வகை: வணிகம்: டிஜிட்டல் மார்க்கெட்டிங்
அனைத்து துறைகளிலும் போட்டியாளர்கள் (competitor) இருப்பார்கள். ஏன்? இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி போட்டியாளர்கள் இருப்பதினால் தான் சந்தையில் (market) சிறந்த தரமான பொருள்கள் கிடைக்கிறது.
வகை: வணிகம்: விபரங்கள்
ஒரு நிறுவனம் மற்றும் பொருளுக்கான (product) தேர்ந்தெடுக்கும் பெயர் அந்த நிறுவனத்தின் பிராண்ட் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.
வகை: வணிகம்: டிஜிட்டல் மார்க்கெட்டிங்
மின்னணு ஊடகங்கள் வழியாக தயாரிப்புக்கள் மற்றும் அதன் சேவையை சந்தைப்படுத்துதல் என்பது Digital Marketing ஆகும்.
வகை: ஆன்மீகம்: சிவன்
1. நெல்லையப்பர் கோவிலின் மொத்த பரப்பளவு 14 ஏக்கர். 2. தன் வியாபாரத்துக்காகப் பால்குடம் சுமந்துசென்ற ஓர் இடையனைத் தினமும் மூங்கில் முளை உருவில் தடுக்கி விழவைத்து. இறைவன் தன்னைக் காண்பித்துக் கொண்ட தலம் இது.
வகை: ஆன்மீகம்: சிவன்
திருநெல்வேலியில் ஓடும் தாமிரபரணியில் எப்போதும் தண்ணீர் வற்றுவதில்லை. இந்நதியை அகத்தியர் உண்டாக்கியது ஒரு காரணம் என்றாலும், நதி செழிப்புடன் இருப்பதற்கு நெல்லையப்பரே மூலகாரணம் என்கிறார்கள். ஆம்! இக்கோயிலின் அமைப்பைப் பார்த்தால் இவ்விஷயம் புலப்படும்.
வகை: ஆன்மீகம்: சிவன்
இக்கோயிலில் காந்திமதி அம்பாள். கணவர் நெல்லையப்பருக்கு உச்சிக் காலத்தில் அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம்.
வகை: ஆன்மீகம்: சிவன்
மன்னன் நெடுமாறன், அம்மை உமையவளிடம் ஞானப்பால் குடித்த ஞான சம்பந்தனின் அருளால், சமண சமயத்தினின்றும் சைவ சமயம் சார்ந்தார். சிவபக்தி முதிர்ந்தவராய் நெல்லையம்பதியில் வந்து தங்கி மனைவி மங்கையர்க்கரசி போற்ற வாழ்ந்தார்.
வகை: ஆன்மீகம்: சிவன்
அருள்மிகு நெல்லையப்பருக்கும், அருள்தரும் காந்திமதி அம்பாளுக்கும் விழாக்களும், பூசைகளும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஆண்டுதோறும் (ஜூன்-ஜூலை) ஆனிப்பெருந்திருவிழா மிகச் சிறப்பாகப் பத்து நாட்கள் கொண்டாடப்படும்.
வகை: ஆன்மீகம்: சிவன்
காந்திமதிக்குத் தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலையில் விளாபூஜை (7 மணி) நடக்கும் வரையில், அம்பிகை வெண்ணிற புடவையிலேயே காட்சி தருகிறாள்.
வகை: ஆன்மீகம்: சிவன்
இரண்டாம் பிரகாரத்தின் முகப்பில் அமைந்துள்ள மண்டபத்தில், இசைத் தூண்கள் உள்ளன. ஒவ்வொரு சிறிய தூண்களிலிருந்தும் ச,ரி,க,ம,ப,த,நி என்ற ஏழு சுரங்களையும் கேட்க முடிவதே இதன் சிறப்பு!
வகை: ஆன்மீகம்: சிவன்
மூலஸ்தானம் அருகில் தனி சன்னதியில் திருமால், பள்ளி கொண்ட கோலத்தில், சிவலிங்க பூஜை செய்தபடி இருக்கிறார். அருகில் உற்சவர் விஷ்ணு, மார்பில் சிவலிங்கத்துடன் காட்சி தருகிறார்.
வகை: ஆன்மீகம்: சிவன்
சுவாமி சன்னதி அருகே உள்ள பொல்லாப்பிள்ளையாரை வணங்கினால், குழந்தை இல்லாத தம்பதிகள் விரைவில் குழந்தை பெறுவர் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.