ஒரு பெண் தினமும் கோவிலுக்குச் செல்வாள்!!! ஒரு நாள் அந்த பெண் அர்ச்சகரிடம் சொன்னாள், இனி நான் கோவிலுக்கு வரமாட்டேன். என்றாள்???
கோவிலுக்கு எப்படி போக வேண்டும்?
ஒரு பெண் தினமும் கோவிலுக்குச்
செல்வாள்!!! ஒரு நாள் அந்த பெண் அர்ச்சகரிடம் சொன்னாள், இனி நான் கோவிலுக்கு வரமாட்டேன். என்றாள்???
அர்ச்சகர்... ஏன்? என்று
கேட்டார்....
அப்போது அந்தப் பெண் சொன்னாள், கோயில்
வளாகத்தில் மக்கள் செல் போனில் எதைப்பற்றியோ பேசுவதை நான் பார்க்கிறேன்.
கிசுகிசுக்கும் இடமாக கோயிலை சிலர்
தேர்வு செய்துள்ளனர்.
சிலர் வழிபடுவதுபோல் , அதிகம்
பாசாங்கு செய்கிறார்கள்.ஏன்று அந்த பெண் கூற
அர்ச்சகர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.....
பிறகு சொன்னார் -- சரி! ஆனால் நீங்கள்
உங்கள் இறுதி முடிவை எடுப்பதற்கு முன் நான் சொல்வதை செய்ய முடியுமா?
பெண் சொன்னாள் - சொல்லுங்கள் என்ன செய்ய வேண்டும்?
அர்ச்சகர் சொன்னார் -- ஒரு கண்ணாடி
குவளையில் தண்ணீர் நிரப்பி 2 முறை கோவில் வளாகத்திற்குள் வலம் வர
வேண்டும்.....
ஆனால் தண்ணீர் தளும்பி கீழே விழக்கூடாது
என்பதுதான் நிபந்தனை.
பெண் சொன்னாள் -- என்னால் இதைச் செய்ய
முடியும்....
பிறகு சிறிது நேரத்தில் அந்தப்
பெண்ணும் இதையே செய்தார்.
அதன்பிறகு கோவில் அர்ச்சகர் பெண்ணை 3 கேள்விகள்
கேட்டார்.
(1) கையில் கண்ணாடி குவளையில் நீர் கொண்டு வலம் வரும்போது யாராவது
செல்போன் பேசுவதை நீங்கள் பார்த்தீர்களா?
(2) கோவிலில் யாராவது கிசுகிசுப்பதை நீங்கள்
பார்த்திருக்கிறீர்களா?
(3) யாராவது பாசாங்குத்தனம் செய்வதை நீங்கள் பார்த்தீர்களா?
பெண் சொன்னாள் -- இல்லை நான் எதையும்
பார்க்கவில்லை.
அப்பொழுது பூசாரி சொன்னார் ---
நீங்கள் வலம் வரும் போது உங்கள் கவனமெல்லாம் கண்ணாடி குவளை மீதுதான் இருந்தது.
அதனால் தண்ணீர் சிந்தாதபடி உங்கள்
கவனம் இருந்ததால் நீங்கள் வேறு எதையும் கவனிக்க இயலவில்லை...
நீங்கள் இனி கோவிலுக்கு
வரும்போதெல்லாம் தெய்வம் மீது மட்டும் கவனம் வையுங்கள்....
அப்போது,
எதையும் காண முடியாது,
எதுவும் உங்கள் கண்ணுக்கு தெரியாது,
எங்கும் தெய்வம் மட்டுமே தெரியும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : கோவிலுக்கு எப்படி போக வேண்டும்? - குறிப்புகள் [ ] | Spiritual Notes : How to go to the temple? - Tips in Tamil [ ]