயில் ரயில்
நிலையத்திலிருந்து 8
கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இங்கு வசதிகள் இல்லை.
மூலவர் : கோபாலகிருஷ்ணன் நின்ற திருக்கோலம்
28) திருக்காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி]
சீர்காழி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 1 கி.மீ. தூரத்திலுள்ளது. பஸ்ஸில் சென்றால் கோயில் ஸந்நிதி
வாசலிலேயே இறங்கலாம்.
மூலவர் : த்ரிவிக்ரமன், நின்ற திருக்கோலம்.
29) திருஅரிமேய விண்ணகரம் [திருநாங்கூர்]
சீர்காழி ஸ்டேஷனுக்குத் தென்கிழக்கே 8 கி.மீ. தொலைவில் திருநாங்கூருக்குள்ளேயே உள்ளது.
குடமாடுகூத்தர் கோயில் என்றுதான் பலருக்குத் தெரியும்.
மூலவர் : குடமாடுகூத்தன். வீற்றிருந்த திருக்கோலம்.
30) திருவண்புருடோத்தமம் (திருநாங்கூர்)
இந்த ஸ்தலமும் சீர்காழியிலிருந்து 8 கி.மீ தூரத்தல் திருநாங்கூரிலேயே உள்ளது.
மூலவர் : புருஷோத்தமன், நின்ற திருக்கோலம்.
31) திருசெம்பொன்செய் கோயில் (திருநாங்கூர்)
இதுவும் சீர்காழியிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் திருநாங்கூரிலேயே உள்ளது. பஸ் வசதி
உண்டு.
மூலவர்: பேரருளாளன், நின்ற திருக்கோலம்
32) திருமணிமாடக்கோயில் (திருநாங்கூர்)
சீர்காழியிலிருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் திருநாங்கூருக்குள்ளேயே உள்ளது.
தங்குவதற்கு ராமாநுஜகூடம் உண்டு.
மூலவர் : நாராயணன், வீற்றிருந்த திருக்கோலம்
33) திருவைகுந்த
விண்ணகரம் [திருநாங்கூர்]
சீர்காழியிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது. பஸ் வசதிகள் உண்டு இதுவும்
திருநாங்கூரிலேயே உள்ளது.
மூலவர் : வைகுந்த நாதன், உபய நாச்சிமார்களும் வீற்றிருக்கின்றனர்.
34) திருவாலியும் திருநகரியும்
திருவாலி: சீர்காழி
- திருவெண்காடு பஸ் சாலையில் உள்ளது சீர்காழி ஸ்டேஷனிலிருந்து தென்கிழக்கே 8 கி.மீ திருநாங்கூரிலிருந்து இவ்வழி 5-6 கி.மீ.தான். இங்கு வசதிகள் எதுவம் இல்லை.
மூலவர் : லக்ஷ்மி ந்ருஸிம்ஹர், வீற்றிருந்த திருக்கோலம்
திருநகரி : திருவாலியில்
இருந்து சுமார் 5
கி.மீ தூரம் உள்ளது.
மூலவர் : வேதராஜன், வீற்றிருந்த திருக்கோலம்.
35) திருத்தேவனார் தொகை (கீழச்சாலை)
சீர்காழி ஸ்டேஷனிலிருந்து தென் கிழக்கே 6 கி.மீ. சீர்காழி- திருவெண்காடு பஸ் மார்க்கத்தில்
திருவாலியில் இறங்கி முக்கால் மைல் வண்டியில் வரலாம். இங்கு வசதி ஒன்றும்
கிடையாது.
மூலவர் : தெய்வநாயகன், நின்ற திருக்கோலம்
36) திருவாலியும் திருநகரியும்
சீர்காழியிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ள திருநாங்கூருக்குள்ளேயே உள்ளது.
பள்ளிகொண்ட பெருமாள் என்றே ப்ரஸித்தம். கீழவீதியிலிருந்து மேற்கே செல்லும்
சாலையில் உள்ளது.
மூலவர் : செங்கண்மால், புஜங்கசயனத் திருக்கோலம்
37) திருமணிக்கூடம் (திருநாங்கூர்)
சீர்காழியிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ள திருநாங்கூர் எல்லையிலிருந்து
கிழக்கே 1 கி.மீ.
தூரத்தில் உள்ளது.
மூலவர் : வரதராஜப்பெருமாள். நின்ற திருக்கோலம்.
38) திருவெள்ளக்குளம் (அண்ணன் கோயில்)
சீர்காழி ஸ்டேஷனிலிருந்து தென்கிழக்கில் 10 கி.மீ. சீர்காழி நாகை பேருந்துகள் அனைத்திலும் செல்லலாம்.
மூலவர் : ஸ்ரீநிவாஸன், நின்ற திருக்கோலம்
39) திருபார்த்தன்பள்ளி (திருநாங்கூர்)
சீர்காழியிலிருந்து 12-13 கி.மீ. தூரத்தில் உள்ளது. இடையில் சிறிய காவிரி ஆற்றைக்
கடந்து வர வேண்டும். சிறிய ஊர். வசதிகள் ஒன்றும் இல்லை.
மூலவர் : தாமரையாள் கேள்வன், நின்ற திருக்கோலம்
40) திருச்சித்ரகூடம் (சிதம்பரம்)
சென்னை - திருச்சி மெயின் லைனில் சிதம்பரம் ரயில்வே
ஸ்டேஷனிலிருந்து 2
கி.மீ. தூரத்தில் தில்லை நடராஜர் கோயிலுக்குள் உள்ளது.
மூலவர் : கோவிந்தராஜன், போகசயனம்
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : சோழநாட்டுத் திருப்பதிகள் - 40 - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Chola Nadu Tirupati - 40 - Spiritual Notes in Tamil [ spirituality ]