கர்மா எவ்வளவு பெரியது என்பது இவர் வாழ்க்கையை அனைவருக்கும் சாட்சி....தன் சுயநலத்தால் இன்னும் கடைநிலைக்கு வருவார்....இவர் சொத்தும் இவர் மக்களுக்கு பயன்பெறாதுவாரே போகும். இறைவன் முன் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்
இது தான் என்னோட "கர்மா" கர்மா என்றால் என்ன❓
கர்மா எவ்வளவு பெரியது என்பது இவர் வாழ்க்கையை அனைவருக்கும்
சாட்சி....தன் சுயநலத்தால் இன்னும் கடைநிலைக்கு வருவார்....இவர் சொத்தும் இவர் மக்களுக்கு
பயன்பெறாதுவாரே போகும். இறைவன் முன் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்
கர்மா இந்த பூமியில்
மானிட பிறவியாக பிறந்த யாராக இருந்தாலும் உலகத்தில் முதல் பணக்காரனாக இருந்தாலும் பொய்யாக கணக்கெழுதி பிழைத்து தப்பித்தாலும் கோர்டில் பொய்யான முறையில் வழக்குகள் போட்டாலும் பொய்யான தீர்ப்பு
பெற்றாலும் கர்மா என்னும் உண்மையான கணக்கிலிருந்து வழக்கிலிருந்து தீர்ப்பிலிருந்து யாரும் யவரும் உலகில் எப்பேற்பட்டவனும் உயிர் போனபிறகும்
கர்மாவிடமிருந்து தப்பிக்கவே முடியாது. யாராக
இருந்தாலும் கர்மாவிற்கு பதில் சொல்லியே ஆகவேணடும். செய்த கர்மா நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும்
சம்பந்தபட... இது போன்ற மேலும் இடுகைகளைப்
பார்த்து சேர வேண்டும்
கர்மா தெரிந்துவிட்டால் மனிதன் இவளோ ஆட்டம் போட மாட்டான்
! -
நீ யாருக்கு பயப்படுகிறாயோ இல்லையோ உன் மனசாட்சிக்கு கர்ம வினைக்கு
பயந்து வாழு,
கர்ம வினைகளிருந்து யாரும் தப்பிக்க முடியாது
பாவங்களில் பாவங்களில் பெரிய பாவம் உயிர்களை கொள்வது கொன்ற உயிர்களை
தின்பது
நாங்க உங்களுக்கு எல்லாம் கொடுத்தோம். பதிலுக்கு நீங்க என்ன செய்தீர்கள் வைத்து எங்களை கொடுமை படுத்தினீர்கள்.
கர்மா துரத்தினால் என்ன செய்ய வேண்டும்?!
உனது கர்மா கழிக்கின்ற போது பொறுமையாக இருக்கனும் சாமி
உனக்கு நல்லது எது..! கெட்டது எது..! என்று நான் பார்த்து அதை
சரி செய்வேன். ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் நற்பவி நற்பவி
எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யுங்கள்.முடிவு
செய்வதற்கு முன்னால் யோசிக்கவில்லை என்றால் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும்
உங்களை யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கும் வாழ்நாள் முழுவதும்.
முதுமை காலம் வருவதற்கு முன்பாக உங்கள் இளமை காலத்திலேயே உங்களுக்கான
செல்வத்தை சேர்த்து கொள்ளுங்கள்.முதுமையில் தனித்து வாழ்ந்தாலும் தன்மானத்தோடு வாழ
இது உதவும்.
நதியின் இருபக்கமும் கரை இருப்பது போல வாழ்க்கைக்கும் கர்மா
மற்றும் கால சுழற்சி என்ற இரு கரைகள் உள்ளன. இவற்றை தொடாமல் வாழ்க்கை பயணம் தொடர முடியாது:
கர்மாவின் படி நமது நிகழ்காலம் எதிர்காலம் இருக்குமேயானால் நாம்
ஏன் கடவுளை கும்பிட வேண்டும்?
கர்மாவை அனுபவித்தே ஆக வேண்டும் என்று சில பெரியோர்கள் கூறுகிறார்கள், கர்மாவை குறைக்க இயலுமா?
பரிகாரங்களால் கர்மாவை குறைக்க இயலுமா?
அய்யா கடவுளின் மேல் எனக்கு அதிக பக்தி உண்டு, ஆயினும் ஏன் கஷ்டங்களை அனுபவகிக்கிறேன்?
இனி பாவம் செய்யாமல் தவிர்ப்பது எப்படி?
பதில்
தாயை சார்ந்துதான் குழந்தை இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தையின்
செயல்களில் எது சரி, எது தவறு என்று அந்தக்
குழந்தையை விட அவளுக்குத்தான் நன்றாகத் தெரியும்.
அவளையும் மீறி, அவள் கண்காணிப்பை விட்டு
விலகி குழந்தை தவறான செயலைச் செய்து விட்டாலும் கூட, அவள் அதனால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு முயற்சி
செய்து குழந்தையைக் காப்பாள்.
பெரும்பாலும் தாயின் கட்டுப்பாட்டில் இருக்கும் குழந்தை தவறான
செயல்களைச் செய்வதில்லை. அது போலவே கடவுள் மேல் அளவு கடந்த பக்தி செலுத்துபவன் தவறான
செயல்களைச் செய்ய அஞ்சுவான். அது அவனது எதிர் காலத்தை துன்பமற்றதாக அமைத்துத் தரும்.
நீங்கள் கேட்ட கேள்வியின் படி நிகழ்காலம் கடந்த கால கர்மாவின் விளைவாக இருக்கிறது.
இதே நிகழ் காலத்தில் உங்கள் கர்மாதான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது.
அது மனத் தூய்மையோடு கூடிய நல்ல கர்மாவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கடவுளை வணங்கச்
சொல்கிறார்கள்.
கர்மாவை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது மாற்ற முடியாத விதி.
ஆனால், அறிவைக் கொண்டு அதன் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ள முடியும்.
பரிகாரங்கள் நம்பிக்கை ஊட்டுவதற்கான உபாயங்களாகும்.
தன்னம்பிக்கை உடையவன் எத்தகைய சூழலையும் தைரியமாக எதிர் கொள்வான்.
நீங்கள் கொள்ளும் பக்தி என்பது தற்போதைய நிலை.
முன்பு செய்த வினைகளின் விளைவுகளை எதிர் கொள்ளத்தானே வேண்டும்
? ஆயினும் பக்தி உண்மையானதாக இருந்தால் துன்பங்கள் மனதைத் தொடுவதில்லை.
பாவம் செய்யாமல் இருக்க எதுவுமே செய்யாமல் இருக்க வேண்டும். அது முடியாது. எனவே நல்ல
செயல்களை மட்டுமே செய்து வரப் பழக வேண்டும்.
பிறப்பு இறப்பு என்பது ஓயாமல் நடக்கும் வினைப்பயனே ஆகும். இரவும்
பகலும் மாறி மாறி வருவது போல, உடலை எடுப்பதும் பின்
உகுப்பதும் மாறி மாறி நடந்து கொண்டேயிருக்கின்றது. ஒவ்வொரு ஜீவனுக்கும் எண்ணமே வினைக்கு
மூலமாக இருக்கிறது. ஒரு காலத்திற்கு உதவுகிற எண்ணம், இன்னொரு காலத்திற்கு உதவாமல் போய் விடுகிறது.
குழந்தையாக இருக்கும் பொழுது உயர்வாகத் தோன்றிய எண்ணங்கள் வளரும்
பொழுது பொருளற்றதாகப் போய் விடுகின்றன. குழந்தை தன் எண்ணத்தின் மூலம் தனது சூழ்நிலையை
அமைத்துக் கொள்கிறது.
வயது முதிரும் பொழுது அந்த எண்ணமும் சூழலும் பொருளற்றதாகத், தீமை செய்வது போலத் தோன்றுகிறது. அதாவது வேண்டப்படாத எண்ணமும், அதன் விளைவுகளும் தீவினையாக ஒதுக்கித் தள்ளப்படுகின்றன.
ஆக ஒரு காலத்தில் நன்மையாகத் தோன்றுவது பிறகு தீவினையாகப் போய்
விடுகின்றது. புதிய எண்ணங்களின் மூலம் தனது வாழ்வை ஓயாது புதுப்பித்து, அமைத்துக் கொள்வதையே ஜனனமரணம் என்கிறோம். கர்மாவுக்குக் காரணமான
இந்த எண்ணங்கள் அறிவில் இருந்து உதிக்கின்றன.
அறிவு ஆன்மாவிடமிருந்து வந்தது. ஒளிக்கதிர்கள் எல்லாம் சூரியனிடமிருந்து
வந்தது போல, ஜீவன்கள் அனைத்தும் பரம்பொருளிடம் இருந்து வந்தவைகளே. எனவே ஜீவர்கள்
எண்ணுகிற எண்ணங்களும் ஒரு விதத்தில் பரம்பொருளிடம் இருந்து வந்தவைகளே.
ஆயினும் அவரவர்கள் பெற்றுள்ள அறிவுக்குத் தக்கவாறு எண்ணங்களில்
வேற்றுமை ஏற்படுகிறது. அந்த வேற்றுமைக்குத் தக்கவாறு செயல்களும், செயல் விளைவுகளான வாழ்க்கையும் அமைகிறது. எனவே எண்ணங்களைத் திருத்தி
அமைப்பதே வாழ்வின் இலட்சியமாக இருக்கிறது.
அதன் மூலம் செயல்களைத் திருத்திக் கொள்ளும் பொழுது பாவம் செய்யாமல்
அவற்றில் இருந்து விடுபட முடியும். கர்மா என்றால் நல்லது கெட்டது என்று இரண்டாகச் சொல்வார்கள்.
இவை இரண்டின் விளைவுகளையும் அதைச் செய்தவன் அனுபவிக்கிறான். இதில் இருந்து விடுபட விரும்புபவன்
முதலில் நல்ல கர்மாக்களைச் செய்ய வேண்டும்.
இதனால் பாவ கர்மாக்களில் இருந்து விடுபட முடியும். ஆனால், நல்ல கர்மா மட்டுமே செய்வதாலும் கூட அதன் விளைவுகளும் பிறவிகளை
நீட்டிக்கும்தானே ? அதற்கு என்ன செய்வது
? அதற்கு சத் கர்மாக்களை செய்ய வேண்டும். சத் கர்மா என்றவுடன்
வேதம், வேதாந்தம் என்றெல்லாம் யோசிக்க வேண்டாம்.
பரம்பொருளை அடைவதற்கான முயற்சியே சத் கர்மாவாகும்.
அவரவர்கள் செய்த கர்மங்களின் பலன்களை அவரவர்களே அனுபவிக்க வேண்டும்.ஒருவரது
செயலே அவரது கர்மா ஆகிறது.
ஒரு செயலின் ஆரம்பம் என்பது எவ்வளவு முக்கியமாக இருக்கின்றதோ
அந்த செயலின் முடிவும் அவ்வளவு முக்கியமானதாக அமைந்து விடுகின்றது:
1000 குடுத்தாலும்..கர்மாவிடாது.
தன்னிடம் உள்ள கசப்பு போக வேண்டும் என்று பாகற்காய் நினைக்க
வில்லை, மனிதன் தான் தூய்மை
பெற எண்ணி முயற்சித்தால் , அது ஒரு நாள் சாத்தியம்
ஆகும், ஒருவர் எதை எண்ணுகிறாரோ அதுவாகவே ஆகிறார்
கர்மா நர்மதேஷ்வரா சிவலிங்கம் அன்னை நர்மதை நதியிலிருந்து உருவானது.
மகா மிருத்யுஞ்சய ஹோமமும், ருத்ராபிஷேகமும் கடந்த
மகாசிவராத்திரி அன்று பதினோராயிரத்து ஒரு பிராமணர்களால் சம்பிரதாயமாக வழிபட்டது. இந்த
நர்மதேஸ்வர லிங்கத்தை வழிபட்டு சிவபெருமானின் அருள் பெறுங்கள்.
குருவே புரிந்துவிட்டது மற்றவர் எனக்கு செய்யததை அனைத்துயும்
மன்னிக்கேறன் அவர்கள்செய்த அனைத்து கர்மாவையும் இறைவனிடம் ஒப்படைக்கிறேன்
நேரம் நன்றாக இருக்கும் வரைதான் கடவுள். நேரம் கெடும் போது தெய்வமும்
நம்மை விட்டு விலகிடும். இதுதான் நிதர்சனம். இதற்கு தான் நாம் விழுந்து விழுந்து கும்பிடு
கிறோம். இதை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு மட்டும் ஓகே.
அடுத்தவர் மனம் நிறைய வாழ்வது......அடுத்தவர் மனம் வாழ்த்தவாழ்வது...
அடுத்தவர் மனம் நினைக்க வாழ்வது நம் கர்மா என்பது காணமல் போகும்
நல்காரிய வினையே கடவுள் சார்ந்தது கர்மா. உண்னுள் தான். உள்ளது. கர்மா.
என்பது. தொழில். வியாபாரம். தேவை க்குமட்டும். செய். கர்மா. இல்லைகங்கையில் நீராடினாலும் பாவம் போகாது என்ற
பின் எதற்கு அந்த பாவத்தை செய்ய வேண்டும் எதற்கு மனம் வருந்தி அழ வேண்டும் சிவா என்று
இருந்திடு மனமேஉண்மை நம்மை நாமே கேள்வி, கேட்டால், நம் கர்மா நமக்கு பூரணமாக விளங்கும், அதுதான் உண்மை,கா்மாவை முதலில் உணரனும்.இன்றைக்கு
நமது
இந்த நிலைக்கு காரணம் நமது கா்மா மட்டுமே,என்பதை புாிஞ்சிக்கனும்.இதப் புாிஞ்கிட்டா நீ நோ் வழியில் செல்லத்
துவங்குவாய். அறம், பொருள், இன்பம் என்ற பக்குவம் வரும்.சிறுக சிறுக கா்மா குறையும். கா்மா கணக்கு எல்லா பிறவிகளிலும் தொடரும்.(பிறவியே
கா்மாவை போக்கத்தானே) இதை மனிதன் மட்டுமே உணர முடியும்.(அாிது
அாிது மானிடராய் பிறத்லாிது) பாவ,புண்ணிய கணக்குகள்
அணுவளவும் தவறாகது.இதற்கு யாரும் விதிவிலக்கல்ல.
தானமும், தவமும், தா்மமும் கா்மாவை குறைக்கும் மூன்று ஆயுதங்கள். இது உண்மை.
சைவமும் ஜீவ காருண்யமும்
கா்மாவை போக்க உதவும் இது சத்தியம்.
அருட்பெருஞ் சோதி!
அருட்பெருஞ் சோதி!
தனிப்பெருங்கருணை!
அருட்பெருஞ்சோதி!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : இது தான் என்னோட "கர்மா" கர்மா என்றால் என்ன? - குறிப்புகள் [ ] | Spiritual Notes : This is my "karma" What is karma? - Tips in Tamil [ ]