குழந்தைகளுக்கு நீர்கடுப்பு ,அடி வயிற்றில் வலி, சிறுநீரில் ரத்தம், கை-கால்களில் வீக்கம், உடம்பில் வீக்கம் ஆகியவை ஏற்படும் போது சிறுநீரக பிரச்சினை இருக்கிறது என்பதை எண்ண வேண்டும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக பிரச்சினைகள்!!!
குழந்தைகளுக்கு நீர்கடுப்பு ,அடி வயிற்றில் வலி, சிறுநீரில் ரத்தம், கை-கால்களில் வீக்கம், உடம்பில் வீக்கம் ஆகியவை ஏற்படும் போது சிறுநீரக பிரச்சினை இருக்கிறது என்பதை எண்ண வேண்டும்.
உடலில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. உடலின் கழிவுகளை
வெளியேற்றுவதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போதே 12-வது வாரத்தில் சிறுநீர் பிரிய தொடங்கி விடும்.குழந்தை
பிறந்த பின்பு முதல் 24 மணி நேரத்தில்
சிறுநீரகம் பிரிந்து விடும். அதற்கு மேல் பிரியாவிடில், ஒன்று சிறுநீர் உற்பத்தி குறைவு அல்லது பிரிந்த
நீர் வெளியேறாமல் ஏதோ தடை என்பதை அறியலாம்.
ஒருவருக்கு இதயத்தில் நோய் ஏற்பட்டு இதயம் சரிவர
இயங்காவிடில் அவருக்கு இதயத்துடன் சேர்ந்து சிறுநீரகங்களும் செயலிழக்கும் அபாயம் உள்ளது.
மூளையில் ரத்தக்கசிவோ, தலைக்காயமோ ஏற்படின் சிறுநீரகங்களுக்கு ரத்த ஓட்டம்
குறைந்து சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் உள்ளது.
சிறுகுழந்தைகளுக்கு சிறுநீர் பிரியும் போது அழுதல், பெரிய குழந்தைகள் எனில் நீர்கடுப்பு அடி வயிற்றில்
வலி, பசியின்மை, எடை கூடாமை,
அடிக்கடி வாந்தி, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம், கண்ணில் கீழ் இமையிலோ, சுற்றிலோ ஏற்படும் வீக்கம், கை-கால்களில் வீக்கம். உடம்பில் வீக்கம் ஆகியவை
ஏற்படும் போது சிறுநீரக பிரச்சினை இருக்கிறது என்பதை எண்ண வேண்டும்.
பிரச்சினை.
பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை சாதாரணமாக
சந்திக்கும் பிரச்சினை……
👉யூரின் இன்பெக்ஷன்,
👉சிறுநீர் பிரியும் போது வலி,
👉எடை குறைவு,
👉அடிவயிற்று வலி,
👉அடிக்கடி காய்ச்சல்,
👉சிறுநீர் பழுப்பு,
👉சிறுநீரில் ரத்தம்
போன்றவை அறிகுறியாக இருக்கலாம். சிலருக்கு சிறுநீரகத்தில்
கல் அடைப்பு, சவ்வு போன்ற உள் பிரச்சினைகள் இருப்பதால் அடிக்கடி
யூரின் இன்பெக்ஷன் ஏற்படலாம்.
💚 குழந்தைகள் படுக்க செல்வதற்கு 2 மணி முதல் 3 மணி நேரத்திற்கு முன் நீராகாரம் கொடுப்பதை தவிர்க்க
வேண்டும்.
💚 படுக்கைக்கு செல்வதற்கு முன்கண்டிப்பாக சிறுநீர்
கழிக்க செய்ய வேண்டும்.
💚 காபின் உள்ள பானங்களை தவிர்க்க வேண்டும்.
💚 நடு இரவில் குழந்தையை எழுப்பி சிறுநீர் கழிக்க
செய்யவேண்டும்.
💚 பகல் நேரங்களில் சிறுநீரை எவ்வளவு நேரம் தாக்கு
பிடிக்க முடியுமோ அவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்க செய்ய வேண்டும். அப்போது மூத்திரைப்பையில்
அதிக சிறுநீரை தாங்கும் திறன் அதிகரிக்கும்.
மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக பிரச்சினைகளை
பரிசோதனை செய்து, டாக்டர்களின்
அறிவுரைப்படி மருந்து எடுத்து கொள்ள வேண்டும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.
- தமிழர் நலம்
ஆரோக்கியம் குறிப்புகள் : குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக பிரச்சினைகள் - குறிப்புகள் [ ] | Health Tips : Kidney problems in children - Notes in Tamil [ ]