இந்த உடலானது நாம் உண்ணும் உணவினாலும், குடிக்கும் தண்ணீராலும், சுவாசிக்கும் காற்றினாலும், சூரிய வெளிச்சத்தாலும், சூழ்நிலையின் தட்பவெப்பங்களாலும் வாழ்வு உடையதாய் இருக்கிறது.
நோய் என்றால் என்ன? மனிதனுக்கு நோய் ஏன் வருகிறது?
🟠 இந்த உடலானது நாம் உண்ணும் உணவினாலும், குடிக்கும் தண்ணீராலும், சுவாசிக்கும்
காற்றினாலும், சூரிய வெளிச்சத்தாலும், சூழ்நிலையின்
தட்பவெப்பங்களாலும் வாழ்வு உடையதாய் இருக்கிறது.
🟠 எனவே, நாம் உண்ணும் உணவு நல்ல
உணவாக இருக்க வேண்டும்; குடிக்கும் தண்ணீர் நல்ல நீராக இருக்க வேண்டும்;
🟠 சுவாசிக்கும் காற்று நல்ல காற்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த உலகில் நாம் உடல் நலத்தோடு வாழமுடியும்.
🟠 ஆனால் நாம் எவ்வளவுதான் எச்சரிக்கையோடு நடந்துகொண்டாலும், சில சமயங்களில் நமக்குத்
தெரிந்தோ தெரியாமலோ,
தவறான உணவுகளை உட்கொண்டு
விடுகிறோம்.
🟠 அழுக்கான நீரைக் குடித்து விடுகிறோம்.
🟠 அசுத்தமான காற்றைச் சுவாசித்து விடுகிறோம்.
🟠 அப்பொழுது,
நாம் உண்ட உணவு, குடித்த நீர், சுவாசித்த காற்று
இவற்றில் உள்ள நச்சுப் பொருள்கள் அனைத்தும் நம் உடம்பினுள்ளே போய்ப் படிந்து
விடுகின்றன.
🟠 அவ்வாறு படிந்துவிட்ட நச்சுப் பொருள்களைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. அவற்றை வெளியேற்றுவதற்கு நாம் ஒன்றும் முயற்சி செய்வதும் இல்லை. எனினும், நம் உடம்பானது, தானாகவே அந்த
முயற்சியைச் செய்கிறது.
🔴🔴🔴🔴🔴🔴🔴
உடம்பு செய்யும் அந்த
நன்முயற்சிக்குத்தான் நோய் என்று பெயர்
நாம் தவறான உணவுகளை
உண்ணாமலும் அழுக்கான நீரைக் குடிக்காமலும், அசுத்தமான காற்றைச் சுவாசிக்காமலும், மிக மிக விழிப்போடு
நடந்து கொள்வதாக வைத்துக் கொள்வோம்.
🟠 அப்போதுகூட, நமக்கு நோய் வருவதற்கு
வாய்ப்பு இருக்கிறது. எப்படியென்றால்,
🟠 நாம் எவ்வளவு நல்ல உணவை உண்டாலும், நாம் உண்ணும் உணவு
முழுவதையும் உடம்பு அப்படியே ஏற்றுக்கொண்டு விடுவது இல்லை.
🟠 நாம் எவ்வளவு நல்ல தண்ணீரைக்
குடித்தாலும் நாம் குடிக்கும் தண்ணீர் முழுவதையும் உடம்பு அப்படியே ஏற்றுக்கொண்டு
விடுவது இல்லை.
🟠 நாம் எவ்வளவுதான் நல்ல காற்றைச் சுவாசித்தாலும், நாம் சுவாசிக்கும்
காற்று முழுவதையும் உடம்பு அப்படியே ஏற்றுக்கொண்டு விடுவது இல்லை.
🟠 நாம் உண்ணும் உணவிலே, தனக்குத் தேவையானதை
மட்டும் உள்ளிழுத்துக் கொண்டு, மீதியைக் கழிபொருளாக ஒதுக்கித் தள்ளி விடுகிறது நம் உடம்பு.
🟠 நாம் குடிக்கும் நீரிலே, தனக்குத் தேவையானதை
மட்டும் உள்ளிழுத்துக் கொண்டு, மீதியைக் கழிபொருளாக ஒதுக்கித் தள்ளி விடுகிறது நம் உடம்பு.
🟠 நாம் சுவாசிக்கும் காற்றிலே தனக்குத் தேவையானதை மட்டும் உள்ளிழுத்துக் கொண்டு மீதியைக் கழிபொருளாக ஒதுக்கித் தள்ளி விடுகிறது நம் உடம்பு.
🟠 இந்தக் கழிபொருள்கள் தாம் நாம் வெளிவிடுகிற மூச்சுக் காற்றாகவும், வியர்வையாகவும், சிறுநீராகவும்.
மலமாகவும்,
நமது உடம்பினின்று
வெளித் தள்ளப் படுகின்றன.
எனவே, நம் உடம்பினுள்ளே இரண்டு
வகையான இயக்கங்கள் இடையறாது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒன்று, உள்ளிழுக்கும் இயக்கம்.
மற்றொன்று, வெளித்தள்ளும் இயக்கம்.
🟠 உள்ளிழுக்கும் இயக்கத்தை ஆங்கிலத்தில் (Assimilation) என்று சொல்லுவார்கள்.
வெளித்தள்ளும் இயக்கத்தை எலிமினேஷன் (Elimination) என்று சொல்லுவார்கள்.
இவ்விரண்டு இயக்கங்களும்
சீராக நடைபெற்று வருமானால், நமக்கு நோயே வரமாட்டாது. நோயே மட்டுமன்று, நமக்கு மரணமேகூட
வரமாட்டா.
🟠 இந்த இயக்கங்களில் சீர்கேடு ஏற்படும்போதுதான், நமக்கு நோய் தோன்றுகிறது. மரணமும் நேருகிறது! இவ்வியக்கங்களை
நடத்தும் சக்திக்கே பிராணசக்தி (Life Force) என்று பெயர்.
💐
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.
- தமிழர் நலம்
ஆரோக்கியம் குறிப்புகள் : நோய் என்றால் என்ன? மனிதனுக்கு நோய் ஏன் வருகிறது? - ஆயுட்காலம் குறைவதற்கு இதுதான் காரணமா? [ ] | Health Tips : What is disease? Why do people get sick? - Is this the cause of reduced life expectancy? in Tamil [ ]