வயது 10 முதல் 25 வரை தீய பழக்கங்களை குறைத்துக் கொள் (கழித்தல்) நல்ல பழக்கங்களை கூட்டிக் கொள் (கூட்டல்) திறமையை பெருக்கிக் கொள் (பெருக்கல்) நல்ல வாழ்க்கையை வகுத்துக் கொள் (வகுத்தல்)
வாழ்க்கையே கணக்கு!
கணக்கே வாழ்க்கை !!
வயது 10 முதல் 25 வரை
தீய பழக்கங்களை
குறைத்துக் கொள் (கழித்தல்) நல்ல பழக்கங்களை கூட்டிக் கொள் (கூட்டல்) திறமையை
பெருக்கிக் கொள் (பெருக்கல்) நல்ல வாழ்க்கையை வகுத்துக் கொள் (வகுத்தல்)
வயது 26 முதல் 40 வரை
செலவை குறைத்துக் கொள்
(கழித்தல்) வருமானத்தைக் கூட்டிக் கொள் (கூட்டல்) சேமிப்பை பெருக்கிக் கொள்
(பெருக்கல்) செழிப்பான வாழ்க்கையை வகுத்துக் கொள்(வகுத்தல்)
வயது 41 முதல் 55 வரை
உணவை,
ஆசையை குறைத்துக் கொள் (கழித்தல்) நடையை கூட்டிக் கொள் (கூட்டல்)
சிரிப்பை பெருக்கிக் கொள் (பெருக்கல்) உடல் ஆரோக்கியத்திற்கான வழியை வகுத்துக்
கொள் (வகுத்தல்)
வயது 55 முதல்.....
பேராசையை,
கோபத்தை, பகைமையை குறைத்துக் கொள்
(கழித்தல்)
அன்பைக் கூட்டிக் கொள்
(கூட்டல்) ஆன்மீகத்தை பெருக்கிக் கொள் (பெருக்கல்) நோயற்ற வாழ்வை வாழ வழி
வகுத்துக்கொள் (வகுத்தல்)
+ × – ÷ இது தான் வாழ்க்கை
முறை......✍🏼🌹
நீங்கள் எதையாவது மாற்ற
விரும்பினால்...
முதலில் அந்த எண்ணத்தை
மாற்றுங்கள்.
நீங்கள் மாறாமல் எதுவும் மாறாது..!!✍🏼🌹
சந்தோஷமாக இருக்கும்
ஒருவரால், மற்றவர்களையும் சந்தோஷப்படுத்த முடியும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து:
நம்முடைய
பெரும்பான்மையான நேரம், மற்றவர்களை திருப்திப்படுத்துவதிலும் அவர்களை
சந்தோஷப்படுத்துவதிலும் சென்றுவிடுகிறது. அநேகமான முறை, நம்முடைய சிறந்த முயற்சி
இருந்தும்கூட, நாம் செய்ததை மனிதர்கள் பெரிதாக பாராட்டுவதில்லை.
யாரையாவது நாம் மிகவும் சிரமபட்டு திருப்திப்படுத்த முயற்சி செய்யும்போது, நாம் மனச்சோர்வடைந்து
பாதிக்கப்பட்டிருப்பதை உணர்கின்றோம்.
செயல்முறை:
நான் திருப்தியாக
இருப்பதற்கு நான் செய்யும் அனைத்தையும் பற்றி நான் அறிந்திருக்கும்போது, மற்றவர்களை
திருப்திப்படுத்துவதற்காக நான் எதையும் செய்வதில்லை. நான் செய்யும் முயற்சியை
பற்றி நான் திருப்தியாக இருக்கும்போது, மற்றவர்களின் அங்கிகாரத்தை நான்
சார்ந்து இல்லை. நான் செய்யும்
அனைத்தையும் நான் இரசிக்கும்போது, நான் உண்மையில் சந்தோஷமாக
இருக்கின்றேன். நான் அதிகமாக திருப்தியாக இருக்கும்போது, மற்றவர்கள் என்னுடைய
முயற்சியை அதிகமாக பாராட்ட ஆரம்பிப்பார்கள்.
எதிர்மறை
எண்ணங்களிலிருந்து விடுபட்டு இருப்பதென்றால் தண்டனையிலிருந்து
விடுபட்டிருப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து:
எதிர்மறையான சூழ்நிலைகள்
இருக்கும்பொழுதெல்லாம் நான் மிகவும் எதிர்மறையாக நடந்துகொள்ள முனைகின்றேன்.
அதிகமான எதிர்மறை எண்ணங்களை கொண்டிருப்பதுடன் அந்த நேரத்தில் அதிகமான சிரமத்தையும்
அனுபவிக்கின்றேன். அதன் பின்னர் சூழ்நிலையை குற்றம்சாட்டுவதோடு அதன்காரணமாக
தண்டைனையை அனுபவிப்பதாக உணர்கின்றேன்.
செயல்முறை:
என்னுடைய சொந்த எதிர்மறை எண்ணங்கள் மூலம் நான்
மிக பெரிய தண்டனையை அனுபவிக்கின்றேன் என்ற உண்மையை நான் புரிந்துகொள்வது
அவசியமாகும். எந்த அளவிற்கு இவ்விதமான எதிர்மறை எண்ணங்களிலிருந்து நான் என்னை
விடுவித்து கொள்கின்றேனோ அந்த அளவிற்கு என்னால் என்னை எவ்வித தண்டனையிலிருந்தும்
விடுவித்துக்கொள்ள முடியும்.
‘’ஊக்கம் தரும்
பயிற்சியும், முயற்சியும்’’
பயிற்சியும், முயற்சியும் தான்
பலருடைய மனங்களை ஆற்றல் பெற்ற மனங்களாக உருவாக்குகின்றன. அடிப்படையில் அனைத்து
மனிதர்களின் மனங்களும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்.*
முயற்சியும், முறையான பயிற்சியும்
இருந்தால் ஒருவர் தனது மனத்தையே மூலதனம் ஆக்கலாம்.* வாழ்க்கையிலும் வெற்றி பெறலாம்
மனதை
வளப்படுத்துவதற்கும் மூலதனம் ஆக்குவதற்க்கும் பலவற்றை கற்றுக் கொள்வதோடு முறையான
பயிற்சியும் இருக்க வேண்டும்.*
முயற்சி செய்யாமல்
வெற்றி கிடைக்காது, அதே போல் முயற்சி செய்பவர்கள் எல்லாம் வெற்றி பெறுவது
இல்லை.*
திட்டமிட்டு நாம்
முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும். தோல்விகள் கூட நல்ல அனுபவங்களைத் தரும்.*
அதோடு, வெற்றிக்கான பாதையில்
மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலும் உங்களுக்கு இருக்கிறது.*
எனவே வெற்றியைப் போலவே
அதன் பாதையும் முக்கியம் தான்*
புகழ் பெற்ற வயலின்
இசைக் கலைஞர் படேர்வஸ்கி அவர் புகழின் உச்சியில் இருந்தபோதிலும் தினமும் 10 முதல் 12 மணி நேரம் வயலின்
இசைத்துப் பயிற்சி செய்வார்.*
ஒரு முறை அவரது நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரிடம் வாசிக்கும்
வயலின் கலைஞர் ஒருவர் ''உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?'' என்று கேட்டார்.*
அதற்கு படேர்வஸ்கி.
'' எனது வெற்றியின் ரகசியம்
தினமும் பயிற்சி செய்வது தான். நான் ஒரு
நாள் பயிற்சி செய்யவில்லை என்றல் அதனால் ஏற்படும் மாற்றங்களை என்னால் அறிய
முடியும்.*
நான் இரண்டு நாட்கள்
பயிற்சி செய்யவில்லை என்றால் அதை எனது விமர்சகர்கள் கண்டு பிடித்து விடுவார்கள்.*
நான் மூன்று நாட்களுக்கு
மேல் பயிற்சி செய்யவில்லை என்றால் அதை இந்த உலகமே அறிந்து கொள்ளும் என்று
கூறினார்.*
எந்தத் துறையிலும்
ஒருவர் வெற்றியாளராக திகழ வேண்டுமானால், அவர் தனது பணியில் தொடர்ந்து
பயிற்சி செய்ய வேண்டும்.*
அப்போது தான் அவரால்
தனது வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.*
உழவுக் கருவியைத்
தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.. இல்லை என்றால் அது துருப்பிடித்து விடும்.*
அது போலத்தான் தொடர்ந்து
ஈடுபடும் கலையிலோ, விளையாட்டிலோ பயிற்சி செய்ய வேண்டும். இல்லை என்றால்
அவர்கள் ஈடுபடும் செயலில் திறமை மங்கி விடும்.*
உங்களுக்கு 2012 ல் நடந்த ஒலிம்பிக்கில்
100 மீட்டர் ஓட்டப்
பந்தயத்தில் உலக சாதனை படைத்த உசேன் போல்ட் பற்றி நீங்கள் அறிந்து இருப்பீர்கள்*
அவர் 9.63 வினாடிகளில் 100 மீட்டரைக் கடந்தார்.
அவர் ஒரு வினாடியையும் வீணடிக்காமல் தொடர்ந்து பயிற்சி செய்ததால் தான் சில நொடிகளில்
அந்த சாதனையை செய்ய முடிந்தது.*
வாழ்க்கையை வெற்றிகரமாக
வாழப் பலவிதமான பயிற்சிகள் தேவைப்படுகின்றன.
நன்கு பயிற்சி அடைந்த ஒருவர், தேவையற்ற கடின உழைப்பு
கொடுக்காமல், சாதுர்யமான செயல்பாட்டின் மூலம், குறைந்த நேரத்தில் அதிக
பலன்களை அடைய முடியும்.*
வாழ்க்கைத் தேவைகளை
அடையும் செயல்முறைகளும் அனைத்து உயிர் இனங்களுக்கும் உள்ளேயே அமைந்துள்ளன.*
பல உயிரினங்கள் தன்
குட்டிகளுக்கும், குஞ்சுகளுக்கும் வாழ்க்கைக்குத் தேவையான பயிற்சிகளை
அளிக்கின்றன*
குழந்தையாக
பிறந்ததிலிருந்தே மனித வாழ்க்கையில் பயிற்சி தொடங்கி விடுகிறது. பயிற்சி இல்லாத
மனிதன் ஒரு மிருகம் போலக் கூட வாழ முடியாது. அவனுக்கு எதையுமே செய்யத் தெரியாது.*
ஆம்.,தோழர்களே..,
ஒரு செயலில் வெற்றி பெற முறையான பயிற்சியும், முயற்சி இல்லாமல்
சோம்பலோடு இருக்கிற ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையை விட, ஆக்கத்தோடும், ஊக்கத்தோடும்
முயற்சியோடு முறையான பயிற்சி செய்கிற ஒருவருடைய ஒரு நாள் வாழ்க்கை மேன்மை உடையது.✍🏼🌹
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அனுபவம் தத்துவம் : வாழ்க்கையே கணக்கு! கணக்கே வாழ்க்கை !! - கழித்தல், கூட்டல், பெருக்கல், வகுத்தல், சந்தோஷம், புரிந்துணர்வு [ ] | Philosophy of experience : Life counts! Account is life!! - subtraction, addition, multiplication, division, happiness, understanding in Tamil [ ]