பூக்களின் பயன்கள்

பூ சூடுங்கள் பெண்களே தினமும் பூ சூடுங்கள்

வீடு | அனைத்து வகைகள் | வகை: பூக்களின் பயன்கள்
பூக்களின் பயன்கள் | Uses of flowers

🌹 பெண்களே தினமும் பூ சூடுங்கள் என்ற இக்கட்டுரையில் பூக்களின் பயன்கள், பூக்களை சூடும் கால அளவு, பூக்களை சூடும் முறை, பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள் ஆகியவை பற்றி பார்க்கலாம். 🌹 உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூக்களின் வகைகள் உள்ளன. ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன. அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப் படுகின்றன. பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. 🌹பூக்களின் பயன்கள் 🌹 ரோஜாப்பூ – தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும். 🌹 மல்லிகைப்பூ – மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும். 🌹 செண்பகப்பூ – வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும். 🌹 பாதிரிப்பூ – காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும். 🌹 செம்பருத்திப் பூ – தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். 🌹 மகிழம் பூ – தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும். 🌹 வில்வப் பூ – சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும். 🌹 சித்தகத்திப் பூ – தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். 🌹தாழம் பூ – நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும். 🌹 தாமரைப் பூ – தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும். 🌹 கனகாம்பரம் பூ – தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும். 🌹தாழம் பூ, மகிழம் பூ, சந்தனப் பூ, ரோஜாப் பூ செண்பகப் பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.

: பூக்களின் பயன்கள் - பூ சூடுங்கள் பெண்களே தினமும் பூ சூடுங்கள் [ பூக்களின் பயன்கள் ] | : Uses of flowers - Keep warm ladies keep warm every day in Tamil [ Uses of flowers ]

🌹பூ சூடுங்கள்  பெண்களே தினமும் பூ சூடுங்கள்

 

🌹 பெண்களே தினமும் பூ சூடுங்கள் என்ற இக்கட்டுரையில் பூக்களின் பயன்கள், பூக்களை சூடும் கால அளவு, பூக்களை சூடும் முறை, பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள் ஆகியவை பற்றி பார்க்கலாம்.

 

🌹 உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூக்களின் வகைகள் உள்ளன. ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன. அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப் படுகின்றன. பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

 

🌹பூக்களின் பயன்கள்

 

🌹 ரோஜாப்பூ – தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

 

🌹 மல்லிகைப்பூ – மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.

 

🌹 செண்பகப்பூ – வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.

 

🌹 பாதிரிப்பூ – காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.

 

🌹 செம்பருத்திப் பூ – தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.

 

🌹 மகிழம் பூ – தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.

 

🌹 வில்வப் பூ – சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.

 

🌹 சித்தகத்திப் பூ – தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

 

🌹தாழம் பூ – நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.

 

🌹 தாமரைப் பூ – தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.

 

🌹 கனகாம்பரம் பூ – தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.

 

🌹தாழம் பூ, மகிழம் பூ, சந்தனப் பூ, ரோஜாப் பூ செண்பகப் பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.

 

🌹 பூக்களைச் சூடும் கால அளவு

 

🌹 முல்லைப்பூ – 18 மணி நேரம்

 

🌹 அல்லிப்பூ – 3 நாள்கள் வரை

 

🌹 தாழம்பூ – 5 நாள்கள் வரை

 

🌹 ரோஜாப்பூ – 2 நாள்கள் வரை

 

🌹 மல்லிகைப்பூ – அரை நாள் வரை

 

🌹 செண்பகப்பூ – 15 நாள் வரை

 

🌹 சந்தனப்பூ – 1 நாள் மட்டும்

 

🌹 மகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ – சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.

 

🌹 மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ – இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.

 

🌹 பூக்களைச் சூடும் முறை

 

🌹 பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும். உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது.

 

🌹 மணமுள்ள பூக்களை மணமில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது.

 

🌹 அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும். ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.

 

🌹 மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும்.

 

🌹 மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.

 

🌹முல்லைப் பூ, வில்வப் பூ ஆகியவற்றை குளித்த பின்பு சூடலாம்.

 

🌹 உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.

 

🌹பூ சூடுங்கள் நன்மை பெறுங்கள்

 

🌹 பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது. இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மன அமைதிக்கு உதவுகிறது.

 

🌹தலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவும். ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.

மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது. பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது.

 

🌹மனமாற்றத்துக்கு உதவுகிறது. மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

 

🌹 ஆகவேதான் பெண்களே தினமும் பூ சூடுங்கள் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

: பூக்களின் பயன்கள் - பூ சூடுங்கள் பெண்களே தினமும் பூ சூடுங்கள் [ பூக்களின் பயன்கள் ] | : Uses of flowers - Keep warm ladies keep warm every day in Tamil [ Uses of flowers ]

வீடு | அனைத்து வகைகள் | வகை: பூக்களின் பயன்கள்