சதுரகிரி – இம்மலையில் எல்லாவித மூலிகைகளும், மரங்களும், விலங்கினங் களும், பறக்கும் பாம்பு முதல் அனைத்துப் பறவையினங்களும் வாழ்கின்றன. சுந்தரமூர்த்தி: கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும்.
சதுரகிரி
மலையில் இருக்கும் கோவில்களும் அதிசயங்களும்...!
சதுரகிரி – இம்மலையில் எல்லாவித மூலிகைகளும், மரங்களும், விலங்கினங் களும், பறக்கும் பாம்பு முதல் அனைத்துப் பறவையினங்களும் வாழ்கின்றன.
சுந்தரமூர்த்தி:
கைலாயத்தில்
சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர்
சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி
லிங்கம் ஆகும்.
சதுரகிரியில்
அகத்தியர் தங்கியிருந்த குன்றை கும்ப மலை என்கின்றனர். அகத் தியர் பூஜித்த
லிங்கத்தை சுத்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம்
சுந்தரமூர்த்தி லிங்கம் எனப்படுகிறது.
அருளை
வழங்குவது சுந்தரமகாலிங்கம், பொருளை வழங்குவது சுந்தரமூர்த்தி
லிங்கம் எனக் கூறுவர். சதுரகிரி கோயிலி ன் நுழைவுப் பகுதியில் இந்த லிங்கம்
இருக்கிறது.
இரவு
12
மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள்
அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.
பார்வதி
பூஜித்த லிங்கம்:
சுந்தர
மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில்
அமைந்துள்ளது.
பிருங்கி
மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்
விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க
வேண்டி, அவர்
உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில்
லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள்.
மகிழ்ந்த
சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார் என தல வரலாறு கூறுகிறது.
பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள்.
இங்குள்ள
சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு
அபிஷேகம் செய்கின்றனர்.
பார்வதி
பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து
வந்தார். மகா சிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகா லிங்கத்தின் மீது பூத்தூவி
வழிபடுகின்ற னர்.
இக்கோயிலில்
சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன
முருகன், சந்தன
மாரி என எல்லாமே சந்தன மயம் தான்.
18
சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண் பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில்
கலந்து கொடுக்கிறார்கள். இங்கிருந்து 1 கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில்
உள்ளது.
லிங்க
வடிவ அம்பிகை:
சிவனைப்போலவே
அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண் டும் என விரும்பிய சித்தர்கள்
நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் ஆனந்த
வல்லி என்ற திருநாமத்தில் லிங்கவடிவி ல் எழுந்தருளினாள்.
சுந்தரமகாலிங்கம்
சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின்
பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து
பாரிவேட்டை நடக்கிறது.
நோய்
தீர்க்கும் மலை:
சதுரகிரி
மலையில் ஓடுகின்ற தீர்த்தங்க ளும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க
வல்லது. இந்த மலை ஏறி இறங்கி னால் உடலில் உள்ள வியர்வை வெளியே றி, மூலிகை
கலந்த காற்று பட்டு பல நோ ய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள்.
சித்த
மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர். மகாலிங்கம்
கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில்உள்ள குளிராட்டி பொய் கையில் நீர்
வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
பிலாவடி
கருப்பர்:
வணிகர்
ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம்
போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.
முனிவர் ஒருவர், சதுர கிரியில் உள்ள காலங்கிநாத
சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும், என்றார்.
வணிகரும்
சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில
மூலிகைகளைக்
கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம்
தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார்.
இந்த
கிணற்றில் காவலாக கருப்பசுவாமி யை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று
காய்களுடன் கூடிய பலாமரம் உள் ளது.
இதனால், இவரை
பிலாவடி கருப்பர் என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு
காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.
இரட்டை
லிங்கம்:
ஆனந்த
சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்த து. அவரது மனைவி
ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான்
வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும்
சதுரகிரி வந்து தியானம் செய்தனர்.
இவர்கள்
முன்பு சிவன் தோன்றினார். சிவபெருமானே தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை
என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும், என வேண்டி னார் வியாபாரி. சிவன்
ஆண்டாளிடம் சென்றார்.
அவளோ, நான்
உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன், என்றாள்.
அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயண
ராக காட்சி கொடுத்தனர்.
இதன்
அடிப்ப டையில் மலைஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு
லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்ப வர் பூஜை
செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.
பெரிய
மகாலிங்கம்:
நடுக்காட்டு
நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை
பெரிய மகாலிங்கம் என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம்
உள்ளது.
சாதாரண
நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும்
பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
தவசிப்பாறை:
மகாலிங்கம்
கோயிலிலுள்ள ஆனந்த வல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு
பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால்
தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல் மட்டத்தில் இருந்து 5000
அடி உயரத்தில் உள்ளது.
கோயிலில்
இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும்
சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் மஞ்சள் ஊத்து தீர்த்தம் உள்ளது.
தீர்த்தமும், இப் பகுதியிலுள்ள மண்ணும் மஞ்சள்
நிறத்தில் உள்ளது.
பார்வதி
இத்தலத்துக்கு தவம் செய்ய வந்த போது, உடன் வந்த புஷ்பகை, கெந்தகை, அமிர்தகை, கருணிகை, மிருதுபாஷிகை, சுச்லிகை, சுமுகை
என்ற பணிப் பெண்கள் இந்த தீர்த்தத்தில் மஞ்சள் தேய்த்து குளித்ததால் இப்படி
இருப்பதாக கூறப்படுகிறது.
தவசிப்பாறையில்
சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும்
சிரமப்பட்டு செல்லும் படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து
பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது.
இதனுள்
ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று
லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18
சித்தர்க ளும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது.
குகைக்கு
மேலே 9
பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை நவக்கிரக கல் என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள
ஏசி பாறை யின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக
இருக்கும்.
தவசிப்
பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் வெள்ளைப்பிள்ளையார் பாறை உள்ளது.
பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும்.
இங்குள்ள
ஒரு மரத்தின் இடையில் அரை அடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில்
நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.
கோரக்கர்
மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம்
உள்ளது. ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால், கொஞ்சம்
சிரமத்துடன்தான் செல்ல முடியும்.
வாழ்க்கையில்
அனைவரும் ஒரு முறையாவது சென்று வழிபட வேண்டிய கோவில் – சதுரகிரி மலை கோவில்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : சதுரகிரி மலையில் இருக்கும் கோவில்களும் அதிசயங்களும் - குறிப்புகள் [ ] | Spiritual Notes: Temples : Temples and Wonders of Chaturagiri Hill - Notes in Tamil [ ]