வகை: தன்னம்பிக்கை
வெற்றி பெற விரும்பும் ஒவ்வொருவருக்கும் முக்கியமான தேவையாக இருப்பது மனஉறுதி. தாங்கள் எடுக்கும் முயற்சிகளில் ஏதாவது பின்னடைவுகள் ஏற்பட்டால் மனஉறுதி இல்லாதவர்கள் அதை அப்படியே கைவிட்டு விடுவார்கள். ஆனால் மனஉறுதி உள்ள நபர்கள் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தங்களுடைய முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள். மனஉறுதியை அதிகரித்துக் கொள்ளும் நான்கு எளிய வழிமுறைகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 1. வீண் உரையாடலை தவிர்க்கவும் வெற்று அரட்டை மற்றும் வாழ்க்கைக்கு தேவையே இல்லாத உரையாடல்களில் நேரத்தை வீணடிப்பதை முதலில் தவிர்க்க வேண்டும். வீண் அரட்டை பெரும்பாலும் தேவையில்லாத வதந்திகள் மற்றும் கிசுகிசுக்களை கொண்டு வந்து சேர்க்கிறது. பிறரை பற்றிய செய்திகள் எந்த விதத்திலும் ஒருவருக்கு நன்மை சேர்த்து விட முடியாது. பிறரின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழும் விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதால் ஒரு பயனும் இல்லை. தேவையற்ற தகவல்களை மனதில் சேமித்தால் மனதின் ஆற்றல் குறைந்து போகும். பிறரை பற்றிய வதந்திகளை கேட்கும்போது அது நமது மனத்தையும் பாதிக்கும். நாம் கேட்கும் ஒவ்வொரு வார்த்தையும் மனதில் பதிவாகிவிடும். தேவையற்ற தகவல்கள் நமது மூளையில் பதிவாகி எண்ணங்களைச் சீர்குலைத்து கவனத்தையும் அமைதியையும் பாதிக்கிறது. அர்த்தமுள்ள விவாதங்கள் மற்றும் தீர்வுகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது.
வகை: ஆரோக்கியம் குறிப்புகள்
நாட்டு வைத்தியத்தில் தேனின் பங்கு மிகவும் பெரிது. வீட்டு கை வைத்தியத்திலும் தேனுக்கு பெரும் பங்கு உண்டு. ஒரு ஸ்பூன் துளசி சாறுடன் சிறிது தேன் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், தலைவலி, தொண்டை வலி பிரச்னைகள் வராது. வேப்பம்பூவை தேனில் ஊற வைத்து, தினமும் இரவு உறங்கச் செல்லமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்து, உடல் பலம் பெறும். குழந்தைகளுக்கு தினம் அரை ஸ்பூன் தேன் கொடுத்து வந்தால் பல், எலும்பு உறுதியாக இருக்கும். உஷ்ணத்தினால் வயிற்று வலி ஏற்பட்டால், ஒரு கப் வெந்நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால், வலி உடனடியாக நின்று விடும். காலையிலும், மாலையிலும் பசும்பாலில் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர, நரம்புகள் உறுதி பெறும். இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளும் தீரும். தேனில் சிறிது மாதுளம் பூக்களை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், தொண்டைப்புண், வயிற்றுப்புண் நீங்கும். சிறு காயங்களின் மீது தேன் தடவினால் விரைவில் ஆறிவிடும். வடு கூட ஏற்படாது. குழந்தைகளுக்கு தினமும் இரண்டு ஸ்பூன் தேன் சாப்பிடக் கொடுத்தால், இரத்தம் சுத்தமாகும். தசைகள் உறுதி பெறும். கரும்புச் சாறுடன், சிறிது தேன் கலந்து பருகி வர, மலச்சிக்கல் தீரும். தீக்காயங்களின் மீது தேனை தடவி வர சீக்கிரம் ஆறி விடும். எரிச்சலும் இருக்காது.
வகை: ஆன்மீக குறிப்புகள்
சிவ பெருமானின் ருத்ர வடிவமான பைரவர் கால பைரவர், ஆதி பைரவர், சொர்ண பைரவர், உக்கிர பைரவர், சொர்ண ஆகர்ஷன பைரவர் உள்ளிட்ட பல வடிவங்களில், பல பெயர்களில் பல கோவில்களில் அருள் செய்து வருகிறார். நாய், பைரவரின் வாகனம் என்பதால் நாயை பைரவரின் அம்சமாக கருதி வழிபடும் வழக்கமும் பல தலங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. பைரவர், சனியின் குருவாகவும், பன்னிரெண்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள், காலம் ஆகியவற்றை கட்டுப்படுத்துபவராக சொல்லப்படுகிறது. மொத்தம் 64 பைரவ ரூபங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பைரவரை எப்படி வழிபட்டால், என்ன பலன் கிடைக்கும், என்ன செய்தால் அவரின் அருளை முழுவதுமாக பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம். பைரவர் வழிபாடு : சிவபெருமானுடைய 64 வடிவங்களில் ஒருவராக விளங்கும் பைரவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்கிறார். எனவே இவருக்கு ஐந்து தீபங்கள் வைத்து விளக்கேற்றி வழிபடும் பொழுது, காலத்தால் தீர்க்க முடியாத எத்தகைய பிரச்சனையையும் அவர் தீர்த்து வைப்பார் என்பது நம்பிக்கை. சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்குத்தான். காவல் தெய்வமாக விளங்கும் பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். பைரவரை வழிபட ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி மிக உகந்த நாளாகும். பைரவரை வழிபட ஏற்ற நாட்கள் ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் பைரவரை வழிபட உகந்த நாட்கள் ஆகும். இருந்தாலும், தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி பைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக சொல்லப்படுகிறது. இவரை விசேஷ பூஜைகள் ஏதும் செய்யாமல் மனதார அழைத்தாலே உடனடியாக ஓடி வந்து பக்தர்களை காக்கக் கூடியவர்.
வகை: சிந்தனை சிறு கதைகள்
அது ஒரு சிறிய கிராமம். அக்கிராமத்தில் ஒரு இளைஞன் ஒரு தொழிலும் செய்யாமல் ஊர் சுற்றித் திரிந்தான். பாடசாலைப் படிப்பை கைவிட்டு விட்டான்.
வகை: சிந்தனை சிறு கதைகள்
'வெற்றி கொள்வதற்கு இந்த உலகில் இனி நாடே இல்லை" என்று கவலைப்பட்டவன் மாவீரன் அலெக்சாண்டர் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.
வகை: சிந்தனை சிறு கதைகள்
ஒரு பிச்சைக்காரன் மத்தியான வெய்யில் நேரத்தில் தெருவில் நின்று பிச்சையெடுத்துக் கொண்டு நின்றான். அந்த வழியில் ஒரு பணக்காரன் குதிரையில் வந்தான். பிச்சைக்காரனைப் பார்த்துப் பரிதாபப்பட்டான்.
வகை: சிந்தனை சிறு கதைகள்
வட்டிக்குப் பணம் கொடுத்தல், நகை அடகு பிடித்தல் முதலான தொழில்களைச் செய்பவர்களை செட்டியார் என்று பொதுவாகச் சொல்வர். 'செட்டி' என்று ஒரு குலமும் உண்டு.
வகை: சிந்தனை சிறு கதைகள்
அது ஒரு அழகிய கிராமம். அந்தக் கிராமத்தின் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் ஒரு குடிசை இருந்தது. அந்தக் குடிசையில் ஒரு துறவி வாழ்ந்து வந்தார்.
வகை: சிந்தனை சிறு கதைகள்
ஓர் ஊரில் ஒரு பெரியவர் இருந்தார். அவர் மிகவும் நல்லவர். அந்த ஊர் மக்களால் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். எல்லோருக்கும் நல்லதையே செய்வார்.
வகை: சிந்தனை சிறு கதைகள்
அது ஒரு பெரிய நகரம். அந்த நகரத்தில் அவர் ஒரு பெரிய பணக்காரர். பணத்தை எந்த வழியில் தேடலாம் என்று ஓயாமல் யோசித்துக் கொண்டே இருப்பார்.
வகை: சிந்தனை சிறு கதைகள்
அவன் ஒரு வேடுவன். வேட்டையாடுவது அவனது தொழில். ஒருநாள் விலங்குகளை வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குச் சென்றான். வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டு விலங்குகளைத் துரத்திச் சென்றான்.
வகை: சிந்தனை சிறு கதைகள்
அது ஒரு பெரிய காடு. அங்கே இருந்த பெரிய மரம் ஒன்றில் காட்டுப் பூனை ஒன்று வசித்து வந்தது. அந்த மரத்தினடியில் மண்ணுக்குள் குழிதோண்டி அந்தக் குழிக்குள் ஒரு எலி வசித்து வந்தது.