கருவறையில் நரசிம்ம சுவாமி விடும் மூச்சுக் காற்றால் தீபச் சுடர் அசைந்தாடுகிறது.
🫐🌹மூச்சு
விடும் மூலவர்🌹🫐
🍀 கருவறையில் நரசிம்ம சுவாமி விடும் மூச்சுக் காற்றால் தீபச் சுடர் அசைந்தாடுகிறது.
🍀 கிருஷ்ணா,மூசி நதிகள் இணையும் இடத்திற்கு அகத்தியர் வந்த போது
வானில் அசரீரி ஒலித்தது.“அகத்தியரே!நதிகள் சங்கமிக்கும் இந்த இடத்தில் நரசிம்மரின்
சிலை ஒன்று உள்ளது.அதைப் பிரதிஷ்டை செய்த பிறகு உமது தீர்த்த யாத்திரையைத்
தொடருங்கள்” என்றது.
🍀 அதன்படி அகத்தியரும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
🍀 நாளடைவில் இங்கு வழிபாடு இல்லாமல் போகவே சிலை மண்ணுக்குள் புதைந்தது.
🍀 நான்காம் நுாற்றாண்டில் ரெட்டி ராசுலு என்பவரால் நரசிம்மரின் சிலை மீண்டும் வெளிப்பட்டது.
🍀 1377ல் கோவில் கட்டப்பட்டு வழிபாடு தொடங்கியது.
🍀 சுவாமி சிலையில் இருந்து மூச்சு வெளிப்படுவதை பூஜை செய்த அர்ச்சகர் உணர்ந்தார்.அதை சோதிக்க மூக்கின் அருகில் விளக்கை பிடித்த போது சுடர் அசைந்தது.அதே நேரம் சுவாமியின் பாதத்தில் ஏற்றிய தீபம் அசையாமல் இருந்தது.
🍀 இன்றும் விளக்குகள் இப்படி எரியும் அதிசயத்தை
நாம்
காணலாம்.
🍀 ஆந்திராவிலுள்ள நல்கொண்டா,கிருஷ்ணா,குண்டூர் மாவட்டத்தினர் இங்கு
வழிபட்ட பிறகே மற்ற நரசிம்மர் தலங்களுக்குச் செல்கின்றனர்.
🍀 ராமர்,சீதை, லட்சுமணர்,அனுமன்
சுதை சிற்பங்கள் கண்களுக்கு விருந்தாக உள்ளன.
🍀 மகாலட்சுமி தாயார் தனி சன்னதியில் இருக்கிறார்.
🍀 கருடன், அனுமன்
வாகனங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளன.
🍀 ஆன்மிக உபன்யாசகரான முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார் 1992ல் யாகம் நடத்தினார்.அதன் பின் இக்கோவில் பிரபலமானது.
🍀 பஞ்ச நரசிம்ம தலங்களில் இதுவே முதல் கோவில். அளவில்
சிறியது என்றாலும் உயிரோட்டமுள்ள நரசிம்ம தரிசனத்தால் பக்தர்கள் பரவசத்தில்
மூழ்குகின்றனர்.
🍀 வாடபல்லி என்னும் இக்கிராமத்தில் கிருஷ்ணா, முசி
நதிகள் இணைந்து எல் வடிவில் உள்ளன.
🛣அமைவிடம்🛣
ஆந்திர
மாநிலம் நல்கொண்டா மாவட்டம் வாடபல்லியில் உள்ளது.
🙏🏼#ஜெய்
#ஸ்ரீ
#நரசிம்மா.✍🏼🌹
இதுபோன்ற பல பயனுள்ள
தகவல்களுடன் நமது ஆன்மீக பயணம் தொடரும்!
இறைபணியில்
அன்புடன்....
༺🌷༻தமிழர் நலம்༺🌷༻
💥நன்றி!
கற்போம் கற்பிப்போம்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
🌷🌷முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்
எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த நாள் இனிய நாளாகட்டும்...
வாழ்க 🙌 வளமுடன்
அன்பே🔥இல்லறம்
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை
பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
💦💦💦💦💦💦💦💦💦💦💦💦
சுவாரஸ்யம்: தகவல்கள் : மூச்சு விடும் மூலவர் - குறிப்புகள் [ தகவல்கள் ] | Interesting: information : The source of breath - Tips in Tamil [ information ]