கோரிக்கையை நிறைவேற்றித் தரும் பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஞ்சநேயர்

[ ஆஞ்சநேயர்: பஞ்சமுக ஆஞ்சநேயர்! ]

Panchamukha Anjaneyar who fulfills the request! - Anjaneya in Tamil

கோரிக்கையை நிறைவேற்றித் தரும் பஞ்சமுக ஆஞ்சநேயர்! | Panchamukha Anjaneyar who fulfills the request!

அஞ்சனை மைந்தனாம் அனுமன் தன் பக்தர்களைக் காக்க பல்வேறு திருத்தலங்களில் அருளாட்சி புரிந்து வருகிறார்.

கோரிக்கையை நிறைவேற்றித் தரும் பஞ்சமுக ஆஞ்சநேயர்!

 

அஞ்சனை மைந்தனாம் அனுமன் தன் பக்தர்களைக் காக்க பல்வேறு திருத்தலங்களில் அருளாட்சி புரிந்து வருகிறார். அவற்றில் ஒன்று, சென்னை கௌரிவாக்கத்தில் உள்ள பஞ்சமுக அனுமன் திருக்கோயில்!

 

இராமாயண காவியத்தில் இராவணன் தன் படைகளையெல்லாம் இழந்து தனியாக இருந்தபோது அவனை இராமன் வீழ்த்தாமல், 'இன்று போய் நாளை வா!' என அனுப்பி விடுகிறார்! இராவணன் தந்திரமாக இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ராமரை வீழ்த்திய பலசாலியான மயில் ராவணனை உதவிக்கு அழைத்தான். அந்த மயில் ராவணன், பல வரங்களைப் பெற்ற மாயாவியான அசுரன்!.

 

இக்கட்டான சந்தர்ப்பத்தில் தன்னிடம் உதவி கேட்ட ராவணனுக்கு உதவ ஒப்புக்கொண்டான் மயில் ராவணன்.

 

ராமபிரானை வீழ்த்த நிதம்பலா யாகம் எனும் ஒரு யாகத்தை செய்யத் தொடங்கினான் மயில் ராவணன்.

 

இதை அறிந்த ராமபிரான் மயில் ராவணனைத் தோற்கடிக் சரியானவர் அனுமனே என்று உணர்ந்து அனுமனை அழைத்து தன சக்தியோடு ஆசியையும் தந்து அவனை அழிக்க அனுப்பினார். பி கருடன், வராக மூர்த்தி, நரசிம்மர், ஹயக்ரீவர் போன்றோரும் தங்களின் சக்தியை அனுமனுக்கு அளிக்க அனுமன் விஸ்வரூபத் திருக்கோலம் எடுத்து மயில் ராவணனை வதம் செய்தார். அன்று அனுமன் எடுத்த பஞ்சமுகத் திருக்கோலத்தை நாம் இத்தலத்தில் தரிசிக்கலாம். இத்தலத்தில் அனுமனின் ஐந்து முகங்களையும் ஒரே திசையில் நேரே பார்க்கும்படி அமைத்திருப்பது மிகச் சிறப்பு.

 

ஆலயத்தினுள் நுழைந்ததும் கிழக்கு திசை நோக்கி வீற்றிருந்து வரங்களை அள்ளித்தரும் வரசித்தி விநாயகர், மூலவர் மற்றும் உற்சவர் திருமேனிகளுடன் அருள்கிறார். அதையடுத்து தலவிருட்சமாக அரசும், மலை வேம்பும் இணைந்து காணப்படுகின்றன.

 

மூலக் கருவறையில் மேற்கு பார்த்த சந்நிதியில், ஐந்தரை அடி உயரத்தில், வலது திருக்கரங்களில் நாகம், கலப்பை, அங்குசம், கலசம், அபயமும், இடது திருக்கரங்களில் மரம், கபாலம், சஞ்சீவி, பர்வதம், புத்தகம், கதை போன்றவற்றைத் தரித்தும் அருளே வடிவாய் எழுந்தருளியிருக்கிறார் இந்த ஆஞ்சநேயர்!

 

இந்த அனுமனின் கருட முகத்திற்கு வெள்ளிக்கிழமைகளில் கருட ஸஹஸ்ரநாமத்தால் அர்ச்சனை செய்தால் நோய்கள் நீங்க அருள் பாலிக்கின்றார். வராக முகத்திற்கு திங்கள்கிழமைகளில் வராக ஸஹஸ்ர நாம அர்ச்சனை செய்தால் லட்சுமி கடாட்சம் கிட்டுகிறது. கடன்கள் தொலைகின்றன. அனுமனின் முகத்திற்கு வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஹனுமத் ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால் பகைவர்கள் தொல்லைகள் அகலும்!. நரசிம்ம முகத்திற்கு செவ்வாய்க் கிழமையில் நரசிம்ம ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால் ஏவல், பில்லி,சூன்ய பாதிப்புகள் அனைத்தும் அகல்கின்றன. ஹயக்ரீவ முகத்திற்கு புதன் கிழமைகளில் ஹயக்ரீவ ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால் கல்வி, சொல்லாற்றல்,நல்வாக்குபோன்றநற்பலன்கள் கிட்டுகின்றன. பஞ்சமுக அனுமனின் மகிமைகளைச் சொல்லி மாளாது என்கின்றனர் பக்தர்கள்!,

 

ராமபிரான், சீதாபிராட்டி, இளையவரோடு உற்சவ மூர்த்தியாக கருவறையில் எழுந்தருளியுள்ளனர். சனிக்கிழமைகளில் இந்த அனுமனைத் தரிசித்து வலம் வர சனி தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம். இத்தலத்தில் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் மட்டைத் தேங்காய் கட்டி வழிபடுகின்றனர்!

 

மூன்று முறை மட்டைத் தேங்காய் நேர்ந்து கொண்டு கட்டுவதற்குள் பக்தர்களின் கோரிக்கைகளை அனுமன் நிறைவேற்றி விடுவாராம். வெற்றிலை மாலை, எலுமிச்சை மாலை, வாழைப்பழ மாலை என விதவிதமாய் மாலைகள் பக்தர்களால் இந்த அனுமனுக்கு சார்த்தப்படுகிறது. குறிப்பாக ஏலக்காய் மாலையை நேர்ந்துகொண்டு இவருக்கு சார்த்தினால் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும் என்கிறார்கள்.

 

ஆலயத்தில் உள்ள துலாபாரத்தின் மூலம் பக்தர்களின் பாரங் களைத் தான் ஏற்கிறார் இந்த அனுமன். ஞானத்தில் உச்சநிலை, பலத்தில் உச்ச நிலை, பக்தியில் உச்சநிலை, சேவையில் உச்சநிலை, விஜயத்தில் உச்சநிலை என எல்லாம் சேர்ந்த ஒரே வடிவம் இந்த அனுமனே. புத்தி, தைரியம் போன்றவற்றை தம்மை வணங்குவோர்க்கு தந்திடுவார் இந்த ராமதூதன்!

 

சென்னை தாம்பரம் - வேளச்சேரி மார்க்கத்தில் மேடவாக்கம் அருகே கௌரிவாக்கத்தில் பழனியப்பா நகரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது!.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். 

- தமிழர் நலம்

 

ஆஞ்சநேயர்: பஞ்சமுக ஆஞ்சநேயர்! : கோரிக்கையை நிறைவேற்றித் தரும் பஞ்சமுக ஆஞ்சநேயர்! - ஆஞ்சநேயர் [ ஆஞ்சநேயர் ] | Anjaneya: : Panchamukha Anjaneyar who fulfills the request! - Anjaneya in Tamil [ Anjaneya ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்