காசி அன்னபூரணி என்ன அழகு! அம்பாள் தங்க நிற ஆடையில் தங்க கிரீடத்தில் ஜொலிக்கிறாள். அப்படியே மெய்மறந்து போகும்.
காசி அன்னபூரணி அம்பாள்
காசி அன்னபூரணி என்ன
அழகு! அம்பாள் தங்க நிற ஆடையில் தங்க கிரீடத்தில் ஜொலிக்கிறாள். அப்படியே
மெய்மறந்து போகும்.
வற்றாத உணவினை அளிக்கும்
அட்சயப் பாத்திரத்தை ஏந்தி இருப்பதால் தான் சக்தி தேவி ‘அன்னபூரணி’ என்று
போற்றப்படுகிறாள். காசியில் உருவான கடும் பஞ்சத்தினை போக்கவே அன்னை சக்தி
திருமாலிடம் வேண்டி இந்த அட்சயப் பாத்திரத்தை பெற்று எல்லோருக்கும் உணவளித்து
வந்தாள். இந்த அன்னபூரணி கோயிலில் இன்றும் தொடர்ந்து காலை11 மணியளவில் தினமும்
அன்னதானம் நடைபெறுகிறது. நாட்டுக் கோட்டை நகரத்தார் மற்றும் பல சமூக ஸ்தாபனங்கள்
நிதி மற்றும் உணவு பண்டங்கள் தானமாக அளிக்கின்றனர்
.இமையாத வானவர்
குழாத்தினுக்கும், மற்றுமொரு மூவருக்கும் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) உலகில்
யாவருக்கும் அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் தங்க அன்னபூரணியாக
காசியில் அருளிபாலிகிறாள். சாம வேதத்தில் “அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” என்று
கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில்
இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
காசி அன்ன பூரணி
திருமாலே ‘அட்சய’ என்று
சொல்லி முதலில் உணவிட்டதால் இந்த பாத்திரம் அட்சயப் பாத்திரம் என்றானது.
பிரம்மனின் தலையைக் கொய்த சிவபெருமானின் கரத்தில் அந்த கபாலம் ஒட்டிக் கொண்டது.
எங்கெங்கோ சிவபெருமான் பிட்சாடனராக பிச்சை பெற்ற போதும் அந்த கபாலம் அவருடைய கையை
விட்டு நீங்கவே இல்லை. இறுதியில் அன்னபூரணி தமது பாத்திரத்தில் இருந்து பிச்சை
இட்டதும் அவரது கரத்தில் இருந்து கபாலம் நீங்கியது.
காசி அன்னபூரணி எப்படி
உருவானாள் தெரியுமா?
காசி நகரில் தேவதத்தன், தனஞ்செயன் என்ற
சகோதரர்கள் இருந்தனர். தேவதத்தன் பணக்காரன்; தனஞ்செயனோ தரித்திரன். ஒரு நாள் மணிகர்ணிகை துறையில்
நீராடி, விஸ்வேஸ்வரர்-
விசாலாட்சியை தரிசித்து விட்டு, பசியுடன் முக்தி மண்டபத்தில் அமர்ந்திருந்த தனஞ்செயன், தன்னை அன்ன தோஷம்
பீடிக்க என்ன காரணம் என்று யோசித்தவாறு உறங்கினான்.
அப்போது அவனது கனவில், சந்நியாசி ஒருவர் காட்சி
தந்து, ‘‘தனஞ்செயா, முன்பு காஞ்சியில்
சத்ருதர்மன் என்ற ராஜ குமாரன் இருந்தான். அவன் தோழன் ஹேரம்பன். ஒரு முறை அவர்கள்
வேட்டைக்குச் சென்று, காட்டில் வழி தவறி பசியால் பரிதவித்தனர். அப்போது அவர்களைக் கண்ட
முனிவர் ஒருவர்,
தமது ஆசிரமத்துக்கு
அழைத்துச் சென்று அவர்களை உபசரித்தார்.
முனிவர் வழங்கிய அன்னம்
சத்ருதர்மனுக்கு அமுதமாகத் தித்தித்தது. ஹேரம்பனுக்கோ, அது அற்பமாகத்
தோன்றியது. எனவே, சிறிதளவு உண்ட பின் மீதியை எறிந்து விட்டான். அப்படி அன்னத்தை
அவமானப் படுத்தியதாலேயே ஹேரம்பனான நீ இப்போது தனஞ்செயனாகியிருக்கிறாய். அன்னத்தை
அவமதிக்காத சத்ருதர்மன், தேவதத்தனாகி செல்வ வளம் பெற்றுள்ளான். நேம நியமங்கள் வழுவாமல்
விரதமிருந்து அன்னபூரணியைச் சரணடைந்து ஆராதித்தால் உனது அன்ன தோஷ நிலை மாறி அவள்
அருள் பெறலாம்!’’ என்றார்.
அதன் பின் தனஞ்செயன்
அன்னபூரணி விரத நேம நியமங்களை விசாரித்தபடி, காமரூபம் என்ற இடத்தை அடைந்தான். அங்கு மலையடிவார
ஏரிக்கரை ஒன்றில் தேவ கன்னியர்கள், பூஜையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை அணுகி யாரைப்
பூஜிக்கிறார்கள் என்று கேட்டான் தனஞ்செயன். பிரம்மனின் தலையைக் கொய்ததால், பிரம்மஹத்தி பீடித்த
சிவனின் பசிப்பிணி அகல பரமசிவன் கையிலுள்ள கபாலத்தில் அன்னபூரணி அவதாரம் எடுத்து, ஆதிசக்தி அன்னமிட்டு
கபாலத்தை நிரப்பினாள். அதனால் ஈசனின் பிரம்மஹத்தி நீங்கியது. அப்படிப்பட்ட
அன்னபூரணியை ஆராதிக்கிறோம் என்றனர் அவர்கள். மேலும் அவர்கள் தனஞ்செயனுக்கு விரத
முறைகளை விளக்கினர். அதன்படி காசிக்கு வந்த தனஜ்செயன், விரதம் இருந்து
அன்னபூரணியின் அருள் பெற்றான்.
‘‘இந்த விரதத்தை யார்
மேற்கொண்டாலும் அவர்களுக்கு அன்னத்துக்கு குறைவிருக்காது. உனக்கு அருள் பாலிக்க
நான் காசிக்கே வருகிறேன். ஈசனின் ஆலயத்துக்குத் தென்புறம் எனக்கு ஒரு கோயில்
எழுப்பினால்,
நான் அங்கு வந்து
அமர்கிறேன்!’’ என்றாள்.
அதனால் வற்றாத
செல்வத்துக்கு அதிபதியான தனஞ்செயன், அன்னபூரணிக்கு எழுப்பியதே இந்த அன்னபூரணி ஆலயம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : காசி அன்னபூரணி அம்பாள் - குறிப்புகள் [ ] | Amman: History : Kashi Annapoorani Ambal - Tips in Tamil [ ]