யோக சூத்திரம் அருளிய பதஞ்சலி முனிவருக்கு ஒரே ஒரு சீடர்தான். ஏன் தெரியுமா

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Sage Patanjali who blessed the Yoga Sutras had only one disciple. Do you know why - Notes in Tamil

யோக சூத்திரம் அருளிய பதஞ்சலி முனிவருக்கு ஒரே ஒரு சீடர்தான். ஏன் தெரியுமா | Sage Patanjali who blessed the Yoga Sutras had only one disciple. Do you know why

"பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவர். சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் பிரகாசிப் பவருமான அத்திரிமகரிஷிக்கும், மும்மூர்த்திகளை குழந்தைகளாக்கிய அனுசுயாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர்தான் பதஞ்சலி மகரிஷி.

யோக சூத்திரம் அருளிய பதஞ்சலி முனிவருக்கு ஒரே ஒரு சீடர்தான். ஏன் தெரியுமா?

 

"பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவர். சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் பிரகாசிப் பவருமான அத்திரிமகரிஷிக்கும், மும்மூர்த்திகளை குழந்தைகளாக்கிய அனுசுயாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர்தான் பதஞ்சலி மகரிஷி.

 

ஆதிஷேடன் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சுக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார்.

 

தில்லையம்பல பஞ்ச சபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய வியாகரண சூத்திரம் என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமேநேருக்கு நேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீர் என்று உண்டாயிற்று.

 

கௌட பாதர் என்னும சீடர் மட்டும், ஸ்ரீ பதஞ்சலி முனிவர் ஏவிய பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தார்.

 

இத்தனை காலமாக அரூவமாக உபதேசித்து வந்த ஸ்ரீ பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க முடிவுக்கு வந்தார். தமக்கும் சீடர்களுக்குமிடையே ஒரு கனமான திரையைபோட்டுக் கொண்டார். திரையின் பின் அமர்ந்து ஆதிஷேட உருவில் கடும் விஷ மூச்சுக்காற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் வியாகரண சூத்திரத்தை உபதேசித்தார்.

 

சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனை நாள் அசரீரியாக ஒலித்த குருவின் குரலை பக்கத்திலேயே கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்குண்டான சந்தேகங்களைக் கேட்டனர்.

 

வெண்கல மணியோசை போல முனிவரின் குரல் பதிலாக வந்தது. "குரு நாதரே, தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்" என்றான் ஒரு சீடன். "உடல் ஐம்புலன்கள்மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம்" மேலும் சுகம், துக்கம் இரண்டையும் கடக்க (வசப்படுத்த) செய்யப்படும் சடங்கே தவம்.

 

பதஞ்சலி முனிவர்களிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்கு முக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரமான குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தை ஒரு கணம் திரைநீக்கிப் பார்த்து விடவேண்டுமென்ற ஆவலால் திரையைப் பிடித்திழுக்க திரைவிலகியது.

 

 

அடுத்த கணம் ஆதிஷேடனின் கடும் விஷக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர்.

 

முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்துவிட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த கௌடபாதர் என்னும் ஒரு சீடர் வருவதை கண்ட முனிவர் அவர்மீது முச்சுக்காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார்.

 

நடந்ததை யூகித்தறிந்த கௌடபாதர் என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பாலாகி விட்டார்களே என்று கதறி கண்ணீர் விட்டார்.

 

 

குருவின் இரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனை நாள் பொறுமை காத்த வர்கள் இன்று அவசரப்பட்டு விட்டார்கள். கௌடபாதரே, நீர் மட்டும் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக்கொள்" என்று ஆறுதல் கூறினார் பதஞ்சலி. "உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன் உன்னுடைய இப்போதைய மனநிலைக்கு தேவை தியானம்.

 

 

தியானம் கை கூடியதும் சமாதிநிலை உண்டாகும் என்றார். படிப்படியாக கௌடபாதருக்கு அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார் பதஞ்சலி முனிவர். யோக சூத்திரத்தில் உள் ஆழ்ந்து மூலாதாரத்தில் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்தபோது, குருநாதர் ஸ்ரீ பதஞ்சலி ஆதிஷேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய் சிலிர்த்தார்.

 

பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் சமாதியடைந்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீ பதஞ்சலி முனிவர் திருவடிகளை வணங்குவோம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

ஆன்மீக குறிப்புகள் : யோக சூத்திரம் அருளிய பதஞ்சலி முனிவருக்கு ஒரே ஒரு சீடர்தான். ஏன் தெரியுமா - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Sage Patanjali who blessed the Yoga Sutras had only one disciple. Do you know why - Notes in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்