ஒரு தாய் தன் குழந்தையை பத்து மாதம் "வயிற்றில்" சுமக்கிறாள் ஒரு ஆண் வாழ்நாள் முழுவதும் தன் குடும்பத்தை "இதயத்தில்" சுமக்கிறான்.... "தாய் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்" என்று சொல்வாள்.... தந்தை அதை தான் மனதில் தாங்கிக் கொண்டிருக்கிறான்....
ஆண் ஒரு குலதெய்வம்....
ஒரு தாய் தன் குழந்தையை பத்து மாதம் "வயிற்றில்" சுமக்கிறாள்
ஒரு ஆண் வாழ்நாள் முழுவதும்
தன் குடும்பத்தை
"இதயத்தில்" சுமக்கிறான்....
"தாய் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்" என்று
சொல்வாள்....
தந்தை அதை தான் மனதில் தாங்கிக்
கொண்டிருக்கிறான்....
ஆணுக்கு திருமணம் வரைக்கும் தான் கனவுகள் அவனுக்கு
"சிறகாக" இருக்கின்றது
திருமணம் முடிந்து விட்டால்
அந்த கனவுகளே அவனுக்கு
"சிறையாகி" விடுகிறது
இயந்திரங்களையே இயக்கும்
சக்தி படைத்தவனாக
இருந்தாலும் அவன் இதயத்தை இயக்க
"ஒரு பெண்ணைத் தான்
அனுமதிக்கிறான்..... "
ஊரைக்காக்கும் எல்லைச்சாமி போல்
இவன்
குடும்பத்தை காக்கும் குலசாமி.....
தெய்வம் கூட நம்மை காப்பதற்கு
"அபிஷேகம் ஆராதனை" என்று
கேட்கின்றது ஆனால்
இவனோ !
என்ன கேட்டான்
"பாசத்தை" தவிர......
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அப்பா : ஆண் ஒரு குலதெய்வம் - ஆண் [ ] | Dad : Man is a family deity - Male in Tamil [ ]