சட்டம்

F.I.R என்றால் என்ன ?

சீராய்வு மனு என்றால் என்ன?- சட்டம் தெளிவோம். | What is revision petition?- Let us clarify the law.

சீராய்வு மனு என்றால் என்ன?- சட்டம் தெளிவோம்.

Category: சட்டம்

கீழமை நீதிமன்றமொன்று தனது அதிகாரத்தைப் பயன்படுத்தாததாலோ, முறைகேடாக பயன்படுத்தியதாலோ விளைந்த குறையை போக்கும் வகையில், பரிகாரம் அளிப்பதற்கென வழக்கை மீண்டும் ஆய்வு செய்தல் “சீராய்வு” எனப்படும்.

ஈர்ப்பு விதியை வாழ்க்கையில் பயன்படுத்துவது எப்படி? | How to apply the law of attraction in life?

ஈர்ப்பு விதியை வாழ்க்கையில் பயன்படுத்துவது எப்படி?

Category: ஈர்ப்பு விதி

Law of Attraction (ஈர்ப்பு விதி) என்பது நாம் நினைப்பதும், நம்புவதும், உணர்வதும் நம் வாழ்க்கையில் ஈர்க்கப்படும் என்ற கோட்பாடு. இதை உலகளவில் பிரபலப்படுத்திய புத்தகம் The Secret (ஆசிரியர்: Rhonda Byrne).

பணம் ஈர்க்கும் ரகசியம்: ஈர்ப்பு விதியை (Law of Attraction) பயன்படுத்துவது எப்படி? - தமிழர்நலம் | The Secret to Attracting Wealth Using Law of Attraction: Master Your Money - TamilarNalam

பணம் ஈர்க்கும் ரகசியம்: ஈர்ப்பு விதியை (Law of Attraction) பயன்படுத்துவது எப்படி? - தமிழர்நலம்

Category: ஈர்ப்பு விதி

உங்கள் எண்ணங்களே உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. பிரபஞ்சத்திடம் இருந்து அபரிமிதமான செல்வத்தை ஈர்க்கும் 'ஈர்ப்பு விதியின்' (Law of Attraction) ரகசியங்களையும், அதைச் செயல்படுத்தும் முறைகளையும் இங்கே காண்போம்.

​ஏன் சில சம்பவங்கள் Coincidence போல நடக்கிறது? - அறிவியலும் ஆன்மீகமும் சொல்லும் ரகசியம்!

Category: ஈர்ப்பு விதி

நீங்கள் ஒருவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும்போதே அவரிடமிருந்து அழைப்பு வருகிறதா? இது வெறும் தற்செயலா அல்லது இதற்குப் பின்னால் ஏதேனும் ரகசியம் உள்ளதா? 'சிங்க்ரோனிசிட்டி' குறித்த ஆச்சரியமான உண்மைகளைத் தமிழர் நலம் வழங்குகிறது.

சட்டம் | Law

First Information Report – என்பது F.I.R-ன் விரிவாக்கம். தமிழில் ‘முதல் தகவல் அறிக்கை’. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸாரால் பதியப் படும் வழக்கு ஆவணம்.

: சட்டம் - F.I.R என்றால் என்ன ? [ சட்டம் ] | : Law - What is F.I.R? in Tamil [ Law ]

சட்டம்

F.I.R என்றால் என்ன ?

First Information Report – என்பது F.I.R-ன் விரிவாக்கம். தமிழில் ‘முதல் தகவல் அறிக்கை’. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸாரால் பதியப் படும் வழக்கு ஆவணம்.

 

“இந்திய தண்டனைச் சட்டத்தில், அனைத்து வகைக் குற்றங்களையும் இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம். அதாவது, புகார் அளித்ததும் குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்ய வேண்டிய குற்றங்கள், உடலில் ரத்தக் காயங்களை ஏற்படுத்தும் குற்றங்கள் மற்றும் சிறிய, பெரிய அளவிலான பண மோசடிகள் ஆகியவை உடனடி கைது நடவடிக்கை வேண்டுபவை. இவற்றுக்கு உடனடியாக F.I.R பதிய வேண்டும்.

 

உடலில் காயம் ஏற்படாத மன உளைச்சலை உண்டாக்கும் வகையிலான குற்றங்கள் இரண்டாவது பிரிவில் அடங்குபவை. இந்தக் குற்றங்களில் பாதிக்கப் பட்டோரின் புகாரை அந்த எல்லைக்கு உட் பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி, மாஜிஸ்ட்ரேட்டின் ஒப்புதல் பெற்ற பிறகுதான், F.I.R பதிவு செய்ய முடியும்.

 

சம்பவம் நடந்த இடத்தை நிர்வகிக்கும் காவல் நிலையத்தில்தான் புகார் அளிக்க வேண்டும். ஆனால், அவசர காலம் என்றால், அருகில் இருக்கும் எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம். பொதுவாக, F.I.R பதிவு செய்யும் நபர், முதல் நிலை காவலர் அந்தஸ்துக்கு (பக்கவாட்டில் இரு வெள்ளைக் கோடு இருக்கும் காக்கி யூனிஃபார்ம் அணிந்து இருக்கும் காவலர்கள்) குறையாத நபராக இருக்க வேண்டும்.

 

அவருக்கும் மேல் உள்ள அதிகாரிகளான டி.எஸ்.பி., எஸ்.பி., என எவரிடமும் புகாரைப் பதிவு செய்யலாம். பாதிக்கப்பட்டவர் வாய்மொழி வாக்குமூலமாகக்கூட புகார் அளிக்கலாம். ஆனால், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி அந்த வாக்குமூலத்தைப் புகாராக எழுதி, புகார்தாரரின் கையொப்பத்தையோ கை ரேகையையோ அதில் இடம் பெறச் செய்ய வேண்டும். பிறகு, குற்றம் நடந்து இருப்பதை உறுதிசெய்து, உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு, இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 511 பிரிவுகளில் புகார்தாரரின் பாதிப்புக்கு தக்க பிரிவுகளில் வழக்கினைப் பதிவுசெய்ய வேண்டும்.

 

பிறகு, தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அந்த F.I.R-ஐ நேரிலோ, தபாலிலோ அனுப்பிவிட வேண்டும். அந்த F.I.R நீதிபதிக்குக் கிடைத்துவிட்டதை உறுதிப் படுத்திக்கொண்டு, விசாரணை நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். இந்த நடைமுறைகளைச் சரிவர மேற்கொள்ளாத சமயத்தில்தான், வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது, ‘குற்றம் நடந்த நேரம், F.I.R பதிவு செய்யப்பட்ட நேரம், அது நீதிமன்றத்துக்குக் கிடைத்த நேரம்’ ஆகியவற்றில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டி, குற்றவாளிகள் தப்பித்துவிடுவார்கள்.

 

ஒரு F.I.R என்பது மொத்தம் ஆறு நகல்களைக் கொண்டது. காவல் அதிகாரி எழுதும் அசல் F.I.R அந்த நோட்டிலேயே இருக்கும். அதைக் கிழிக்கக் கூடாது. கார்பன் தாள் வைத்து எழுதப்படும் மீதி ஐந்து நகல்களைத்தான் புகார் தாரர், நீதிமன்றம் என விநியோகிக்க வேண்டும். புகார்தாரருக்கு F.I.R நகல் அளிக்க வேண்டியது அவசியம். அப்படித் தராமல் இருப்பதுகூட ஒரு குற்றம்.

 

💟💟💟💟💟💟💟


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

: சட்டம் - F.I.R என்றால் என்ன ? [ சட்டம் ] | : Law - What is F.I.R? in Tamil [ Law ]