உத்திரகோசமங்கை கோவில் சிறப்புகள்

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: சிவன் ]

Specialties of Utrakosamangai Temple - Tips in Tamil

உத்திரகோசமங்கை கோவில் சிறப்புகள் | Specialties of Utrakosamangai Temple

🌳இக் கோவில் தான் உலகின் முதல் #சிவன் கோவில்.8000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. 🍀இங்குள்ள இலந்தை மரம் 3300 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் பூத்துக் குலுங்குகிறது.

உத்திரகோசமங்கை கோவில் சிறப்புகள்

 

🌳 இக் கோவில் தான் உலகின் முதல் #சிவன் கோவில்.8000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

 

🍀 இங்குள்ள இலந்தை மரம் 3300 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் பூத்துக் குலுங்குகிறது.

 

🍏 இங்கு தான் இராவணன்,மண்டோதரி திருமணம் நடைபெற்றதற்கு சாட்சியாக கல்வெட்டுக்கள் உள்ளன.

 

🟢சிவனின் சொந்த ஊர்,உலகிலயே முதல் நடராஜர் தோன்றிய ஊர்,உலகின் உள்ள அனைத்து ரிஷிகள்,முனிவர்கள்,சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில்.

 

நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோவில்.நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம்.ஆயிரம் சிவ அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயம்.

 

🍃தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற வாக்கியம் உருவான இடம்.

 

மரகத நடராஜர் சிலை உள்ள ஆலயம்.இப்படி பல அதிசயங்களையும்,ஆச்சயர்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தமாய் இருக்கும் ஆலயம்.இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்ரகோசமங்கை #மங்களநாதர்,#மங்களநாயகி திருக்கோவில்.

 

🌲உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம்.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.இக் கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

 

🌿இத் தலத்துக்கு உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.

 

🌴திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘இத் தலத்தில் தான் நடந்தது.இக் கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர்.பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில்

சிறந்து இருந்த போது,அவர்களது தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது.

 

🌱ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம்,

தெட்சிண கைலாயம்,

சதுர்வேதி மங்கலம்,

இலந்தி கைப்பள்ளி,

பத்ரிகா ஷேத்திரம்,

பிரம்மபுரம்,

வியாக்ரபுரம்,

மங்களபுரி,

பதரிசயன சத்திரம்,

ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.

 

🌵 மங்கள நாதர்,மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன் கிடைக்கும்.

 

🎄இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.மறுமையில் முக்தி கிடைக்கும்.

 

🦚மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம்.எனவே முகூர்த்த நாட்களில் நிறைய

திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.

 

🪴மூலவருக்கு மங்களநாதர் என்ற பெயர் தவிர மங்களேசுவரர்,காட்சி கொடுத்த நாயகர்,பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு.இறைவிக்கு மங்களேசுவரி,மங்களாம்பிகை,சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன.

 

🥦இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது.எனவே,இத்தலம் ராமாயண

காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது.

 

🥬இத்தலத்தில் வேதவியாசர்,

காக புஜண்டர்,

மிருகண்டு முனிவர்,

வாணாசுரன்,

மயன்,

மாணிக்கவாசகர்,

அருணிகிரி நாதர் ஆகியோர்

வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.

 

🌿இத்தலத்து பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர்.இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும்,இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப் படைப்பாக உள்ளார்.கோவில் வாசலில் விநாயகப்பெருமானும்,முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர்.

 

🌳இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது.முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான்

என்று,இத்தலமான்மியமான ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது.

 

🟢மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சி தந்த சிறப்புடைய தலம்.இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.

 

🟩இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூஜிப்பதாக ஐதீகம்.சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாப விமோசனம் செய்து அம்பாளை மணந்து கொண்டு இத்தலத்திலேயே

அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து,பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப் புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

 

📗உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாளிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன

பந்தை கொண்டுள்ளது.நாம் கையை நுழைத்துக் கூட பந்தை நகர்த்த முடியும்.இத்தலத்து கோவில் குளத்தில் வாழும் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லை.கடல் நீரில் வாழும் மீன்களாகும்.

 

பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.இந்த கோவிலில் சிவனுக்கும்,அம்பாளுக்கு தாழம்பூ மாலை

கட்டிப் போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம்.இதனால் திருமணம் உடனே கைகூடும்.

 

🌳இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது.இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய்,ஞாயிறு தினங்களில் ராகு காலத்தில் பூஜை

தொடர்ந்து செய்தால் தீராத பிரச்னைகள்,திருமணத்தடை போன்றவை விலகுகின்றன.

 

🍀 இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னதி,

மங்களேசுவரி சன்னதி,

மரகதகல் நடராஜர் சன்னதி,

சகஸ்ரலிங்க சன்னதி நான்கும்

தனிதனி கருவறை,அர்த்த மண்டபம்,மகா மண்டபம்,கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

🌲நடராஜர் மரகத கல்லில் இருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். ஆனால் உலகின் முதல் கோவில் என்பதால்

இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள்.

 

🌿 மங்கள நாதருக்கு தினமும் காலை 6 மணிக்கு,மதியம் 12.30 மணிக்கு,மாலை 5.30 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

 

☘ மரகத கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்து விடும் என்பது நம்பிக்கை.இத்தலத்தில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர்.

 

🌴மங்கள நாதர் சன்னதியை சுற்றி வரும் போது இடது பக்க மூலையில் மகாலட்சுமியை வழிபடலாம்.இத்தலத்தில் உள்ள ராஜகோபுரத்தில் சர்பேஸ்வரர் சிலை உள்ளது.

 

🌵உலகத்தில் முதலில் தோன்றிய கோவில் என்ற சிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்கு உண்டு.இந்த ஆலயம் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது.நடராஜர் இங்கு அறையில் ஆடிய பின்னர் தான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்.

 

🍃இது அம்பிகைக்கு பிரணவப் பொருள் உபதேசித்த இடம்.இங்குள்ள மங்கள நாதர் லிங்க வடிவில் உள்ளார்.

 

🥦தலவிருட்சமான இலந்த மரம் மிகமிகத் தொன்மையானதும்,இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும்

முனிவர்கள் தரிசித்த தல விருட்சம் ஆகும்.இந்த இலந்த மரம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது.

 

🌱ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது.ஒன்று சித்திரைத் திருவிழா,இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா.

 

🐍இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது.

 

🦚சிவபெருமானால் பரத ாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.

 

🥬ஈசன்,ஈஸ்வரி பிறந்த ஊரான உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் சொர்க்கம் செல்லுவது நிச்சயாமாகும்.

 

🍃இத் திருத்தலமானது ஸ்ரீராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி ேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும்.

 

🙏🏻💚 நமசிவாய💚🙏🏻


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்


ஆன்மீக குறிப்புகள்: சிவன் : உத்திரகோசமங்கை கோவில் சிறப்புகள் - குறிப்புகள் [ ] | Spiritual Notes: sivan : Specialties of Utrakosamangai Temple - Tips in Tamil [ ]