ஆசைப் பட்டதை அடைவது எப்படி?

குறிப்புகள்

[ ஊக்கம் ]

How to get what you want? - Tips in Tamil

ஆசைப் பட்டதை அடைவது எப்படி? | How to get what you want?

ஒரு அற்புத, ஆன்மீக வழிகாட்டுதல் திடீரென்று, ஒரு மலையாள பத்திரிகை கொடுத்து படிக்க சொன்னால் , உங்களால் படிக்க முடியுமா? முடியாது இல்லையா... ஏன்?

ஆசைப் பட்டதை அடைவது எப்படி?

 

ஒரு அற்புத, ஆன்மீக வழிகாட்டுதல்

 

திடீரென்று, ஒரு மலையாள பத்திரிகை கொடுத்து படிக்க சொன்னால் , உங்களால் படிக்க முடியுமா?

 

முடியாது இல்லையா... ஏன்?

 

மலையாளம் படிக்கலை, அதனாலே நமக்கு புரியலை.

 

அந்த மாதிரி இறைவன் ஒருவர் இருக்கிறதை நாம உணர்றதுக்கு நமக்கு உதவுவது தான், கோவில்கள், மந்திரங்கள், தியானம் இப்படிப் பல விஷயங்கள்.

 

நீங்க ட்ரெயின்லே போய்க்கிட்டு இருக்கிறீங்க . உங்களுக்கு ஹிந்தி தெரியும்னு வைச்சுப்போம்.. பக்கத்திலே ரெண்டு பேர் ஹிந்தி பேசுறாங்க..

 

என்னதான் நீங்க ஒரு புத்தகத்தை படிச்சுக்கிட்டு இருந்தாலும், உங்க காது,

மனசு அவங்க பேசுறதை கவனிக்க ஆரம்பிக்கும்.. இல்லையா?

 

நீங்க எதோ ஒரு வேலையா இருக்கிறீங்க ... அப்போ, உங்க பேர் சொல்லி, யாரோ ஒருவர் கூப்பிட்டதும், திரும்பி பார்க்கிறீங்க இல்லையா?

 

அதே மாதிரி - இறைவனை, அவனது கோவிலில் சென்று, நீங்கள் மந்திரங்களை சொல்லி வேண்டும்போது - அவனும் உங்கள் வேண்டுதலுக்கு செவி சாய்ப்பான்..

 

ராகு கால வேளையில் - லலிதா சஹஸ்ரநாமமோ, அல்லது சிவ ஆலயங்களில் ஸ்ரீ ருத்ரமோ, சமகமோ சொல்லும்போது - நீங்கள் அந்த பரம்பொருளால் நேரடியாக கவனிக்கப்படுவீர்கள்.

ஒரு கைதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது சில விஞ்ஞானிகள் அந்தக் கைதியை கொண்டு சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்று நினைத்து அதற்காக அனுமதி பெற்றார்கள். 

 

கைதிக்கு தூக்கிலிடப்படுவதற்குப் பதிலாக விஷ நாகம் தாக்கி கொல்லப்படுவார் என்று முடிவானது.

 

ஒரு பெரிய விஷப்பாம்பு அவருக்கு முன்னால் கொண்டு வரப்பட்டது.

 

அதை அவர்கள் கைதியின் கண்களை இறுக மூடி, கைதியின் நாற்காலியில் நாகம் கட்டப்படுவதை அந்தக் கைதி உணரும்படி கட்டினர். 

 

அதன்பின் அந்தக் கைதி இரண்டு சிறிய ஊக்குகளால் பாம்பு கொத்துவதைப் போலவே குத்தப்பட்டார். 

 

அந்தக் கைதி இரண்டு நிமிடங்களில் துடிதுடித்து இறந்தார்.

 

பிரேத பரிசோதனையில் கைதியின் உடலில் பாம்பு விஷத்தை ஒத்த விஷம் இருந்தது தெரிய வந்தது.

 

அந்த விஷம் எங்கிருந்து வந்தது ? அல்லது கைதியின் மரணத்திற்கு என்ன காரணம்?

 

அந்த விஷம் மன அதிர்ச்சியால் அவரது சொந்த உடலால் தயாரிக்கப்பட்டது !

 நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நேர்மறை அல்லது எதிர்மறை சக்தியை உருவாக்குகிறது, அதன்படி உங்கள் உடல் ஹார்மோன்களை உருவாக்குகிறது.

 

90 சதவிகித நோய்களுக்கான மூல காரணம் எதிர்மறை எண்ணங்களால் உருவாகும் நோயெதிர்ப்பு குறைதல்.

 

நேர்மறையாக எண்ணங்களை வைத்திருந்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். முடிவில் என்ன சொல்ல வருகிறது என்றால் முடியாததை கூட முடிக்கிற சக்தி நேர மறை எண்ணங்களுக்கு உண்டு. நீங்கள் ஆசை பட்டதை மனதில் நேர் மறையுடன் மனதில் எண்ணி செயல்பட்டால் அனைத்தும் சாத்தியமே!

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் நமது  ஆன்மீக பயணம் தொடரும்!

இறைபணியில்

அன்புடன்....

🌷தமிழர் நலம்🌷

💥நன்றி!

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

🌷🌷முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

 

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்...

 

வாழ்க 🙌 வளமுடன்

 

அன்பே🔥இல்லறம்

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

💦💦💦💦💦💦💦💦💦💦💦💦

 

ஊக்கம் : ஆசைப் பட்டதை அடைவது எப்படி? - குறிப்புகள் [ ஊக்கம் ] | Encouragement : How to get what you want? - Tips in Tamil [ Encouragement ]