தொண்டை நாட்டுத் திருப்பதிகள் - 22

ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Thontai Natu Tirupatis - 22 - Spiritual Notes in Tamil

தொண்டை நாட்டுத் திருப்பதிகள் - 22 | Thontai Natu Tirupatis - 22

செங்கற்பட்டு - அரக்கோணம் ரயில் பாதையிலுள்ள இந்த ஸ்டேஷனை சென்னை கடற்கரை - காஞ்சீபுரம் ரயிலில் சென்றும் அடையலாம்.

தொண்டை நாட்டுத் திருப்பதிகள் - 22

 

43) திருக்கச்சி அத்திகரி

(அத்தியூர், காஞ்சீபுரம், ஸத்யவ்ரதக்ஷேத்ரம்)

செங்கற்பட்டு - அரக்கோணம் ரயில் பாதையிலுள்ள இந்த ஸ்டேஷனை சென்னை கடற்கரை - காஞ்சீபுரம் ரயிலில் சென்றும் அடையலாம்.

மூலவர் : வரதராஜன், நின்ற திருக்கோலம்

 

44) அஷ்டபுயகரம் (காஞ்சீபுரம்)

காஞ்சியிலேயே வரதராஜர் ஸந்நிதியிலிருந்து 2 கி.மீ. மேற்கே ரங்கசாமி குளத்திற்கு தெற்கே உள்ளது.

மூலவர் : ஆதிகேசவப் பெருமாள். நின்ற திருக்கோலம்

 

45) திருத்தண்கா (தூப்புல், காஞ்சீபுரம்)

காஞ்சியிலேயே அஷ்டபுயகரத்திலிருந்து 1/2 கி.மீ தூரத்தில் மேற்கே உள்ளது.

மூலவர் : தீபப்ரகாசர், விளக்கொளிப் பெருமாள்

 

46) திருவேளுக்கை (காஞ்சீபுரம்)

காஞ்சீபுரத்திலேயே, அஷ்டபுயகரத்திலிருந்து 1 கி.மீ தென்மேற்கே விளக்கொளிப் பெருமாள் கோயிலுக்கு அருகில் உள்ளது.

மூலவர் : அழ்கியசிங்கர், பத்மாஸந திருக்கோலம்

 

47) திரு நீரகம் (காஞ்சீபுரம்)

பெரிய காஞ்சீபுரத்தில் (ஊரகம் )உலகளந்த பெருமாள் கோயிலேயே உள்ளது.

உத்ஸவர் : ஜகதீச்வரர், நின்ற திருக்கோலம்.

 

48) திருப்பாடகம் (காஞ்சீபுரம்)

இதிலிருந்து ஒன்பது திவ்ய தேசங்கள் பெரிய காஞ்சீபுரத்தில் உள்ளன. கங்கைகொண்டான் மண்டபத்தின் அருகில் இந்த ஸந்நிதி இருக்கிறது.

மூலவர் : பாண்டவ தூதர், வீற்றிருந்த திருக்கோலம்

 

49) திரு நிலாத்திங்கள் துண்டம் (காஞ்சீபுரம்)

பெரிய காஞ்சீபுரம் ஏகாம்பரேச்வரர் கோயிலில் உட்பராகாரத்தில் மிகச் சிறிய ஸந்நிதியாக உள்ளது.

மூலவர் : நிலாத்திங்கள் துண்டத்தான்

 

50) திரு ஊரகம் (காஞ்சீபுரம்)

பெரிய காஞ்சீபுரத்தில் பஸ் நிலையத்திற்கு ஸமீபமாகவே உள்ளது.

மூலவர் : திரிவிக்ரமன், உலகளந்த பெருமாள், நின்ற திருக்கோலம்

 

51) திருவெஃகா (காஞ்சீபுரம்)

இது காஞ்சீபுரத்திலுள்ள அஷ்டபுயகரத்திலிருந்து வடக்கே தூரத்திலுள்ளது. யதோக்தகாரி கோயில் என்று விசாரிக்கவும்,

மூலவர் : யதோக்தகாரி, சொன்னவண்ணம் செய்த பெருமாள்.

 

52) திருக்காரகம் (காஞ்சீபுரம்)

பெரிய காஞ்சியில் (ஊரகத்தில்) உலகளந்த பெருமாள் கோயில் ப்ராகாரத்திலேயே உள்ளது.

மூலவர் : கருணாகரப் பெருமாள், நின்ற திருக்கோலம்

 

53) திருக்கார்வானம் (காஞ்சீபுரம்)

பெரிய காஞ்சியில் (ஊரகத்தில்) உலகளந்த பெருமாள் கோயில் மேற்கு ப்ராகாரத்திலேயே ஒரு ஸந்நிதியாக உள்ளது.

மூலவர் : கார்வானர், நின்ற திருக்கோலம்

 

54) திருக்கள்வனூர் (காஞ்சீபுரம்)

பெரிய காஞ்சீபுரத்தில் காமாக்ஷி அம்மன் கோயிலுக்குள், அம்மன் கர்ப்பக்ரஹத்துக்கு வலது பக்கத்தில் இருக்கிறது.

மூலவர் : கள்வர். நின்ற திருக்கோலம்

 

55) திருப்பவளவண்ணம் (காஞ்சீபுரம்)

பெரிய காஞ்சீபுரத்தில் ஏகாம்பரநாதர் கோயிலுக்குக் கிழக்கே அருகிலுள்ளது. ஸந்நிதிகள் இரண்டையுமே ஒரே திவ்யஸ்தலமாகச் சேர்த்தே ஸேவிப்பது இரண்டையுமே ஒரே திவ்யஸ்தலமாகச் சேர்த்தே ஸேவிப்பது வழக்கமாகவிருக்கிறது.

மூலவர் : பவளவண்ணன். நின்ற திருக்கோலம்

 

56) திருப்பரமேச்சுர விண்ணகம்

[காஞ்சீபுரம் - வைகுண்ட பெருமாள் கோயில்]

பெரிய காஞ்சீபுரத்தில் ரயிலடியிலிருந்து சற்று தூரத்தில் உள்ளது. காமாட்சியம்மன் கோயிலுக்குக் கிழக்கே பஸ் ஸ்டாண்டிற்குப் பின்புறமுள்ள. கிழக்கு ராஜவீதியில் வலதுபுறம் செல்லும் சாலையில் உள்ளது.

மூலவர் : பரமபத நாதன், வீற்றிருந்த திருக்கோலம்

 

57) திருப்புட்குழி

காஞ்சீபுரத்திலிருந்து 11 கி.மீ. மேற்கே சென்னை-வேலூர் சாலையில் பாலுசெட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து இடது புறம் 1/2கி.மீ. (ஹைவே) தூரத்தில் ''வெள்ளை கேட்" என்று சொல்லப்படும் லெவல் க்ராஸிங் தாண்டி வலது பக்கத்தில் உள்ளது. சென்னையிலிருந்து 50 மைல் இவ்வூரில் வசதிகள் ஒன்றும் இல்லை.

மூலவர் : விஜயராகவப் பெருமாள், வீற்றிருந்த திருக்கோலம்

 

58) திருநின்றவூர் (திண்ணனூர்)

சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் திருநின்றவூர் என்ற ரயில்வே ஸ்டேஷனிலிருந்து சுமார் 2கி.மீ. தெற்கே சென்று கோயிலை அடைய வேண்டும். சென்னையிலிருந்து பஸ் வசதியும் இதர வசதிகளும் உண்டு.

மூலவர் : பக்தவத்ஸலப் பெருமாள். நீன்ற திருக்கோலம்

 

59) திருஎவ்வுள் (திருவள்ளூர் - புண்யாவர்த்த, வீக்ஷாரண்ய க்ஷேத்ரம்)

சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் திருவள்ளூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து சுமார் 4 5 கி.மீ. வண்டியில் அல்லது டவுண் பஸ்ஸில் போக வேண்டும்.

மூலவர் : வீரராகவப் பெருமாள். புஐங்கசயனம்

 

60) திருவல்லிக்கேணி (ப்ருந்தாரண்ய க்ஷேத்ரம்)

சென்னை - எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 5.கி.மீ திருமயிலை மெட்ரோ ரயில் பாதையில் தனி ஸ்டேஷன் உண்டு இந்த ஆலயத்தில் 5 ஸந்நிதிகள் உள்ளன.

மூலவர் : வேங்கடகிருஷ்ணன் நின்ற திருக்கோலம்.

 

61) திருநீர்மலை (தோயாத்ரி க்ஷேத்ரம்)

சென்னை - தாம்பரம் ரயில் பாதையில் பல்லாவரம் ஸ்டேஷனிலிருந்து சுமார் 6 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கு பெருமாள் நான்கு திருக்கோலங்களில் எழுந்தருளியிருக்கிறார்.

மூலவர் : நீர்வண்ணன்

 

62) திரு இடவெந்தை (திருவடந்தை)

சென்னை - கோவளம் வழியாக மகாபலிபுரம் செல்லும் இல் (மெயின்ரோடிலேயே மேற்கில்) சுமார் 40 கி.மீ தூரத்திலுள்ளது. கோயில் வாசலிலேயே இறங்கலாம். வேறு வசதிகள் இல்லை.

மூலவர் : லக்ஷ்மீ வராஹப் பெருமாள். நின்ற திருக்கோலம்

 

63) திருக்கடல்மல்லை (மஹாபலிபுர க்ஷேத்ரம் அர்த்த சேது)

சென்னையிலிருந்து 55 கி.மீ. தூரத்திலுள்ள திருவிடவெந்தையிலிருந்து சுமார் 15 கி.மீ. க்கு அப்பாலும் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலை பழைய மஹாபலிபுரம் ரோடு இரண்டிலுமே பஸ் வசதியும் ஊரில் மற்றும் வசதிகளும் உண்டு.

மூலவர் : ஸ்தலசயனப் பெருமாள். சயனத் திருக்கோலம்

 

64) திருக்கடிகை (சோளிங்கபுரம்)

சென்னை - பெங்களூர் ரயில் மார்க்கம். அரக்கோணத்திலிருந்து சுமார் 27 கி.மீ. வாலாஜாப்பேட்டையிலிருந்து சுமார் 23 கி.மீ. பஸ்ஸில் வரலம். அதே போல் திருத்தணியிலிருந்தும், சித்தூரிலிருந்தும் பஸ்ஸில் வரலாம்.

மூலவர் : யோக நரஸிம்ஹர், வீற்றிருந்த திருக்கோலம்


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : தொண்டை நாட்டுத் திருப்பதிகள் - 22 - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Thontai Natu Tirupatis - 22 - Spiritual Notes in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்