ஒருவன் தன் அம்மாவை எட்டி உதைத்து அடித்து விட்டான். அவனது குருநாதர் பெற்ற தாயை அடிக்க கூடாது , நீ அடித்துவிட்டாய் அது பெரிய பாவம், அந்த பாவம் போக காசிக்குசென்று ஒன்பது முழுக்கு முழுக்கு போட்டால் தான் பாவம் போகும் என்றார். காசிக்கு போக காசு இல்லையே என்று அவன் கூற, குரு பிச்சை எடுத்தாவது போ என்றார். ஒரு நாள் சாப்பாடு ஏதும் கிடைக்கவில்லை .பசி மிகுதியால் ஒரு வீட்டில் களைப்பாறுகையில் அந்த வீட்டின் மாடத்தில் கொட்டை பாக்கு இருந்தது அதை எடுத்து வாயில் போட்டு மென்றான். கொட்டை பாக்கு மெல்லும் சத்தத்தை கேட்டு அவ் வீட்டு பெண்மணி நான் தீட்டு ஆன நேரத்தில் வீட்டிற்குள் பாக்கை எடுத்து செல்ல கூடாது என்று மாடத்தில் வைத்து விட்டு சென்றேன் அதைபோய் சாப்பிடீர்களே என்றாள். அதை கேட்டு அவன் தலையில் அடித்து கொண்டு ஒரு பாவத்தை போக்க காசிக்கு செல்கையில் இன்னொரு பாவம் வந்து ஒட்டி கொண்டதே என்று கவலைப்பட்டான். இனி எங்கு சென்றாலும் எதுவும் சாப்பிடக்கூடாது என்று முடிவு செய்தான் . மீண்டும் காசிநோக்கி பயணத்தை தொடர்ந்தான். அன்று இரவு ஒரு வீட்டிற்கு சென்று தங்கினான். அவ்வீட்டு பெண்மணி என்ன சாப்பிடுவீர்கள் என்று கேட்க, பசியின் கொடுமையினால் அவன் தனது முடிவை மாற்றிக்கொண்டு எந்த பாலாகஇருந்தாலும்(பசும்பால், எருமைப்பால்) பரவாயில்லை, கொஞ்சம் பால் மட்டும் கொடுங்கள் என்று கேட்டான் . அவளும் பக்கத்துக்கு வீட்டில் கிண்ணம் கடன் வாங்கி கிண்ணத்தில் பாலை ஊற்றி அவனுக்கு கொடுத்தாள். அவனும் குடித்து இன்று எந்த பாவமும் செய்யவில்லை என்று நினைத்து நிம்மதியாக தூங்கினான். மறுநாள் அதிகாலை பக்கத்துக்கு வீட்டுக்காரன் எனது சவரக்கின்னத்தை கொடுங்கள், நான் பக்கத்துக்கு ஊருக்கு சவரம் செய்ய செல்ல வேண்டும் என்று கேட்டான். நான் பால் குடித்த கிண்ணம் சவரக்கின்னம் என்றால் ,நான் குடித்த பால் என்ன பால் என்று கேட்க ? நீங்கள் இருக்கும் வீடு வண்ணான் வீடு, அந்த வீட்டு கழுதை கன்று ஈர்ந்து உள்ளது, தாங்கள் குடித்த பால் கழுதைப்பால், அவர்கள் வீட்டில் பாத்திரம் இல்லாததால் என்னிடம் வந்து கிண்ணத்தை கேட்க நான் சவரம் செய்யும் கிண்ணத்தை கொடுத்தேன் என்று நாவிதன் கூறினான். இதை கேட்டவுடன் தலையில் அடித்துக்கொண்டு ஒரு பாவத்தை போக்கலாம் என்று காசிநோக்கி வந்தால் வரிசையாக பாவங்கள் வருகிறதே என்று காசி நோக்கி அழுது கொண்டே சென்றான் . காசி செல்லும் வழியில் உள்ள ஒரு ஊரில் ஒரு நாவிதனின் தந்தை இறந்து போனார். அந்த நாவிதன்அங்குள்ள பிராமணர்களிடம், நீங்கள் என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ எனக்கு தெரியாது எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை, எனது தந்தை உயிரோடு வரவேண்டும் என்றான். அங்குள்ள பிராமணர்களும் நாவிதனின் அறியாமையை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதற்க்காக சவத்தை கொளுத்தி சாம்பலை வைத்து யாகம் செய்தார்கள். பின்னர் இந்த சாம்பலை ஒரு பெரிய பானையில் போட்டு அவன் தலை மேல் வைத்து காசிக்கு சென்று அங்குள்ள ஆற்றில் தொபுகடீர் என்று போட்டு உடைக்க உன் தந்தை உயிரோடு வருவார் என்றனர். நாவிதனும் தலையில் பானையை வைத்துகொண்டு காசிக்கு வந்தான். அம்மாவை எட்டி உதைத்தவன் ஆற்றில் மூக்கை பிடித்து மூழ்கி கொண்டு இருந்தான் . அப்போது நாவிதன் அவன் தலையில் இருந்த பானையை ஆற்றில் போட்டான்.
காசிக்கு சென்றுதான் செய்த பாவத்தை நீக்க வேண்டுமா
? (சற்குரு சுவாமிகள் சொன்ன நீதிக்கதை)
ஒருவன்
தன் அம்மாவை எட்டி உதைத்து அடித்து விட்டான்.
அவனது குருநாதர் பெற்ற தாயை அடிக்க
கூடாது , நீ அடித்துவிட்டாய் அது பெரிய பாவம், அந்த பாவம் போக காசிக்குசென்று ஒன்பது முழுக்கு முழுக்கு போட்டால் தான் பாவம் போகும்
என்றார்.
காசிக்கு போக காசு இல்லையே என்று அவன் கூற, குரு பிச்சை எடுத்தாவது போ என்றார்.
ஒரு நாள் சாப்பாடு ஏதும் கிடைக்கவில்லை .பசி மிகுதியால்
ஒரு வீட்டில் களைப்பாறுகையில் அந்த வீட்டின் மாடத்தில் கொட்டை பாக்கு இருந்தது
அதை எடுத்து வாயில் போட்டு மென்றான்.
கொட்டை பாக்கு மெல்லும் சத்தத்தை கேட்டு அவ் வீட்டு
பெண்மணி நான் தீட்டு ஆன நேரத்தில்
வீட்டிற்குள் பாக்கை எடுத்து செல்ல கூடாது என்று மாடத்தில் வைத்து விட்டு சென்றேன்
அதைபோய் சாப்பிடீர்களே என்றாள்.
அதை கேட்டு அவன் தலையில் அடித்து கொண்டு ஒரு பாவத்தை போக்க காசிக்கு செல்கையில் இன்னொரு பாவம் வந்து ஒட்டி கொண்டதே என்று கவலைப்பட்டான்.
இனி எங்கு சென்றாலும் எதுவும் சாப்பிடக்கூடாது
என்று முடிவு செய்தான் .
மீண்டும் காசிநோக்கி பயணத்தை தொடர்ந்தான். அன்று இரவு ஒரு வீட்டிற்கு
சென்று தங்கினான். அவ்வீட்டு
பெண்மணி என்ன சாப்பிடுவீர்கள் என்று கேட்க, பசியின் கொடுமையினால் அவன் தனது முடிவை மாற்றிக்கொண்டு எந்த பாலாகஇருந்தாலும்(பசும்பால், எருமைப்பால்) பரவாயில்லை, கொஞ்சம் பால் மட்டும் கொடுங்கள் என்று கேட்டான்
.
அவளும் பக்கத்துக்கு வீட்டில் கிண்ணம் கடன் வாங்கி
கிண்ணத்தில் பாலை ஊற்றி
அவனுக்கு கொடுத்தாள்.
அவனும் குடித்து இன்று எந்த பாவமும் செய்யவில்லை
என்று நினைத்து நிம்மதியாக தூங்கினான்.
மறுநாள் அதிகாலை பக்கத்துக்கு வீட்டுக்காரன் எனது சவரக்கின்னத்தை
கொடுங்கள், நான் பக்கத்துக்கு ஊருக்கு சவரம் செய்ய செல்ல
வேண்டும் என்று கேட்டான்.
நான் பால் குடித்த கிண்ணம் சவரக்கின்னம் என்றால்
,நான் குடித்த பால் என்ன பால் என்று கேட்க
? நீங்கள் இருக்கும் வீடு வண்ணான் வீடு, அந்த வீட்டு கழுதை கன்று ஈர்ந்து உள்ளது, தாங்கள் குடித்த பால் கழுதைப்பால், அவர்கள் வீட்டில் பாத்திரம் இல்லாததால் என்னிடம்
வந்து கிண்ணத்தை கேட்க நான் சவரம் செய்யும் கிண்ணத்தை கொடுத்தேன் என்று நாவிதன் கூறினான்.
இதை கேட்டவுடன் தலையில் அடித்துக்கொண்டு ஒரு பாவத்தை
போக்கலாம் என்று காசிநோக்கி வந்தால் வரிசையாக பாவங்கள் வருகிறதே என்று காசி நோக்கி
அழுது கொண்டே சென்றான் .
காசி செல்லும் வழியில் உள்ள ஒரு ஊரில் ஒரு நாவிதனின்
தந்தை இறந்து போனார்.
அந்த நாவிதன்அங்குள்ள பிராமணர்களிடம், நீங்கள் என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ எனக்கு தெரியாது எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை, எனது தந்தை உயிரோடு வரவேண்டும் என்றான்.
அங்குள்ள பிராமணர்களும் நாவிதனின் அறியாமையை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதற்க்காக
சவத்தை கொளுத்தி சாம்பலை வைத்து யாகம் செய்தார்கள்.
பின்னர் இந்த சாம்பலை ஒரு பெரிய பானையில் போட்டு அவன் தலை மேல் வைத்து
காசிக்கு சென்று அங்குள்ள ஆற்றில் தொபுகடீர் என்று போட்டு உடைக்க உன் தந்தை உயிரோடு
வருவார் என்றனர்.
நாவிதனும்
தலையில் பானையை வைத்துகொண்டு காசிக்கு வந்தான்.
அம்மாவை எட்டி உதைத்தவன் ஆற்றில்
மூக்கை பிடித்து மூழ்கி கொண்டு இருந்தான் .
அப்போது நாவிதன் அவன் தலையில் இருந்த பானையை ஆற்றில்
போட்டான்.
பானை உடைந்து அம்மாவை எட்டி உதைத்தவனின் தலை தெரிந்தது.
ஐயர்களை வைத்து பூஜை செய்ததால் தனது அப்பா ஐய்யர் ஆகவே வந்துவிட்டார் என்று நாவிதன் நினைத்து
,அம்மாவை எட்டி உதைத்தவனை வலுக்கட்டாயமாக அவனது ஊருக்கு
கூட்டி சென்று நீ எனக்கு சிறு வயதில் ஊட்டி
விட்டாய் இப்போது நான் உனக்கு ஊட்டி விடுகிறேன் என்று மாமிச உணவுகளை வாயில் திணித்தான்.
விட்டால் போதும் என்று அம்மாவை எட்டி உதைத்தவன் ஊரை நோக்கி ஓட்டம் விட்டான்.
திரும்பும் வழியில் நம் சுவாமிகளை போல் ஒருவரை
பார்த்து நடந்த விசயங்களை கூறி பரிகாரம் கேட்டான்
அவரும் அம்மாவை எட்டி உதைத்தால் அதற்கு ஏன் காசிக்கு
செல்ல வேண்டும் எனவும், அம்மாவை நிற்க வைத்து மூன்று முறை சுற்று
சுற்றி காலில் விழுந்து தாயிடம் மன்னிப்பு கேட்டால் போதுமே என்று கூறினாராம்.
அம்மாவை எட்டி உதைத்தவன் அவ்வாறே செய்து
தாயிடம் மன்னிப்பு கேட்டு தனது பாவத்தை நீக்கி
கொண்டான்.
கதையின் கருத்து :
செய்த தவறுக்கு மனம் வருந்தி
மனதார மன்னிப்பு கேட்டால் போதுமானது,
காசிக்கு போனாலும் பாவம் போகாது .
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
நீதிக் கதைகள் : காசிக்கு சென்றுதான் செய்த பாவத்தை நீக்க வேண்டுமா (சற்குரு சுவாமிகள் சொன்ன நீதிக்கதை) - குறிப்புகள் [ ] | Justice stories : Do you want to get rid of the sins committed by going to Kashi? - Notes in Tamil [ ]