ஒரு பெண் தனது தாயை பற்றி எழுதியது... ப்ளீஸ் என்று ஒத்த வார்த்தை சொன்னாலே உருகி கரைந்து விடுவார் என் அப்பா..
அம்மாவை பற்றி மகள் எழுதிய கடிதம் எப்படி இருக்கிறது பாருங்கள்?
ஒரு பெண் தனது தாயை
பற்றி எழுதியது...
ப்ளீஸ் என்று ஒத்த
வார்த்தை சொன்னாலே உருகி கரைந்து விடுவார்
என் அப்பா..
ஆனால் அம்மா அப்படி
இல்லை.. இரும்பு மனுஷி.. ஒரு காரியத்தை அவரிடம் சாதித்து கொள்வது லேசுபட்ட விஷயம்
இல்லை.. மண்டியிட வேண்டும், கெஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும், அப்பா வரும்வரை தூங்காமல் காத்திருந்து புகார் சொல்ல வேண்டும்..
எதுக்குமே மசிய மாட்டார்!!
கோபம் தலைக்கேறி அழுது
புலம்புவதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்? கடைசியில்தான் தெரியும் நான்
விரும்பியது 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கும்..
இப்படி அம்மாவின் பல
கண்டிப்புக்களும், திட்டுக்களும் என்னை மீட்கவே செய்தது பிரமிப்பின் நீளம்!! வசவுகள்
எல்லாமே எனக்கு தடுப்பு வேலிகளாகவே இருந்திருக்கிறது.. இறுதியில் தோற்று போனது
ஒன்றுக்கும் உதவாத என் பிடிவாதமாகத்தான் இருந்திருக்கிறது!!
கிச்சனில் அம்மா
வியர்க்க விறுவிறுக்க எங்களுக்காக சுயமரியாதையை தொலைத்து நின்றிருந்த தருணங்கள்
ஏராளம்.. துணி காயப்போடு,
பீரோவை அடுக்கி வை..
மதியானத்தில் தூங்காதே..
எப்ப பாரு என்ன டிவி?
புக் எடுத்து படி...
வீட்டு வேலை செய்,
கல்யாணம் பண்ணி போற
இடத்துல என்ன நினைப்பாங்க, சரியா வளர்க்கலேன்னு என்னை திட்ட மாட்டாங்களா" என்று நை..
நை.. புகைச்சல் காதில் விழும்போதெல்லாம் உச்சத்தின் எரிச்சலுக்கு என்னை இட்டு
சென்றது..
இன்று
சாம்பார் சூப்பர்,
வத்தக்குழம்பு சூப்பர்
என்று அடுத்தவர் என்னை பாராட்டும்போதுதான் அந்த குடைச்சலின்
பெருமை துளிர்த்து எட்டி எட்டி பார்த்தது! மெல்ல என் மர மண்டைக்கு விஷயம் ஏற
ஆரம்பித்தது..
இதிலும் நான்தான் தோற்று
போனேன்.
இருந்தாலும் இந்த
அம்மாவுக்கு இவ்வளவு கல்நெஞ்சம் இருக்கக்கூடாது.. அப்போதுதான்
நூடுல்ஸ் வந்த புதிது..
அதன் மீது அப்படி ஒரு
பிரியம் வந்துவிட்டது.. ஒருநாள் அதை வாங்கி சாப்பிட 5 ரூபாய் கேட்டால்கூட என்
அம்மா கறார்தான்.. தர முடியாது என்ற ஒற்றை வார்த்தையை அழுத்தமாக சொல்லிவிட்டார்..
உங்க சமையல் வெறுப்பா
இருக்கும்மா,
நூடுல்ஸ்தான் வேணும்
என்று அழுதாலும் ஒரு
பதிலும் அங்கு வரவே வராது..
5 ரூபாய் தராத அம்மா
எல்லாம் ஒரு அம்மாவா? என்று நொந்து போய் அழுதடியே அன்று தூங்கிவிட்டேன்.
மறுநாள் காலை தூங்கி
எழுந்தால்,
வீட்டுக்கு வந்த பாத்திர
வியாபாரியுடன் அம்மா பேசி கொண்டிருந்தார். அந்த வியாபாரி கையிலும், சுற்றிலும் புதுபுது
பாத்திரங்கள் கண்ணை கூசின.
ஆமா.. எல்லா
பாத்திரத்திலயும் என் பொண்ணு பேர் பெரிசா பொறிச்சிடுங்க..
செலவு பத்தியெல்லாம்
கவலைப்படாதீங்க என்று சொல்லி கொண்டிருந்தார்.. இன்று வரை ஒரு டம்பளரில் தண்ணீர்
எடுத்து குடித்தாலும் அதில் உள்ள என் பெயர் என்னை
குத்தி காட்டி கொண்டே இருக்கிறது.
ஏனோ தெரியவில்லை, இப்போதுவரை நூடுல்ஸ்
சாப்பிடும் எண்ணமும் எனக்கு வரவே இல்லை.
இந்த விஷயத்திலும்
நான்தான் தோற்று போனேன்!!
ஓயாத குடைச்சல், எப்பவுமே திட்டு, எப்பவுமே ஒரு அட்வைஸ், எதுக்கெடுத்தாலும் ஒரு
பிளாஷ்பேக்,
அம்மா எப்பவுமே இப்படித்தானோ
என்ற நினைப்பு வந்தபடியே இருந்தது.
எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என் அம்மா!! இந்த
விஷயத்திலும் நான்தான் தோற்று நிற்கிறேன்.
ஏனோ தெரியவில்லை.. என்னை
பார்க்கும்போதெல்லாம் ஓயாமல் சொல்லும் பொய்
ஏன் இப்படி இளைச்சிட்டே, ஏன் இப்படி கறுத்து
போயிட்டே என்பதுதான்..
தட்டில் சட்னி
மீதமிருக்குது பாரு, அதுக்காக இன்னும் ஒரே ஒரு தோசை
என்று சாக்கு சொல்லி
சுடச்சுட சுட்டுப்போடும் அலாதியே இன்றும் தனி அழகுதான்.. சாப்பிட்டு முடித்த பிறகு
தான் தெரியும் சட்னியை முன்கூட்டியே தட்டில் அதிகமாக ஏன் வைத்தார் என்று?
அந்த அன்பின்
சூட்சுமம்கூட தெரியாமல்
அப்போதும் நான்தான்
தோற்று நிற்பேன்!!
எத்தனை விஷயத்தில்தான்
நான் இப்படி தோற்று கொண்டே இருப்பேனோ தெரியாது.. இந்த தொடர் தோல்வி எனக்கு பிடித்திருக்கிறது.. காரணம், என் அம்மா சளைக்காமல்
வெற்றி பெற்று கொண்டே இருப்பதால்!!!
உலகின் தலை சிறந்த முதல்
தியாகி அம்மா மட்டுமே
சொக்கி போகும் முதல் உலக
அழகிகளும் இவர்களே!!
உலகின் மிக பெரிய
பொருளாதார மேதையுமே அம்மா மட்டுமே!!
எத்தனை இடர்பாடுகள்,
எத்தனை துயரங்கள்,
எத்தனை வலிகள்
வந்தால் என்ன?
உலக உருண்டையில்
கலந்துவிட்ட இந்த தாய்மையானது அனைத்தையும் புரட்டி போட்டு கொண்டு மேலே சென்று
கொண்டே இருக்கும்!!
எல்லா அம்மாக்களுக்கும்
சமர்ப்பணம்!!
அனைத்து பெண்களுக்கும்
இனிய அன்னையர் தின
முதன்மை
நல் வாழ்த்துக்கள்...
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
அம்மா : அம்மாவை பற்றி மகள் எழுதிய கடிதம் எப்படி இருக்கிறது பாருங்கள்? - குறிப்புகள் [ ] | Mother : See how the daughter's letter about her mother looks? - Tips in Tamil [ ]