தமிழ் மூத்த மொழி

குறிப்புகள்

[ பொது தகவல்கள் ]

Tamil Senior Language - Tips in Tamil

தமிழ் மூத்த மொழி | Tamil Senior Language

உலகம் தோன்றி 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன.... விஞ்ஞானிகளின் கூற்று..... அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!

தமிழ் மூத்த மொழி:


உலகம் தோன்றி 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன.... விஞ்ஞானிகளின் கூற்று.....

அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!

 

இந்துக்களின் காலக்கணக்கு,

உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்...

கி.பி.1947 - பாரத சுதந்திரம்

கி.பி 1847 - பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம்

கி.பி 1192 - முஸ்லீம் ஆட்சி துவக்கம்

கி.பி. 788 - ஆதி சங்கரர் தோற்றம்

கி.பி 58 - சாலி வாகன சக வருசம்

கி.மு.57 - விக்ரமாதித்ய சகம் வருடம்

கி.மு 509 - புத்தர் தோற்றம்

கி.மு 3102 - கலியுகம் ஆரம்பம்

கி.மு 3138 - மகாபாரத போர், யுதிஷ்டிரர் முடிசூட்டு, யுதிஷ்டிர சகம் கி.மு 8,69,100 - இராமபிரானின் காலம்

கி.மு21,05,102 - சூரிய சித்தாந்தம்

கி.மு 38, 90,100- சத்திய யுகம் ஆரம்பம், 28-வது சதுர்யுகம்

கி.மு12,05,31,100 - பிரளய முடிவு, தற்போது உள்ள ஏழாம் மன்வந்ரம் ஆரம்பம், இக்ஷவாகு வம்சம்

கி.மு42,72,51,100 - 6 ஆம் மன்வந்ரம்

கி.மு73,39,71,100 - 5 ஆம் மன்வந்ரம்

கி.மு1,04,06,91,100- 4 ஆம் மன்வந்ரம்

கி.மு13,47,41,11,100- 3 ஆம் மன்வந்ரம்

கி.மு1,65,41,31,100- 2 ஆம் மன்வந்ரம்

கி.மு1,96,08,51,100- 1 ஆம் மன்வந்ரம்,மனிதர் - உயிர்களும் படைப்பு

கி.மு1,98,67,71,100- கல்பம் ஆரம்பம், உலகப்படைப்பு!

குறிப்பு:- விஞ்ஞானிகள் உலகம் தோன்றி சுமார் 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று கணக்கிட்டுள்ளனர்...

அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!

உண்மை இதுதான்

 

ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்பிக்கப்பட்டது என்பது சுத்த மடத்தனம்... ஆங்கிலம் கற்றோம் அவ்வளவுதான்...

 

நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள்..

 

Civil Engineering தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில்,

காிகாலனின் கல்லணை கட்டமுடியுமா?

 

சிதம்பரம்  நடராஜா் கோவிலில் ஒரே இடத்தில் சிவனையும் நாராயணனையும்

பாா்க்கும்படி வைத்து

மனிதனின் நாடி, நரம்புகள், மூச்சுக்காற்று உள்ளடக்கி தங்க ஓடுகள் ஊசிகள் பதித்தான்..

 

இன்னும் இது போன்ற எத்தனையோ கட்டிடக்கலை..... தொியாமல் கட்ட முடியாது.!

 

Marine Engineering தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.

 

Chemical Engineering தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வைத்தியம் கண்டறிந்திருக்க முடியாது.

 

Aero Technology தெரியாமல் கோல்களை ஆராய்ந்திருக்க முடியாது.

 

Mathematical தெரியாமல் கணக்கதிகாரம் படைத்திருக்க முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திருக்க முடியாது.

 

Explosive Engineering தெரியாமல் குடவறை கோவில்கள் படைத்திருக்க முடியாது.

 

Metal Engineering தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.

 

Anatomy தெரியாமல் சித்த மருத்துவம் செய்திருக்க முடியாது.

 

Neurology தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.

 

Psychology தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது.

 

Bachelor/ Master of Arts தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.

 

Business Administration தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.

 

Chartered Accounts தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.

 

Anomaly Scan / Target Scan இல்லாமல் குழுந்தைகளின் வளர்ச்சியை கணக்கிட முடியாது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கர்ப்பம் தரித்த மூன்றாவது மாதத்திலிருந்து, பத்தாவது மாதம் குழந்தை பிறப்பதுவரை எப்படியிருக்கும் என்று பல்லடம் to தாராபுரம் நடுவில் உள்ள குண்டடம் சிவன் கோவிலில், கல்லில் செதுக்கி வைத்துள்ளான் தமிழன்.

 

இன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ, அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள் நம் தமிழர்கள். நம் தமிழ்நாட்டின் பெருமையை அடுத்தவர் அறியச் செய்யுங்கள்.. நான் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள்..

 

இன்னும் சொல்ல வேண்டுமானால்,

 

ஒட்டுமொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் ஒரேயொரு மந்திரம் போதும்...

 

இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன் Blood Test கிடையாது.

 

லேப் டெக்னிஸ்யன் (LAB technicient ) படிப்பு கிடையாது. ஆனால் நம் உணா்ச்சி பெருக்கத்தில் இருந்து வரும் விந்துவில்  மில்லியன் உயிா் அணுக்கள் இருப்பதாக  இப்போது கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

 

அப்படி பல மில்லியன் உயிர் அணுக்கள் போராடி அதில் ஒன்று தான் கா்ப்பபைக்கு சென்று  உயிா் உண்டாகிறது.

 

இதை இப்போது 21 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள்..

 

ஆனால், இதை நான்காயிரம்  ஆண்டுகளுக்கு முன்னரே,

 

திருமூலா் பெருமகனார் அற்புதமாக தன் ஞானத்தினால்,

 

லட்சமாக உருவெடுத்து  ஆயிரம் ஆகி நுாறாகி  பத்தாகி  பிறகு  ஒன்றாகி  உள்ளே சென்று  உயிரெடுத்தது தான்  உயிா் என்று சொல்லியிருக்கிறார்.

 

எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது  தமிழர் மரபும், கலாச்சாரமும், ஞானமும்.

 

- இதைப் பகிர பெருமை கொள்கிறேன்.

அறிவோம் முன்னோர் மகிமை.!!!🙏🏻🌹🙏🏻

அடேய் அசோகர் என்ன மொழி பேசினாரு?

 

பாலி மொழி.

 

அப்போ தமிழ் அழிஞ்சுதா?

 

இல்லண்ணே.

 

புத்த துறவியும் சமண துறவியும் என்ன மொழி பேசினாங்க?

 

அவங்க வடக்க இருந்து வந்தாங்க அவங்க மொழிதான் தெரியும், இங்க தமிழ் படிச்சி வளர்த்தாங்க‌.

 

ஆக அவங்க மொழியும் இங்க சொல்லி கொடுத்தாங்களா இல்லியா?

 

சொல்லி கொடுத்தாங்க ஆனா தமிழ் வாழ்ந்திச்சி.

 

வாழ்ந்திச்சில்ல.

 

ஆமா, அழியல‌.

 

ஆதிசங்கரர் காலத்துல சமஸ்கிருதம் எப்படி இருந்து?

 

பெருசா இருந்துச்சு. இங்க அந்த சமஸ்கிருதம் படிச்சித்தான் பாரதம், ராமாயணம் எல்லாம் தமிழுக்கு கொண்டுவந்தாங்க‌.

 

தமிழ் அழிச்சிச்சா?

 

இல்லண்ணே நல்லா வளர்ந்திச்சி.

 

அடுத்தால யார் வந்தா?

 

நாயக்க மன்னர் கூட்டம்.

நாயக்க மன்னர் என்ன ஆட்சி மொழி பேசினார்கள்?

 

தெலுங்கு.

 

அப்பொழுது தமிழ் அழிந்ததா?

 

இல்லண்ணே, குற்றால குறவஞ்சி எல்லாம் அப்பொழுதுதான் எழுதுனாங்களாம், அரசர் நிறைய சன்மானம் கொடுத்தாராம்.

 

சரி அடுத்தால ஆளவந்தது யாரு?

 

சுல்தான்கள்.

 

அவர்கள் ஆட்சி மொழி என்ன?

 

உருது மொழி.

 

அதுல தமிழ் அழிஞ்சுதா?

 

இல்லே.

 

அடுத்து ஆண்டது யாரு?

 

ஆற்காடு நவாபு.

 

அவர் என்ன பேசினார்?

 

உருது.

 

அவருக்கு கீழ இருந்த பாளையக்காரன் என்ன பேசினான்?

 

தெலுங்கு.

 

சரி அப்பொழுதும் தமிழ் அழிஞ்சுதா?

 

இல்லண்ணே.

 

சரி அடுத்தால யாரு வந்தா?

 

வெள்ளைக்காரன்.

 

அப்பவும் தமிழ் அழிஞ்சிட்டா?

 

இல்லண்ணே நிறைய புஸ்தகம் தமிழ்ல வந்து, பைபிள் கூட வந்துச்சி.

 

சொல்லுடா இவ்வளவு காலம் தமிழ் எப்படி நின்னுச்சி?

 

அண்ணேஆதீனம், மடம், சைவ சித்தாந்த கழகம், கோவில் எல்லாம் தமிழ காப்பாத்திச்சி,  U. V.சாமிநாத அய்யரு (Thamizh Thaathaa) பனை ஓலையில இருந்து தமிழ அச்சுக்கு கொண்டு வந்தாரு.

 

ஆக 800 வருசமா அந்நிய நாட்டுகாரன் மொழிதான் ஆட்சி மொழி அப்படித்தானே?

 

ஆமாண்ணே.

 

ஆனா தமிழ் அழியல‌?

 

ஆமாண்ணே.

 

மவனே, 800 வருஷமா தமிழ் எப்படி இருந்திச்சி?

 

ரொம்ப நல்லா இருந்திச்சி.

 

ஆக தமிழ் எப்போ அழிய ஆரம்பிச்சி?

 

அது கோவில் மடம் ஆதினம் சிந்தாந்த கழகம்னு இந்து பாரம்பரியமா இருக்கும் போது அழியலண்ணே, அத வச்சி அரசியல் பண்ணும் போதுதான் அழிய ஆரம்பிச்சிருக்கு.

 

ஆக பலநூறு வருஷமா  அழியாத தமிழ் இனியாடா அழியும்? தமிழை எவரும் அழிக்க முடியாது.

 

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் நமது  ஆன்மீக பயணம் தொடரும்!

இறைபணியில்

அன்புடன்....

🌷தமிழர் நலம்🌷

💥நன்றி!

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

🌷🌷முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

 

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்...

 

வாழ்க 🙌 வளமுடன்

 

அன்பே🔥இல்லறம்

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

💦💦💦💦💦💦💦💦💦💦💦💦

 

பொது தகவல்கள் : தமிழ் மூத்த மொழி - குறிப்புகள் [ பொது தகவல்கள் ] | General Information : Tamil Senior Language - Tips in Tamil [ General Information ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்