ப்ரோக்கோலி பொரியல்
Category: சமையல் குறிப்புகள்
1. ப்ரோக்கோலியை நன்றாக கழுவி சிறு சிறு பூக்களாக பிரித்துக் கொள்ளவும். தண்டுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி பூண்டு தேன் சாறு
Category: சமையல் குறிப்புகள்
இந்த ஆரோக்கியமான இஞ்சி பூண்டு பானத்தை வாரம் ஒரு முறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் பித்தம், கொழுப்பு அளவு மற்றும் இரத்த அழுத்தம் குறையும்.
புளியோதரை
Category: சமையல் குறிப்புகள்
நேரம் கிடைக்கும் பொழுது இந்தப் புளிக்காய்ச்சலையும், புளியோதரைப் பொடியையும் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். சரியான பக்குவத்தில் தயாரிக்கப் பட்டால் இவை ஆறு மாதங்கள் ஆனாலும் கெடாது.
30 வகை இட்லி!
Category: சமையல் குறிப்புகள்
இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மை யாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது. அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப.
தஞ்சாவூர் அடை
Category: சமையல் குறிப்புகள்
அட்டகாசமான தஞ்சாவூர் அடை தயார். தஞ்சாவூர் அவியலுடன் சாப்பிடுவது கூடுதல் சிறப்பு.
சேமியா பாயாசம் செய்வது எப்படி???
Category: சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள்: சேமியா ......100 கி பால் ......1/2 லி சர்க்கரை.........100 கி எலக்காய்........ 3 முந்திரி........10 விதையில்லா திராட்சை .........10 நெய்......20 கி
கத்தரிக்காய் சாதம்
Category: சமையல் குறிப்புகள்
1. அரிசியை மூன்று முறை கழுவி 20 நிமிடங்கள் 1 கப் தண்ணீரில் ஊறவைத்து, பின் மீதமுள்ள 1.5 தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும்.
ஊட்டச்சத்து நிறைந்த கேழ்வரகு உருண்டை
Category: சமையல் குறிப்புகள்
கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம். வாரம் இருமுறை, கேழ்வரகில் செய்த உணவுகளை சாப்பிட்டுவந்தால் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மை அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை இனிப்பு உருண்டையாக செய்துகொடுக்கலாம்.
கருப்பட்டி பொங்கல் செய்வது எப்படி?
Category: சமையல் குறிப்புகள்
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் இரண்டு கப் பால் மற்றும் அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும்
இறால் பெப்பர் கிரேவி செய்வது எப்படி தெரியுமா?
Category: சமையல் குறிப்புகள்
வெங்காயத்தை ஒன்றிரண்டாக மிக்ஸியில் போட்டு அடித்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை நைஸ் பேஸ்ட்டாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
இல்லத்தரசிகளுக்குப் பயனுள்ள சமையல் குறிப்புகள் இருபது இதோ...
Category: சமையல் குறிப்புகள்
சமையல் என்பது முழு மனத்துடன் ஈடுபாடு காட்டி செய்யவேண்டிய ஒரு அருமையான கலை. பல்வேறு நுணுக்கங்கள் அதில் அடங்கியுள்ளன. சின்னச்சின்ன விஷயங்கள் கூட உங்கள் சமையலை மிகச் சிறப்பாக்கிவிடும். இல்லத்தரசிகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக 20 பயனுள்ள குறிப்புகளை இங்கு காணலாம்!!!
மொறுமொறு பன்னீர் சீஸ் தோசை மிஸ் பண்ணிடாதீங்க
Category: சமையல் குறிப்புகள்
உணவை விதவிதமாகவும் சுவையாகவும் சாப்பிடுவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடிக்கும். நாவூரும் சுவையில் தக்காளி குழம்பு... 10 நிமிடத்தில் தயார் செய்யலாம் இவ்வாறு சாப்பிடும் போது நாம் காலை உணவாக எல்லோரது வீட்டிலும் அதிகமாக செய்வது தோசை தான். இந்த தோசையை எவ்வாறு விதவிதமாக செய்யலாம் என்பது பலருக்கும் தெரிந்தது இல்லை. அந்த வகையில் இன்று வித்தியாசமாக பன்னீர் சீஸ் தோசை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மசாலா டீ சுவையாக செய்வது எப்படி?
Category: சமையல் குறிப்புகள்
டீ தூள் - மூன்று தேக்கரண்டி சுக்குப்பொடி - இரண்டு சிட்டிகை அல்லது துருவிய இஞ்சி - அரை தேக்கரண்டி
திருநெல்வேலி சொதி குழம்பு
Category: சமையல் குறிப்புகள்
பாசிப்பருப்புடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு மூன்று விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி ஒன்றரை டம்ளர் சேர்த்து தண்ணீர் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து பிழிந்து முதலாம் தேங்காய் பாலை எடுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு அதே தேங்காயில் ஒன்றரை டம்ளர் சேர்த்து தண்ணீர் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து பிழிந்து இரண்டாம் தேங்காய் பாலை எடுத்து வைத்துக் கொள்ளவும். கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு,முருங்கைக்காய் நீளவாக்கில் சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாயை சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஆவி பறக்க சுவையான அவல் இட்லி
Category: சமையல் குறிப்புகள்
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் அவலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் அரைத்த அவலைப் போட்டு அரிசி மாவு, தயிர், உப்பு எல்லாம் சேர்த்து தண்ணீர் விட்டு பதமாக இட்லி மாவுப் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு மணிநேரம் ஊற விடவும். வேண்டுமென்றால் மீண்டும் சிறிது தண்ணீர் தெளித்து மிக்ஸியில் ஒரு சுற்றுவிட்டு அரைக்கவும். கடைசியாக சோடா உப்பு சிறிதளவு சேர்த்து கலக்கி விடவும்.
மட்டன் பிரியாணி
Category: சமையல் குறிப்புகள்
மட்டனை நன்கு கழுவி அதனுடன் இரண்டு ஸ்பூன் தயிர், மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பாஸ்மதி அரிசியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து அதனுடன் பெரிய வெங்காயம் அரைத்துக் வைத்துள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
வெஜ் புலாவ் செய்வது எப்படி?
Category: சமையல் குறிப்புகள்
அரிசியைக் கழுவி, தேங்காய்ப்பால், இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து ஊறவையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். குக்கரில் நெய், எண்ணெயைக் காயவைத்து, பிரிஞ்சி இலையை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், அரைத்த விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு தக்காளி, உப்பு சேர்த்து நன்கு கிளறி தேங்காய்ப்பால், தண்ணீருடன் அரிசியைச் சேருங்கள். குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.
குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா
Category: சமையல் குறிப்புகள்
1. குடைமிளகாய் மற்றும் உருளைக் கிழங்கை நீளமாக நறுக்கி கொள்ளவும். 2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய கிழங்கை சேர்த்து வதக்கவும். அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து மூடி வைத்து மிதமான சூட்டில் வதக்கவும். 3. உருளைக்கிழங்கு நன்கு வதங்கியதும் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். அதோடு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். 4. குடைமிளகாய் லேசாக வதங்கியதும் புளிக்கரைசல் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி சிறிது கெட்டியானதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான எளிமையான குடைமிளகாய் உருளை மசாலா தயார்.
எளிமையான சமையல் டிப்ஸ் உங்களுக்காக இதோ!
Category: சமையல் குறிப்புகள்
சப்பாத்தி மிருதுவாக, சுவையை வருவதற்கு கோதுமை மாவு அரைக்கும் போது சோயா பீன்ஸை சேர்த்து அரைக்கவும்.
முருங்கைக்கீரை சூப் செய்வது எப்படி?
Category: சமையல் குறிப்புகள்
முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு (இலைகள் மட்டும்) எண்ணெய் – இரண்டு டீஸ்பூன் சீரகம் – அரை டீஸ்பூன் சின்ன வெங்காயம் – நான்கு
சமையல் டிப்ஸ்
Category: சமையல் குறிப்புகள்
1. வீட்டில் தயாரிக்கும் பனீர், கடைகளில் விற்பது போல் கட்டியாக இருப்பதில்லையே? ஏன்? பால் திரிந்து பனீரை ஒரு துணியில் வடிகட்டியதும், அதை துணியுடனே குளிர்ந்த நீரில் கழுவவும். பிறகு துணியுடனே ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் மார்பிள் சப்பாத்திக் கல் அல்லது இடிக்கும் சிறிய உரல் வைத்து, ஒரு மணி நேரம் கழித்து துணியை எடுத்து விட்டு துண்டுகள் போடவும். அழகாக சதுர வடிவத் துண்டுகளாக கடைகளில் கிடைப்பது போலவே வரும்.
காளான் கறி
Category: சமையல் குறிப்புகள்
1. காளானை நறுக்கி வைத்து கொள்ளவும். 2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஷாஹி ஜீரா சேர்க்கவும். 3. அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். 4. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 2 நிமிடத்திற்கு பிறகு தக்காளி விழுது சேர்த்து மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை வதக்கவும். 5. அடுத்து உப்பு, மஞ்சள் தூள், சீரக தூள், தனியா தூள், கஷ்மீரி மிளகாய் தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து விடவும். 6. பின்பு நறுக்கிய காளானை சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் வேகவிடவும்.
சிக்கன் சுக்கா செய்வது எப்படி
Category: சமையல் குறிப்புகள்
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். அதன் பிறகு அதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். நன்றாக வதங்கிய பிறகு சிக்கன் சேர்த்து பிரட்டவும், அப்பொழுது அதிலேயே தண்ணீர் வரும்.
நார்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி பற்றி தெரிந்து கொள்வோமா
Category: சமையல் குறிப்புகள்
நார்த்தங்காயை மட்டும் எடுத்துச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 🍒 சுத்தமான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு முதலில் நறுக்கிய நார்த்தங்காய்களைப் போட்டு, அதன் மேல் மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கலந்து கொள்ளவும். 🍒 இப்படி கலந்த பின்பு, அதை ஒரு சுத்தமான பாட்டிலுக்கு மாற்றி மூடி போட்டு வைக்கவும். 🍒 பாட்டிலில் அடைக்கப்பட்ட நார்த்தங்காய்த்துண்டுகளைத் தினமும் இரண்டுமுறை, ஒரு கரண்டியால் நன்கு கலக்கி விடவும். 🍒 சுமார் ஐந்து நாட்கள் நார்த்தங்காய்கள் உப்பில் நன்கு ஊறி, மிகவும் மிருதுவாக இருக்கும். 🍒 பின்னர் ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மிளகாய் வற்றலைப் போட்டு நன்கு வறுக்கவும்.
மீன் மிளகு வறுவல் செய்வது எப்படி
Category: சமையல் குறிப்புகள்
மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி, மெலிதாக நறுக்கி வைக்கவும். மிளகு, சீரகம், சோம்பை வறுத்து நைசாக அரைக்கவும். இஞ்சி, பூண்டையும் நன்கு அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் கழுவிய மீனைப் போட்டு, அதில் அரைத்த மிளகு, சீரகம், சோம்பு + இஞ்சி பூண்டு விழுது + எலுமிச்சை சாறு +உப்பு+ சோளமாவு போட்டு பிசையவும். ❤ சோளமாவு மசாலா உதிராமல் மீனுடன் ஒட்டி இருக்க உதவும். அதனை அப்படியே ஒரு மணி நேரம் குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும். பின்னர், அடுப்பில்ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் மீன் துண்டுகளை ஒவ்வொன்றாய் போடவும். தீயை சீராக எரிய விடவும். ❤ மீன் துண்டுகளை ஒவ்வொன்றாய் நகர்த்தி விடவும் இல்லையென்றால் மீன் கருகி விடும். ❤ பின்மீனில் ஒட்டியுள்ள மசாலா சிவந்து ஒரு பக்கம் வெந்ததும், அவற்றை மிக மெதுவாக உடையாமல் அப்படியே புரட்டிப் போடவும். இரு பக்கமும் நன்கு வெந்து சிவந்ததும் மீனை எடுத்து விடவும்.
புளி ரசம் சுவையாக செய்வது எப்படி
Category: சமையல் குறிப்புகள்
💥 புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும். 💥 மிக்ஸியில் காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலையை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு ஓரளவுக்கு அரைத்துக்கொள்ள வேண்டும். 💥 வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகை போட்டு தாளிக்கவும், அதன் பிறகு பெருங்காயத்தை போட்டு தாளிக்கவும். 💥 பின்பு அரைத்து வைத்துள்ளதை எண்ணெயில் போட்டு வதக்க வேண்டும். அதனுடன் தக்காளியை போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும். 💥 அதன் பிறகு வதக்கிய பிறகு கரைத்து வைத்துள்ள புளியை ஊற்ற வேண்டும். அதனுடன் ரசப் பொடியை போட்டு நுரைத்து வரும் போது கொத்தமல்லித் தழையை தூவி இறக்கி விடவும்.
பூண்டு தொக்கு செய்வது எப்படி பற்றி தெரிந்து கொள்வோமா
Category: சமையல் குறிப்புகள்
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து குறைந்த தீயில் வைத்து நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். காய்ந்த மிளகாய் நன்றாக சிவந்து மொறு மொறு வென்று வறுபட்ட பிறகு அதை எடுத்து தனியாக வைத்துவிட்டு மீதம் இருக்கும் எண்ணெயில் உரித்து சுத்தம் செய்து வைத்திருக்கும் பூண்டு பற்களை சேர்க்க வேண்டும். பூண்டை இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அதில் சீரகம், புளி, இஞ்சி இவற்றை சேர்த்து மூன்று நிமிடம் வதக்க வேண்டும். பூண்டு நன்றாக பொன்னிறமாக சுருங்கி வரும் வரை வதக்கிக் கொண்டே இருக்க வேண்டும். நன்றாக சுருங்கி வதங்கிய பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து நம் முதலில் வறுத்து வைத்திருந்த காய்ந்த மிளகாயை அதில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம் பிறகு இதனுடன் நாம் வதக்கி வைத்திருக்கும் பூண்டை எண்ணெயுடன் சேர்த்து வெல்லத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் பூண்டு தொக்கு தயாராகி விட்டது. இதை தாளிப்பதற்கு தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை இவற்றை சேர்த்து இவை அனைத்தும் நன்றாக பொரிந்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் பூண்டு தொக்கில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
சேமியா பாயாசம் செய்வது எப்படி?
Category: சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள் சேமியா - 125 கிராம் பால் - 750 மில்லி நெய் - 1 டேபிள்ஸ்பூன் முந்திரிப்பருப்பு - சிறிதளவு
பிரியாணி பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க....
Category: சமையல் குறிப்புகள்
சில உணவுகளை சுவைக்கும் போது நம் முகம் மலர்ந்து நம்மை அறியாமல் ஆகா என்று கூறும் அனுபவத்தை நாம் அவ்வபோது பெற்றிருப்போம். இன்னும் சில உணவுகளோ சுவைப்பதற்கு முன்னரே அந்த உணவின் மணமே அந்த மகிழ்வான அனுபவத்தை தரும்.
சமையலில் செய்யக்கூடாதவை பற்றி தெரிந்து கொள்வோமா
Category: சமையல் குறிப்புகள்
ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது. தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது. பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது. குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. #காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது. காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கினறன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும். கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும். ஓட்டைகள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக்கூடாது. பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும். எனவே, இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். பாலைத் திரித்து பனீராக்குவதற்கு எலுமிச்சைச் சாறு ஊற்றுவோம். அதற்கு பதில் தயிர் ஊற்றி, பாலைத் திரித்தால் பனீர் புளிக்காமல் சுவையாக இருக்கும். பூரிக்கு மாவு பிசையும்போது கால் டீஸ்பூன் ரவையைச் சேர்த்துக் கொண்டால், பூரி புஸுபுஸுவென உப்பலாக இருக்கும். எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். அதில் தாளித்ததை ஊற்றிக் கலக்கிய பிறகு, சாதத்தில் சேர்த்துக் கிளறினால், சாதம் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
தட்டை செய்வது எப்படி
Category: சமையல் குறிப்புகள்
கடலைப் பருப்பையும் உளுந்தையும் தனித்தனியே ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு பவுலில் அரிசி மாவு, உளுந்து மாவு, எள், மிளகாய்த்தூள், உப்பு, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, பெருங்காயம், ஊறவைத்த கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்
Category: சமையல் குறிப்புகள்
1. கருப்பு கவுணி அரிசி மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. மாப்பிள்ளை சம்பா அரிசி : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. பூங்கார் அரிசி : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. காட்டுயானம் அரிசி : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5. கருத்தக்கார் அரிசி : மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 6. காலாநமக் அரிசி : புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 7. மூங்கில் அரிசி: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 8. அறுபதாம் குறுவை அரிசி : எலும்பு சரியாகும். 9. இலுப்பைப்பூசம்பார் அரிசி : பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 10. தங்கச்சம்பா அரிசி : பல், இதயம் வலுவாகும். 11. கருங்குறுவை அரிசி : இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். 12. கருடன் சம்பா அரிசி : இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
தேங்காய் மிளகு நண்டு
Category: சமையல் குறிப்புகள்
நண்டைச் சுத்தம் செய்து கழுவி நீரை வடித்து இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவிடவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெறும் வாணலியில் தேங்காய் துருவல், மிளகு இரண்டையும் தனித்தனியாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஊற வைத்த நண்டில் வறுத்த தேங்காய் துருவல், மிளகு சேர்த்து மீண்டும் 10 நிமிடங்கள் ஊறவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி விட்டு, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலாத் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் ஊற வைத்த நண்டைச் சேர்த்து பிரட்டவும்.
சுவையான செட்டிநாடு சிக்கன் கிரேவி
Category: சமையல் குறிப்புகள்
சிக்கனைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி எடுத்துக் கொள்ளவும். மிளகை அரைத்து பொடியாக்கி கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய் துருவலுடன், சோம்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் பொடி செய்த மிளகு, சீரகம் மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, கிரேவி போல் வரும் வரை நன்கு கிளறவும். பிறகு கொத்தமல்லித் தழை தூவி கிளறிவிட்டு, சிக்கனைப் போட்டு பிரட்டிவிடவும். அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் வைத்திருக்கவும்.
இல்லத்தரசிகளின் 'ஸ்மார்ட்' சாய்ஸ்: வாழ்வை எளிதாக்கும் 25 அசத்தலான வீட்டுக்குறிப்புகள்!
Category: வீட்டு சமையல் குறிப்புகள்
சமையல் அறையில் கஷ்டப்படுகிறீர்களா? துணிகளில் ரத்தக்கறை போகவில்லையா? உங்கள் வேலையை பாதியாகக் குறைத்து, வீட்டைப் பளபளக்க வைக்கும் 25 மேஜிக் குறிப்புகள் இங்கே!
இல்லத்தரசிகளுக்கான 25 அசத்தலான வீட்டு சமையல் மற்றும் பராமரிப்பு குறிப்புகள்! நேரமும் பணமும் மிச்சம்!
Category: சமையல் குறிப்புகள் / வாழ்வியல்
சமையலறை முதல் துணி துவைப்பது வரை உங்கள் வேலையைச் சுலபமாக்க 25 எளிய குறிப்புகள் இதோ! பழைய பொருட்களைப் புதியதாக்கவும், சிக்கனமாகவும் செயல்பட இந்த ரகசியங்கள் உதவும்.

நேரம் இல்லையா? 2026-ன் நவீன ஏஐ கிச்சன் டூல்கள் மற்றும் பாரம்பரிய சிறுதானியங்களை வைத்து 10 நிமிடத்தில் சமைப்பது எப்படி? 'தமிழர் நலம்' வழங்கும் 5 ஆரோக்கிய ரகசியங்கள்!
: சமையல் - சமையல் குறிப்புகள் 2026, ஆரோக்கியமான உணவு முறை, தமிழர் நலம் சமையல் செய்திகள், ஏஐ சமையல் அசிஸ்டண்ட், சிறுதானிய உணவுகள் 2026, விரைவான சமையல் டிப்ஸ். [ சமையல் ] | : Cooking - Cooking Tips 2026, Healthy Eating Habits, Tamil Wellness & Culinary News, AI Cooking Assistant, Millet-based Foods 2026, Quick Cooking Tips. in Tamil [ Cooking ]
: சமையல் - சமையல் குறிப்புகள் 2026, ஆரோக்கியமான உணவு முறை, தமிழர் நலம் சமையல் செய்திகள், ஏஐ சமையல் அசிஸ்டண்ட், சிறுதானிய உணவுகள் 2026, விரைவான சமையல் டிப்ஸ். [ சமையல் ] | : Cooking - Cooking Tips 2026, Healthy Eating Habits, Tamil Wellness & Culinary News, AI Cooking Assistant, Millet-based Foods 2026, Quick Cooking Tips. in Tamil [ Cooking ]