காய்கறிகள்

இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா பாகற்காய்....?

வீடு | அனைத்து வகைகள் | வகை: காய்கறிகள்
ஒருபோதும் பச்சையாக சாப்பிடக்கூடாத காய்கறிகள் எவை தெரியுமா | Do you know which vegetables should never be eaten raw

ஒருபோதும் பச்சையாக சாப்பிடக்கூடாத காய்கறிகள் எவை தெரியுமா

Category: காய்கறிகள் - பலன்கள்

கேரட் போன்ற சில காய்கறிகள் பச்சையாக சாப்பிட ஏற்றவை. ஆனால், எல்லாக் காய்கறிகளையும் சமைக்காமல் சாப்பிடக் கூடாது. அவை ஆரோக்கியக் குறைபாடுகளை ஏற்படுத்தும். எந்தக் காய்கறிகளை பச்சையாக சாப்பிடக் கூடாது, அதற்கான காரணங்கள் என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கை ஒருபோதும் பச்சையாக சாப்பிடக் கூடாது. அதில் செலனைன் என்கிற ஒரு நச்சுப் பொருள் உள்ளது. அதை பச்சையாக சாப்பிடும்போது வாந்தி, மயக்கம் தலைவலி மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் வரும். இதை சமைத்து உண்ணும்போது செலனைன் நச்சு மறைந்து சாப்பிட ஏற்றதாக மென்மையாக மாறுகிறது. சேனைக்கிழங்கு: உருளைக்கிழங்கைப் போலவே சேனைக்கிழங்கிலும் செலனைன் உள்ளது. பச்சையாக சாப்பிடும்போது வாய் முழுவதும் அரிப்பும் செரிமான கோளாறும் ஏற்படும். கிட்னி பீன்ஸ்: ராஜ்மா எனப்படும் கிட்னி பீன்ஸை பச்சையாக சாப்பிடக்கூடாது. வாந்தி, மயக்கம் வயிற்றுப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்தும். முறையாக சமைத்து சாப்பிட்டால் மட்டுமே உடலுக்கு ஆரோக்கியம் தரும். புரோக்கோலி: புரோக்கோலியை சமைக்காமல் சாப்பிடும்போது தைராய்டு சம்பந்தமான பிரச்னைகள் மற்றும் செரிமானக் கோளாறுகள் வரும். எனவே சமைத்து உண்டால் மட்டுமே ஆரோக்கியம். முட்டைக்கோஸ்: முட்டைக்கோஸ் இலைகளை லேசாக வறுத்து சாலட் மற்றும் சாண்ட்விச்களில் பயன்படுத்தலாம். ஆனால் இதை பச்சையாக உண்ணக்கூடாது. ஏனெனில் இது மிகவும் கெடுதல் செய்யும் பாக்டீரியாவான ஈ கோலி போன்றவற்றை உருவாக்கும். இதை சமைத்து உண்ணும்போது ஈ கோலி போன்ற பாக்டீரியா தாக்க வாய்ப்பு இல்லை. பசலைக்கீரை: இதுவும் முட்டைக்கோஸ் போன்றே நிறைய சத்துக்கள் நிறைந்திருந்தாலும், பச்சையாக உண்டால் பாக்டீரியாவை உற்பத்தி செய்து வயிற்று வலி, செரிமானக் கோளாறு போன்றவற்றை உருவாக்கும். எனவே. சமைத்து உண்ணும்போது இவை அழிந்துவிடும். குடைமிளகாய்: இவற்றின் விதைகளில் நாடாப்புழுக்களின் முட்டைகள் இருக்கலாம். எனவே இவற்றை சமைத்து சாப்பிட வேண்டும். கத்தரிக்காய்: கத்தரிக்காயில் உள்ள சில சேர்மங்கள் பச்சையாக சாப்பிடும்போது கசப்பான உணர்வை தோற்றுவிக்கும். மேலும், இது செரிமான பிரச்னையையும் நரம்பு சார்ந்த சிக்கல்களையும் கொண்டு வரும். எனவே, இவற்றின் முறையாக சமைத்து சாப்பிடுவதே நல்லது. பாதி வேக்காட்டில் எடுக்கக் கூடாது. முழுமையாக சமைத்து உண்பதே நல்லது.

காய்கறிகள் | Vegetables

பாகற்காயில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துகள் உள்ளன.

: காய்கறிகள் - இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா பாகற்காய்....? [ காய்கறிகள் - பலன்கள் ] | : Vegetables - Cantaloupe is full of so many medicinal properties...? in Tamil [ Vegetables - Benefits ]

காய்கறிகள்

இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா பாகற்காய்....?

 

பாகற்காயில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை  செய்யும் பல சத்துகள் உள்ளன.

 

பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்று நோய் வருவதைத் தடுக்க முடியும் என ஒரு ஆய்வு கூறுகிறது.

 

உலகம் முழுவதும் மார்பக புற்றுநோய்க்கு பலியாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 

அவர்கள் பாகற்காயை தமது உணவில் சேர்த்து கொண்டால்  இவ்வியாதியில் இருந்து விடுபடலாம் .

 

பாகற்காய் கசக்கும் என்று தானே அதனை விலக்கி வைக்கிறார்கள் சிலர்.

 

அவர்கள் என்ன செய்ய வேண்டும் எனில் தேங்காய் உடைத்ததும்  வரும் இளநீரில் சிறிது நேரம் வெட்டிய பாகற்காய் துண்டுகளை ஊற விட வேண்டும்.

 

அல்லது உப்பு போட்டு ஊறவைக்க வேண்டும். அப்போது  அதில் உள்ள கைப்பு சுவை போய்விடும்.

 

நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது.

 

அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்.

 

பாகற்காய் இரைப்பை பிரச்னைகளுக்கு நல்ல மருந்து.

 

பாகற்காயை ஜூஸ் ஆக்கிக் குடிப்பது குடலில் உருவாகும் புழுக்கள், ஒட்டுண்ணிகளைக்  கொல்ல உதவும். ஒவ்வாமை, வீக்கம், கட்டிகளையும் பாகற்காய் போக்கும்.

 

பாகற்காயின் விதைகள் இதய நோய்களிலிருந்து நம்மைக் காக்கும்.

 

 தேவையற்ற கொழுப்புகளை எரித்து, இதய தமனி அடைப்பு ஏற்படுவதில் இருந்து காப்பாற்றும்.

 

புற்றுநோய், லூக்கீமியா, ரத்தசோகை போன்றவை வராமல் தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.

 

பாகற்காயின் சாற்றை தயிரில் கலந்து தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவிவிட வேண்டும்.

 

இதைத் தொடர்ந்து செய்தால், முடி பளபளப்பாக மாறும். இதன் சாற்றுடன் சீரகத்தை அரைத்து பூசிவர, பொடுகுப் பிரச்னைகள் நீங்கும்.

 

பாகற்காயின் சாற்றுடன் வாழைப்பழத்தை அரைத்து தலையில் தேய்த்தால், தலை அரிப்பு நீங்கும். பாகற்காய் சாற்றோடு கொஞ்சம் சர்க்கரை சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து தலையில் பூசிவர, முடிகொட்டுவது குறையும்.

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

: காய்கறிகள் - இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா பாகற்காய்....? [ காய்கறிகள் - பலன்கள் ] | : Vegetables - Cantaloupe is full of so many medicinal properties...? in Tamil [ Vegetables - Benefits ]

வீடு | அனைத்து வகைகள் | வகை: காய்கறிகள்