உலகின் மிகப் பெரிய பிள்ளையார்

ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

The greatest child in the world - Spiritual Notes in Tamil

உலகின் மிகப் பெரிய பிள்ளையார் | The greatest child in the world

பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பார்கள். மாட்டு சாணத்தைப் பிடித்து வைத்தாலும், சந்தனத்தைப் பிடித்து வைத்தாலும் பிள்ளையார்தான்.

உலகின் மிகப் பெரிய பிள்ளையார்


பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பார்கள். மாட்டு சாணத்தைப் பிடித்து வைத்தாலும், சந்தனத்தைப் பிடித்து வைத்தாலும் பிள்ளையார்தான்.

கோவை புளியங்குளத்தில் உள்ள பிள்ளையாருக்கு சிறப்பு உண்டு. உலகின் மிகப்பெரிய பிள்ளையார் இங்குதான் அருள்பாலிக்கிறார். இங்குள்ள விநாயகர் சிலையின் உயரம் 16.5 அடி அகலம் 11.5 அடி ஒரே கல்லில் செய்யப்பட்ட இந்தப் பிள்ளையாருக்கு தேவேந்திப் பிள்ளையார் என்று பெயர்.

சூரியகாந்தக் கல்லில் சுமார் 180 டன் எடையுடன் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. வலம்புரி விநாயகரான இவரது துதிக்கை வலமாக காணப்படுகிறது. சிவனைப் போலவே இந்தப் பிள்ளையாருக்கும் மூன்று கண்கள் அமைந்துள்ளது. மூன்றாவது கண் நெற்றிக் கண்ணாக அமைந்துள்ளது.

இவரது வயிற்றைச் சுற்றிப் பெரிய பாம்பு காணப்படுகிறது. இதை நாக அணி என்கிறார்கள். இது குண்டலினி சக்தியின் அடையாளம். மார்பில் முப்பிரி நூல் உள்ளது. இந்தப் பிள்ளையார் சிலைக்குப் பின்னே ஒரு ஏணி இருக்கிறது. அதில் ஏறிச் சென்றுதான் அபிஷேகம் செய்கிறார்கள். 

கோவை நகரத்தின் மையப்பகுதியில் இக்கோவில் அமைந்திருப்பதால், அங்குள்ள தொழிலதிபர்கள் தங்கள் தொழில் செழிப்புற வேண்டி அடிக்கடி இங்கு வருகிறார்கள். புதிதாக தொழில் தொடங்குகிறவர்கள், புதிய வாகனம் வாங்குபவர்களும் இங்கு வந்து பூஜை செய்கிறார்கள். 


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்


ஆன்மீக குறிப்புகள் : உலகின் மிகப் பெரிய பிள்ளையார் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : The greatest child in the world - Spiritual Notes in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்