ஜைகீஷவ்யர் என்ற முனிவர் ஆசைகளை முழுமையாக துறந்தவர்.
எல்லாம் சிவமயம்
ஜைகீஷவ்யர் என்ற முனிவர்
ஆசைகளை முழுமையாக துறந்தவர்.
இன்பத்தையும்
துன்பத்தையும் சமமாகக் கருதுபவர்.
தனக்கு துன்பம்
செய்பவர்களையும்
மன்னிக்கும் அருங்குணம்
கொண்டவர்.
கோபம் என்ற சொல்லையே அவர்
அறிந்ததில்லை.
இப்படிப்பட்ட மகாஞானியை
சிவபெருமானுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது.
மாறுவேடத்தில் சிவலோகம்
வந்து தன்னை எந்நேரமும் வந்து தரிசித்து செல்ல
அனுமதி அளித்தார்.
ஒருமுறை, சிவபெருமானும்,
பார்வதிதேவியும் பொருள் என்றால் என்ன? என்பது பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
சிவன் அவளிடம், இவ்வுலகிலுள்ள எல்லாப் பொருளும் நானே.
நான் அசைந்தால் தான் இந்த
அகிலம் அசையும்,
காற்று, கடல்,
வான்,
நெருப்பு,
பூமி,
மக்கள் எல்லாமே நான் தான், என்றதும், பார்வதி கோபித்தாள்.
சிவனாகிய தாங்கள் தான்
ஜீவன் என்றால், சக்தியாகிய எனக்கு இங்கே என்ன வேலை?
நான் பொருள் இல்லையா?
இல்லை, தாங்கள் என்னை பொருட்படுத்தவே இல்லையா? என்றாள் சீற்றத்துடன்.தேவி!
கோபிக்காதே! என்னுள்
அடங்கிய பொருள்களில்
நீயும் ஒருத்தி, என்றார் சிவன்.
அப்போது, ஒரு குரல் கேட்டது.
சிவன் சொல்வதே உண்மை
தேவி!
சக்தி என்பது பொருளில்
அடங்கி இருக்கும் ஒரு வஸ்து.
அந்த சிவத்தினாலேயே
சக்திக்கு மதிப்பு.
உயிரின்றி சக்தி
செயல்படாது, என்றார்.
பார்வதியால் அந்தக்
குரலைத் தான் கேட்க முடிந்ததே தவிர, அது யாரென்று அறிந்து
கொள்ள முடியவில்லை.
லோகநாதரே! நம் பேச்சினூடே
குறுக்கிட்டவர் யார்?
என்னைப் பற்றி இத்தகைய
விமர்சனம் செய்ய அவருக்கு என்ன துணிச்சல்!
மனைவியை ஒருவன்
விமர்சிக்கும் போது,
நீங்களும் அமைதியாக
இருந்தீர்களே!
சொல்லுங்கள், அது
யாரென்று? என்று கொந்தளித்தாள்.
சிவன் அவளிடம் அன்பே!
கோபம் கொள்ளாதே.
அவர் எனது பக்தர்.
சிறந்த தபஸ்வி.
அவருக்கு ஆசை என்பதே
இல்லை.
என்
பக்தனாயிருப்பதற்குரிய அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளன.
எனவே, அவர் என்னை
அடிக்கடி தரிசிக்க
வருவார்.
இப்போது அவர் இங்கு
இல்லை.
உனக்குரிய பதிலைச்
சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
அவரை நான் தண்டிக்க
இயலாது, என்று பதிலளித்தார்.
அப்படியா! அந்த முனிவரின்
ஆசையற்ற தன்மையை பரிசோதிக்க நான் விரும்புகிறேன்,
கிளம்புங்கள், என்றாள் பார்வதி.
இருவரும் ரிஷப வாகனத்தில்
அவரது இருப்பிடம் வந்தனர்.
அப்போது, அந்த முனிவர் எளிய ஆடையுடன் இருந்தார்.
இன்னொரு ஆடை காய்ந்து
கொண்டிருந்தது.
அது கந்தலாய்
கிழிந்திருந்தது. சிவபெருமான் மட்டும் அவர் முன் காட்சி தந்தார்.
அது காய்ந்தவுடன்
தைப்பதற்காக ஊசியில் நூல்கோர்க்க முயன்று கொண்டிருந்தார்.
முனிவரே! உமக்கு ஏதாவது
செய்ய வேண்டுமென விரும்புகிறேன்.
கேளும், என்றார்.
ஐயனே! நான் மிகுந்த
திருப்தியுடன் இருக்கிறேன்.
எதெல்லாம் எனக்கு தேவையென
நினைக்கிறேனோ அவையெல்லாம் தந்து விட்டீர்.
வேறு எதுவும் தேவையில்லை, என்ற முனிவரிடம்,
தபஸ்வியே! நீர் வேறு நான் வேறு அல்ல, என்ன வேண்டுமானாலும்
கேளுங்கள், என்று ஆசையைத் தூண்டினார் சிவன்.
இதற்கும் ஜைகீஷவ்ய
முனிவர் மயங்கவில்லை.
சரி...இந்த ஊசியில்
நூலைக் கோர்த்து தந்து விட்டு கிளம்புங்கள், என்றார்.
ஆசையே இல்லாத அவரைப்
பார்த்து மறைந்திருந்த பார்வதி வெளிப்பட்டாள்.
முனிவரே! தங்களுக்கு எந்த
வித ஆசையுமில்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.
உங்களை போன்றவர்கள்
தெய்வங்களான எங்களுக்கும் அறிவுரை சொல்லத் தகுதியானவர்கள் தான்.
சிவத்துக்குள் அடங்கிய
பொருளே சக்தி என்பதை ஒப்புக்கொள்கிறேன், என்று சொல்லி, அவரை வாழ்த்தி விட்டு கிளம்பினாள்.
ஆம் ஒவ்வொரு சிவராத்திரி
திருநாளிலும் சிவத்துக்குள் நாம் ஒடுங்க வேண்டும்.
எல்லாம் சிவமயம் என்பதை
உணர்ந்து, அனைத்து உயிர்களையும் இறைவனாகவே கருத வேண்டும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : எல்லாம் சிவமயம் - பக்தி கதை [ ] | Spiritual Notes : Everything is Shivam - Devotional story in Tamil [ ]