தைப் பூசம் அன்று முருக பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.
காவடியின் தத்துவம்!
தைப் பூசம் அன்று முருக பக்தர்கள் காவடி
எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். இந்தக் காவடி என்ன சொல்ல வருகிறது தெரியுமா?
அகத்தியர் தந்த சிவகிரி, சக்தி கிரி என்ற மலைகளைக் காவடி போல்
கட்டித்தூக்கி வந்தான் இடும்பன் என்ற அசுரன். அவனை பழனி திருத்தலத்தில் தடுத்து நிறுத்தி, அந்த மலைகளை ஆட்கொண்டவர் ஸ்ரீ முருகப்பெருமான்.
மலைபோன்ற துன்பங்கள் உனக்கு வரலாம்.
ஆனால், அதைச் சுமப்பது உன் வேலையல்ல. அதை என்னிடம்
ஒப்படைத்துவிடு. நீ உன் பாதையில் செல்!......' என்பதே காவடி சொல்லும் தத்துவம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
முருகன் : காவடியின் தத்துவம்! - முருகன் [ முருகன் ] | Murugan : Philosophy of Kavadi! - Murugan in Tamil [ Murugan ]