எலுமிச்சை விளக்கேற்றும் முறை

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Lemon Lighting Method - Tips in Tamil

எலுமிச்சை விளக்கேற்றும் முறை | Lemon Lighting Method

ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது ஆகும். பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

🔥எலுமிச்சை விளக்கேற்றும் முறை

 

ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது ஆகும்.

 

பழத்தை நறுக்கும்போது

 

ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

 

மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற

 

மந்திரத்தை சொல்ல வேண்டும்.

 

அதில் பஞ்சு திரியை இடவேண்டும்.

 

எண்ணெய் ஊற்றும்போது

 

க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

 

இந்தவிளக்கை துர்க்கையின் முன் வைத்து

 

ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று

 

சொல்லி தீபம் ஏற்ற வேண்டும்.

 

விளக்கேற்றிய பிறகு கோயிலை ஒன்பது

 

அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும்.

 

ஐம் என்ற சொல் சரஸ்வதியையும்,

 

க்ரீம் என்ற சொல் லட்சுமியையும்,

 

க்லீம் என்ற சொல் காளியையும் குறிக்கும்.

 

சாமுண்டாய விச்சே என்ற சொல்லுக்கு

 

சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம்,

 

காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும்

 

தெய்வமே என பொருள் .

 

தீராத நோய்கள் தீர

 

ஞாயிறு மாலை ராகு காலத்திலும்,

 

குடும்ப பிரச்சினைகள் தீர

 

செவ்வாய் ராகு காலத்திலும்,

 

குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு

 

வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும்,

 

துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு-2

 

அம்மனை தீபம் நோக்கியவாறு ஏற்றி

 

மனமுருகி வழிபட வேண்டும்.

 

ராகு காலம் என்பது

 

மூன்றே முக்கால் நாழிகை கொண்டது.

 

மூன்றே முக்கால் நாழிகை என்பதை

 

ஒரு முகூர்த்த காலம் என்பார்கள்.

 

ஒரு நாழிகைக்கு சர்வதேச கால அலகையால்

 

இருபத்து நான்கு நிமிடங்கள்.

 

ஒரு மணி நேரத்துக்கு இரண்டரை நாழிகைகள்.

 

ஆகவே மூன்றேமுக்கால் நாழிகை என்பது

 

ஒன்றரை மணி நேரமாகும்.

 

ராகு காலத்தில் செய்யப்படும்

 

பூஜைகளில் முக்கியமானது துர்க்கை பூஜை

 

இதில் மிகவும் விசேடமாகக் கருதப்படுவது

 

செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை.

 

இதற்குரிய தெய்வம் ‘மங்கல சண்டிகா’.

 

ஒன்பது வாரங்களுக்கு விரதமிருந்து செய்யப்படுவது இந்தப் பூஜை.

 

எலுமிச்சம்பழத்தை அறுத்து,

 

சாற்றைப் பிழிந்துவிட்டு,

 

அந்த மூடியைப் புரட்டிப்போட்டு,

 

அதில் நெய்யை ஊற்றி,

 

சிறிய திரியைப்போட்டு,

 

தீபம் வைத்து வழிபடுவது வழக்கம்.

 

அப்போது ‘மங்கல சண்டிகா ஸ்தோத்திரம்’ என்னும்

 

வழிபாட்டு மந்திரப் பாடலைப் படிப்பார்கள்.

 

‘மங்கலன்’என்பதுசெவ்வாய்கிரகத்தின்

 

பெயர்களில் ஒன்று.

 

ஆகவேதான் ‘மங்கல சண்டிகா’ என்ற பெயர்.

 

செவ்வாய்க்கும் ராகுவுக்கும் கிரகப் பதவி கிடைப்பதற்காக

 

அவர்கள் சண்டிகையை வழிபட்டார்கள் என்ற ஐதீகம்.

 

முறையே அவர்களுக்குரிய நாள், நேரம்

 

ஆகியவற்றில் இந்தப் பூஜையைச் செய்தால்

 

காரியசித்தியும் சண்டிகையின் பேரருளும் கிட்டும்

 

என்ற வரத்தையும் அவ்விருவரும்

 

சண்டிகையிடம் பெற்றார்கள் என்று

 

தேவீ பாகவதம் கூறும்.

 

ஆகவேதான் செவ்வாய் தோஷம்,

 

நாக தோஷம் போன்றவற்றிற்கும்

 

இந்தப் பூஜையை உரிய விரதமிருந்து செய்கிறார்கள்.

 

சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது.

 

இதற்கு காரணம் எலுமிச்சை

 

தேவ கனி என்பதால் ஆகும்.

 

மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு.

 

பலாவில் வியர்வை குற்றம் உண்டு.

 

வாழையில் புள்ளி குற்றம் உண்டு.

 

ஆனால் எலுமிச்சையில் மட்டும்

 

இவ்வித குற்றங்கள் இல்லை.

 

மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி

 

மற்ற கனிகளைக் காட்டிலும்

 

எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.✍🏼


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : எலுமிச்சை விளக்கேற்றும் முறை - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Lemon Lighting Method - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்