அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது.

குறிப்புகள்

[ பொது தகவல்கள்: அறிமுகம் ]

Everyone needs to know. - Tips in Tamil

அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது. | Everyone needs to know.

1. வருடங்கள்(60) 2. அயணங்கள்(2) 3. ருதுக்கள்(6) 4. மாதங்கள்(12) 5. பக்ஷங்கள்(2) 6. திதிகள்(15) 7. வாஸரங்கள்(நாள்)(7) 8. நட்சத்திரங்கள்(27) 9. கிரகங்கள்(9) 10. இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12) 11. நவரத்தினங்கள்(9) 12. பூதங்கள்(5) 13. மஹா பதகங்கள்(5) 14. பேறுகள்(16) 15. புராணங்கள்(18) 16. இதிகாசங்கள்(3)

அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது.

1. வருடங்கள்(60)

2. அயணங்கள்(2)

3. ருதுக்கள்(6)

4. மாதங்கள்(12)

5. பக்ஷங்கள்(2)

6. திதிகள்(15)

7. வாஸரங்கள்(நாள்)(7)

8. நட்சத்திரங்கள்(27)

9. கிரகங்கள்(9)

10. இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)

11. நவரத்தினங்கள்(9)

12. பூதங்கள்(5)

13. மஹா பதகங்கள்(5)

14. பேறுகள்(16)

15. புராணங்கள்(18)

16. இதிகாசங்கள்(3)

 

இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

 

வருடங்கள் மொத்தம் அறுபது அவை:

 

1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.

 

அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

 

1. உத்தராயணம்

(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).

2. தக்ஷிணாயணம்

(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).

இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.

 

ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்:

 

1. வஸந்தருது

(சித்திரை,வைகாசி)

2. க்ரீஷ்மருது

(ஆனி,ஆடி)

3. வர்ஷருது

(ஆவணி,புரட்டாசி)

4. ஸரத்ருது

(ஐப்பசி,கார்த்திகை)

5. ஹேமந்தருது

(மார்கழி,தை)

6. சிசிரருது

(மாசி,பங்குனி)

இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.

 

தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும் :

 

1. சித்திரை(மேஷம்)

2. வைகாசி(ரிஷபம்)

3. ஆனி(மிதுனம்)

4. ஆடி(கடகம்)

5. ஆவணி(சிம்மம்)

6. புரட்டாசி(கன்னி)

7. ஐப்பசி(துலாம்)

8. கார்த்திகை(விருச்சிகம்)

9. மார்கழி(தனுர்)

10. தை(மகரம்)

11. மாசி(கும்பம்)

12. பங்குனி(மீனம்).

 

பக்ஷங்கள் இரண்டு வகைப்படும் :

 

1. ஸுக்ல பக்ஷம்

(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)

2. க்ருஷ்ணபக்ஷம்

(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)

சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.

க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.

இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.

 

திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும் :

 

1. பிரதமை

2. துதியை

3. திருதியை

4. சதுர்த்தி

5. பஞ்சமி

6. ஷஷ்டி

7. சப்தமி

8. அஷ்டமி

9. நவமி

10. தசமி

11. ஏகாதசி

12. துவாதசி

13. திரையோதசி

14. சதுர்த்தசி

15. பெளர்ணமி (அ) அமாவாசை.

 

வாஸரங்கள் (நாழ்) ஏழு ஆகும் :

 

1. ஆதித்யவாஸரம்

2. சோமவாஸரம்

3. மங்களவாஸரம்

4. ஸெளமியவாஸரம்

5. குருவாஸரம்

6. சுக்ரவாஸரம்

7. மந்தவாஸரம் (அ) ஸ்திரவாஸரம்

 

நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்:

 

1. அஸ்வினி

2. பரணி

3. கர்த்திகை

4. ரோகினி

5. மிருகசீரிஷம்

6. திருவாதிரை

7. புனர்பூசம்

8. பூசம்

9. ஆயில்யம்

10. மகம்

11. பூரம்

12. உத்திரம்

13. ஹஸ்த்தம்

14. சித்திரை

15. சுவாதி

16. விசாகம்

17. அனுஷம்

18. கேட்டை

19. மூலம்

20. பூராடம்

21. உத்ராடம்

22. திருவோணம்

23. அவிட்டம்

24. சதயம்

25. பூரட்டாதி

26. உத்திரட்டாதி

27. ரேவதி.

 

கிரகங்கள் ஒன்பது ஆகும்:

 

1. சூரியன்(SUN)

2. சந்திரன்(MOON)

3. அங்காரகன்(MARS)

4. புதன்(MERCURY)

5. குரு(JUPITER)

6. சுக்ரன்(VENUS)

7. சனி(SATURN)

8. இராகு(ASCENDING NODE)

9. கேது(DESCENDING NODE)

 

இராசிகள் மற்றும் இராசி அதிபதிகள்:

 

இராசிகள் பண்ணிரெண்டு ஆகும் ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும், நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.

நட்சத்திரங்கள், இராசி, இராசி அதிபதி.

 

அஸ்வினி, பரனி, கர்த்திகை முன் ¼

மேஷம்

செவ்வாய்

 

கர்த்திகை பின்3/4, ரோகினி, மிருகசீரிஷம் முன்1/2

ரிஷபம்

சுக்கிரன்

 

மிருகசீரிஷம்பின் 1/2, திருவாதிரை, புனர்பூசம் முன் 3/4

மிதுனம்

புதன்

 

புனர்பூசம் பின் ¼, பூசம், ஆயில்யம்

கடகம்

சந்திரன்

 

மகம், பூரம், உத்திரம் முன் ¼

சிம்மம்

சூரியன்

 

உத்திரம் பின்3/4, ஹஸ்தம், சித்திரை முன்1/2

கன்னி

புதன்

 

சித்திரை பின்1/2, சுவாதி, விசாகம் முன்3/4

துலாம்

சுக்கிரன்

 

விசாகம் பின்1/4, அனுஷம், கேட்டை

விருச்சிகம்

செவ்வாய்

 

மூலம், பூராடம், உத்திராடம் முன்1/4

தனுசு

குரு

 

உத்திராடம் பின் 3/4, திருவோணம், அவிட்டம் முன்1/2

மகரம்

சனி

 

அவிட்டம் பின்1/2, சதயம், பூரட்டாதி முன்3/4

கும்பம்

சனி

 

பூரட்டாதி பின்1/4, உத்திரட்டாதி, ரேவதி

மீனம்

குரு

 

சோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் குணம் எந்த தெய்வத்தின் குணத்தை ஒத்துள்ளது என கண்டறிந்து, அந்த தெய்வத்தை அதிதேவதையாக கூறியுள்ளனர். ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு கிரகத்திற்கு அதிதேவதை.

 

சூரியன் - சிவன், சந்திரன் - பார்வதி

 

பரமனும், பார்வதியும் படியளப்பவர்கள் என்ற வழக்கு உண்டு. அதுபோலவே அனைத்திற்கும் மூலகாரணாய் சூரியன் இருக்கிறான். அவன் கொடைக்கு நிகரில்லை. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அவன் உதவியின்றி பிராணன் கிடைப்பதில்லை. ஆகவே சூரியன் சிவனானார்.

பரமன் மனைவி பார்வதி, சந்திரனுக்கு அதிதேவதை. பூமியை தாயைப் போல் குளிரூட்டும் கிரகம். சூரியனிடத்தில் வெப்பத்தை பெற்று குளிர்ந்த ஒளியாய் தந்து நீர் நிலைகளை பொங்க வைக்கும்.

இந்த இரண்டுகிரகங்களின் நிலை சாதகத்தில் - நல்ல முறையில் இருந்தால், ஒரு ஜாதகர் தன் இன பந்துக்களுடன் இனிதே வாழ்வான் என்பது உறுதி.

 

செவ்வாய் : சுப்ரமண்யர்

 

ஜாதகத்தில் வீரத்திற்கு இன்றியமையாதது செவ்வாய் பலம். இரும்பு கிரகம். உடல் பலத்திற்கு இன்றியமையாதது செவ்வாயின் நிலை.

வீரத்தில் சிறந்த தெய்வம் முருகன். சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சி தெய்வமும் இல்லை என்பது பழமொழி. அசுரர்களை தேவர்களுக்காக வதம் செய்த தெய்வம் முருகன். ஆதலால் செவ்வாய்க்கு அதிதேவதை சுப்பிரமணியர்.

 

புதன் : விஷ்ணு

 

ஒரே நேரத்தில் இருவேறு குணத்தைக் கொண்ட கிரகம். தற்சுழற்சி குறைவானது. தெய்வத்தில் இரு நிறம் கொண்ட தெய்வம் விஷ்ணு. அதுபோலவே ஒருபுறம் கடும் வெப்பமும் மறுபுறம் கடும் குளிரும் கொண்டது. எந்த கிரகத்தின் நேர்கோட்டில் 10 பாகைக்குள் உள்ளதோ அதன் குணத்தை பிரதிபலிக்க வல்லது. நியாயம் தவறாமல் கடமையை செய்வதற்கு இன்றியமையாதது இதன் நிலை.

 

குரு : பிரம்மா, தட்சிணாமூர்த்தி (குரு)

 

ஜாதகத்தில் கல்வி, கேள்வி, கீர்த்திக்கு வழிவகுக்கும் கிரகம். தற்சுழற்சி அதிகம் உள்ளது. இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடமே விருத்தியாகும். ஆசிரியர் போன்ற குணத்தை உடையது.

 

சுக்ரன் : லக்ஷ்மி, இந்திரன்

 

ஒரு ஜாதகத்தில மற்ற கிரகங்கள் நிலை கெட்டிருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய வல்ல கிரகம் சுக்ரன். களத்திர காரகன். லக்ஷ்மியை போல் ஐஸ்வர்யத்தை கொடுக்கக் கூடிய கிரகம். ராஜயோகத்தையும், சுகபோக வாழ்க்கையையும், மனைவி வழி சொத்து சேர்க்கையையும் மனைவியின் குண நலத்தையும் கொடுக்கும். 8ம் இடத்திற்கு உரிய கிரகம். இந்திரன் குணத்தைக் கொண்டது. மழைக்கு காரணமான குளிர்ந்த கிரகம்.

 

சனி : எமன், சாஸ்தா

 

உஷ்ணத்தை பிரதிபலிக்கும் கிரகம். ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும். சனி 0 பாகையில் குளிர்ச்சியை கொடுக்கும். அதனால் சாஸ்தாவிற்கு நிகராக சொல்லப்பட்து. ஆனால் பார்வை உக்கிரமானது. கொடுப்பதிலும், அழிப்பதிலும் சனிக்கு நிகர் சனியே வேறு கிரகம் இல்லை (ஆயுள் காரகன்).

 

ராகு: காளி, துர்கை

 

கருமாரியின் நிழல் கிரகம். சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் இதன் 0 பாகையில் சாதகத்தில் வரும்போது பலன் தருவது அரிது. கருமை நிறம் உடையது. ராகு, கேதுக்கு இடையில் மற்ற கிரகங்கள் உடைபட்டு விட்டால் கால சர்ப்ப யோகம், தோஷம் என்று கூறுவதுண்டு. சாதகனின் பிற்பட்ட காலங்களிலேயே பலன் கொடுக்கும். இளம் வயதில் அவதிகளை சந்திக்க நேரும். துஷ்ட குணத்துடன் கொடுக்க வல்ல கிரகம்.

 

கேது : விநாயகர், சண்டிகேஸ்வரர்

 

ஞானத்தை கொடுக்கும் கிரகம். ஒரு ஜாதகன் பிறக்கும்போது 0 பாகை ஜன்மத்திலிருந்தால் அந்த ஜாதகனுக்கு சித்தியையும் முக்தியையும் கொடுக்கும். நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாமலிருந்து பணி செய்வதில் வல்லமையைத் தரும். சோம்பல் சேர்ந்த திடீர் மாற்றத்தை தரவல்ல கிரகம். (நிழல் கிரகம்).

 

உடலுக்கு ஒன்பது வாசல் :

 

மனிதர்களுக்கு ஒன்பது வாசல் உள்ளது அவை ஒவ்வொன்றையும் கிரகம் ஆட்சி செய்கின்றது அவையானவன

 

1, சூரியன்-இடக்கண்

2, சுக்கிரன்-வலக்கண்வாசல்

3, சந்திரன்-வாய் வாசல்

4, புதன்-இடமூக்கு வாசல்

5, செவ்வாய்-வலமூக்கு வாசல்

6, வியாழன்-வலக் காதுவாசல்

7, சனி-இடக்காது வாசல்

8, இராகு-மலவாசல்

9, கேது-சிறுநீர் வாசல் ஆகும்

 

இவற்றுள் அடைக்கப்பட்ட வாயில் ஆகிய கொப்பூழை குளிகன் அல்லது மாந்தி ஆட்சி செய்கிறது! உயிர் பிரியும்போது எந்தத் திசை, எந்தப் புத்தி நடக்கிறதோ அதற்குரிய வாயில் வழியாக உயிர் பிரியும்!

 

நவரத்தினங்கள்:

 

1. கோமேதகம்

2. நீலம்

3. பவளம்

4. புஷ்பராகம்

5. மரகதம்

6. மாணிக்கம்

7. முத்து

8. வைடூரியம்

9. வைரம்.

 

பூதங்கள் ஐந்து வகைப்படும் :

 

1. ஆகாயம்-வானம்

சப்தம்

ஓசை

2. வாயு-காற்று

ஸ்பர்ஷம்

தொடு உணர்வு

3. அக்னி-நெருப்பு(தீ)

ரூபம்

ஒளி(பார்த்தல்)

4. ஜலம்-நீர்

ரஸம்

சுவை

5. பிருத்வி-நிலம்

கந்தம்

நாற்றம்(மணம்)

 

மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும் :

 

1. கொலை

2. பொய்

3. களவு

4. கள் அருந்துதல்

5. குரு நிந்தை.

 

வீடு பேறுகள் பதினாறு வகைப்படும்:

 

1. புகழ்

2. கல்வி

3. வலிமை

4. வெற்றி

5. நன்மக்கள்

6. பொன்

7. நெல்

8. நல்ஊழ்

9. நுகர்ச்சி

10. அறிவு

11. அழகு

12. பொறுமை

13. இளமை

14. துனிவு

15. நோயின்மை

16. வாழ்நாள்..

 

புராணங்கள் பதினெட்டு வகைபடும்,

 

1. பிரம்ம புராணம்

2. பத்ம புராணம்

3. பிரம்மவைவர்த்த புராணம்

4. லிங்க புராணம்

5. விஷ்ணு புராணம்

6. கருட புராணம்

7. அக்னி புராணம்

8. மத்ஸ்ய புராணம்

9. நாரத புராணம்

10. வராக புராணம்

11. வாமன புராணம்

12. கூர்ம புராணம்

13. பாகவத புராணம்

14. ஸ்கந்த புராணம்

15. சிவ புராணம்

16. மார்க்கண்டேய புராணம்

17. பிரம்மாண்ட புராணம்

18. பவிஷ்ய புராணம்.

 

இதிகாசங்கள் முன்று வகைப்படும்.:

 

1. சிவரகசியம்

2. இராமாயணம்

3. மஹாபாரதம்.💐🌹


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

பொது தகவல்கள்: அறிமுகம் : அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது. - குறிப்புகள் [ ] | General Information: Introduction : Everyone needs to know. - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்