சமையல் என்பது முழு மனத்துடன் ஈடுபாடு காட்டி செய்யவேண்டிய ஒரு அருமையான கலை. பல்வேறு நுணுக்கங்கள் அதில் அடங்கியுள்ளன. சின்னச்சின்ன விஷயங்கள் கூட உங்கள் சமையலை மிகச் சிறப்பாக்கிவிடும். இல்லத்தரசிகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக 20 பயனுள்ள குறிப்புகளை இங்கு காணலாம்!!!
இல்லத்தரசிகளுக்குப் பயனுள்ள சமையல் குறிப்புகள் இருபது இதோ...
சமையல் என்பது முழு மனத்துடன் ஈடுபாடு காட்டி செய்யவேண்டிய ஒரு
அருமையான கலை. பல்வேறு நுணுக்கங்கள் அதில் அடங்கியுள்ளன. சின்னச்சின்ன விஷயங்கள்
கூட உங்கள் சமையலை மிகச் சிறப்பாக்கிவிடும். இல்லத்தரசிகளுக்கு உதவியாக இருக்க
வேண்டும் என்பதற்காக 20 பயனுள்ள குறிப்புகளை இங்கு காணலாம்!!!
1. வெங்காய பக்கோடா
செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து
பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்!!!
2. சப்பாத்தி செய்து
எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து
ஈரமாகாமல் இருக்கும்!!!
3. சர்க்கரைப் பொங்கல்
செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் பொங்கல் மிகவும்
சுவையாக இருக்கும்!!!
4. தேங்காய்த் துருவல்
மீதியானால் அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப்
பயன் படுத்திக் கொள்ளலாம்!!!
5. கேசரி பால்கோவா
தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி
பிடிக்காமல் எளிதாக கிளறலாம்!!!
6. ரவா தோசை செய்யும்
போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு
மொறுவென்றிருக்கும்!!!
பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி
வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்!!!
7. தோசை மாவு பொங்கல்
போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாக
இருக்கும்!!!
8. பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு
ஆகியவை சேர்த்து கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால் கசப்பு காணாமல்
போய்விடும்!!!
9. இட்லி பொடி
தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால்
இட்லி பொடி வாசனையாக இருக்கும்!!!
10. தேங்காய் பர்பி
செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து
தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு வில்லை
போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்!!!
11. உளுந்துவடை செய்யும்
போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால் வடை எண்ணெய்
குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்!!!
12. மிளகாய் வறுக்கும்
போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்!!!
13. பூரிக்கு மாவு
பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி
ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்!!!
14. வாழைக்காய் மற்றும்
வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென பால் ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை
தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்!!!
15. தோசைக்கு மாவு
ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு
மொறு மொறுவென இருக்கும்!!!
16. எலுமிச்சை தேங்காய்
புளி தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாளத்தில் போட்டு
நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக
இருக்கும்!!!
17. துவரம் பருப்புக்கு
பதிலாக பொட்டுக்கடலையுடன் வரமிளகாய் பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப்
பொடி செய்தால் பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்!!!
18. தக்காளி குருமா
செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றவும் குருமா வாசனையுடன்
சுவையாகவும் இருக்கும்!!!
19. உருளைக்கிழங்கு
வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக
வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்!!!
20. தோசைக்கு மாவு
ஆட்டும்போது ஒரு கைப்பிடி ரவை சேர்த்து அரைத்தால் தோசை வார்க்கும்போது நன்கு
சிவந்து மொறுமொறுவென வரும். சாப்பிடவும் சுவையாக இருக்கும்!!!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
சமையல் குறிப்புகள் : இல்லத்தரசிகளுக்குப் பயனுள்ள சமையல் குறிப்புகள் இருபது இதோ... - குறிப்புகள் [ ] | cooking recipes : Here are twenty helpful recipes for housewives… - Tips in Tamil [ ]